Wednesday 9 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 4

புத்தன்

அக்கிரமங்கள் புத்தன் கண்ணுக்கு முழுதாய் தெரியவில்லை.......... அரைக்கண் மூடி இருப்பதால்...

#############################

கடாவெட்டி திருவிழா

கடாவெட்டி திருவிழா காளி கோவிலில் கடாவுக்கு அருளில்லை காளியிடம்....!!!

#############################


புள்ளி மான்

மான் என்ன குற்றம் செய்தது இயற்கையாகவே அதுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தபட்டிருக்கிறதே???


#############################


யார் முட்டாள்??


நானும் அண்ணாவும் சண்டை பிடித்தோம்... நீ முட்டாள் என்றான் அவன்.. இல்லடா நீ முட்டாள் என்றேன் நான்.. மாறி மாறி முட்டாள் என்று சண்டை போட்டு கொண்டோம்.. அப்பா வந்தார் . நான் ஒருத்தன் இருக்கிரன்ல..? 



படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...
..