Wednesday 18 January 2012

6-ம் வகுப்பு முதல் பேன்ட், சல்வார் கமீஸ் : இந்த ஆண்டில் 4 செட் இலவச சீருடை

81 லட்சம் பேருக்கு இலவச காலணி வழங்க ஜெ. உத்தரவு
அரசு பள்ளிகளில் 1 முதல் 8&ம் வகுப்பு வரை படிக்கும் 46.85 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டில் 4 செட் இலவச சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 6&ம் வகுப்புக்கு மேல் மாணவர்களுக்கு பேன்ட்டும், மாணவிகளுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படுகிறது. மேலும் 10&ம் வகுப்பு வரை படிக்கும் 81 லட்சம் பேருக்கு இலவச காலணி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

உறவினர்களுடன் கைதிகள் பேசலாம்

தமிழகத்தில் 13 மத்திய சிறைகளில் விரைவில் 54 பொது தொலைபேசிகள்
தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைகளில் 54 பொது தொலைபேசிகள் வைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
புழல், திருச்சி, மதுரை, கோவை, வேலூர், பாளை உள்பட 9 ஆண்கள் மத்திய சிறையும் புழல், வேலூர், திருச்சியில் பெண்கள் மத்திய சிறையும் உள்ளன. இந்த சிறைகளில் தூக்குதண்டனை கைதிகளும் ஆயுள் தண்டனை கைதிகளும் உள்ளனர். மேலும், பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறை அதிகாரிகளின் முன் அனுமதியுடன் உறவினர்களை பார்த்து பேசி வருகின்றனர்.

பெற்றோருக்காக மனம் மாறினார் : காதலனை கைவிட்டார்


மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிரேசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இன்ஜினியரிங் கல்லூரி மாணவி. அருகே உள்ள மேலக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் இன்ஜினியரிங் மாணவர். இவருக்கும் பள்ளியில் படிக்கும் போதே பழக்கம் இருந்துள்ளது.

35 கிலோ இலவச அரிசியுடன் மாதம் ரூ 400 உதவித்தொகை

யானைக்கால் நோயாளிகளுக்கு
பி.எச்.டி. இந்தியா நிறுவனத்தின் யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் சூசை மரியான் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
யானைக்கால் நோயாளிகளுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகை மற்றும் அரசு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்

ஆங்கில வினாத்தாளில் 50% ஒரு மார்க் கேள்வி
தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னையால், கடந்த ஆண்டு ஆகஸ்டில்தான் வகுப்புகளே துவங்கின. பாடப்புத்தகங்கள் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்தது.