Sunday 13 May 2012

ஒருதலை பட்சத்தின் விளைவுகள் : எது பெண்ணுரிமை?

கணவரை பழிவாங்குவதற்காக முதல்வர் வீட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவில்லிபுத்தூர் கல்லூரி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
bomb-threat-to-templesமுதல்வர் ஜெயலலிதாவின் வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகியவற்றுக்கு கடந்த 9-ம் தேதி இரவு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் இ-மெயில் திருவில்லிபுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் மற்றும் திருவில்லிபுத்தூர் போலீசார் அக்கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஜூன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tamil-Nadu-SSLC-Exam-rsultsதமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடந்தது. அதில் 10,312 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். முதல் முறையாக இந்த ஆண்டு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி தேர்வு நடந்தது. இந்த முறையின் கீழ், 19,574 மாணவ, மாணவிகள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.

களியக்காவிளை : இரு மாநிலங்களின் உறவை கெடுக்கும் கேரளா போலீஸின் திமிர்

களியக்காவிளை ஒற்றாமரம் சோதனை சாவடியில் தமிழக போக்குவரத்து துறையினர் வழங்கிய டூரிஸ்ட் அனுமதி ரசீதை கேரள போலீசார் கிழித்து எறிந்ததால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள அமைச்சர் தலையிட்டதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் டூரிஸ்ட் வாகனங்கள் இங்கு வரி செலுத்தி உரிய அனுமதி பெற்றுச் செல்வது வழக்கம்.