Tuesday 24 April 2012

தொடர் மதிப்பீட்டுமுறை அறிமுகம் : வரும் கல்வியாண்டு (1 - 8 வகுப்பு வரை)

நாடகம், குவிஸ், உரை யாடல் என்று பன்முக திறமையாளர்களாக மாணவ மாணவியர் விளங்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு முழு மை யான தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.
மனப்பாட முறை கல்வி யில் இருந்து செயல்வழி கல்விக்கு தமிழக கல்வி முறை மாற்றம் பெற்ற நிலையில் மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணுதல் மற்றும் சிந்தனைதிறன்சார் மதிப்பீடு முறை தவிர்த்து முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு : முறைகேடுகள் களையப்படுமா?

பேரவையில் நேற்று உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
தகுதியான குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை 4,20,747 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
tamil_nadu_ration_cardதற்போதுள்ள 1,97,82,593 ரேஷன் கார்டுகளின் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி 1 கோடியே 93 லட்சத்து 3,509 கார்டுகள், அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் புதுப்பிக்கப்பட்டன. 85,159 பேர் ஆன்லைன் மூலமும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் 62,159 பேரும் தங்கள் ரேஷன் கார்டுகளை புதுப்பித்துள்ளனர். 23,000 கார்டுகளின் பதிவுகள் பரிசீலனையில் உள்ளது. இன்னும் 4 லட்சத்து 16,925 கார்டுகள் புதுப்பிக்கப்படவில்லை.