களியக்காவிளை ஒற்றாமரம் சோதனை சாவடியில் தமிழக போக்குவரத்து துறையினர் வழங்கிய டூரிஸ்ட் அனுமதி ரசீதை கேரள போலீசார் கிழித்து எறிந்ததால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள அமைச்சர் தலையிட்டதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் டூரிஸ்ட் வாகனங்கள் இங்கு வரி செலுத்தி உரிய அனுமதி பெற்றுச் செல்வது வழக்கம்.