தமிழகம்



வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்
அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக ஒரு பெண் பரிதவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி காயத்ரி (24). நிறைமாத கர்ப்பிணியான மேலும் படிக்க
*************************************

அணு மின் நிலையத்தை மூடக் கோரி 39 கிராமத்தினர் பைக் ஊர்வலம்
நெல்லை மாவட்டம், கூடங் குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 4 மாதங் களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் அணு மின் நிலையம் திணறி வருகிறது. இதனால் மின் உற்பத்தி தள்ளிப் போவதோடு மேலும் படிக்க
**************************************
ஓட்டல்கள், கடைகளை போலீசார் சூறையாடினர் : லஞ்சம் கொடுக்காததால் ஆத்திரம்
மாமூல் கொடுக்காததால் திண்டி வனத்தில் ஓட்டல் மற்றும் கடைகளை போலீசார் சூறையாடினர். இதை கண் டித்து கடை உரிமையாளர் கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எடைக்குளம் கூட்டுரோடு புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற் பட்ட கடைகள் சாலையின் இருபுறமும் உள்ளன. இதில் டீக்கடை, ஓட்டல், கூல் டிரிங்ஸ் உள்ளிட்ட கடை கள் அடங்கும்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜீப்பில் வந்த மேலும் படிக்க
*********************************

சென்னை : 24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி எண்
சென்னையில் 24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கலாம். குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.
வடக்கு மண்டலம் 90031 30104, மேலும் படிக்க
*************************************

செல்போனால் பிரிந்த தம்பதியை ஓன்று சேர்த்தது செல்போன் சிக்னல்
கணவன், மனைவி பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, அவர்கள் மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் தேவையன் (30). இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. தேவையன் ஓராண்டுக்கு முன் வேலைக்காக வெளிநாடு மேலும் படிக்க
**********************************

சாகும் வரை உண்ணாவிரதம் : மீனவர் சங்கங்கள் அறிவிப்பு
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை 19ம் தேதிக்குள் மீட்காவிட்டால், ராமேஸ்வரத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமான விசைப்படகு மீனவர்கள், கடந்தமாதம் 28ம் தேதி கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் கிளாட்வின் என்பவரது படகில் இருந்த மீனவர்கள் மேலும் படிக்க
*********************************
இடுக்கியில் 144 தடை : முற்றுகிறது முல்லை பெரியாறு பிரச்னை
முல்லை பெரியாறு சர்ச்சையில் தமிழக & கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால், இடுக்கியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் கேரளா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேனியில் பீதியுடன் தங்கியுள்ளனர்.
பதில் தாக்குதலால் தமிழகத்திலும் பதற்றம் பரவுகிறது 
முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழக தென் மாவட்டங்களிலும், கேரளாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள இளைஞர் காங்கிரஸ், மாநில பாஜவினர் பெரியாறு அணையை இடிக்க முயன்றது மேலும் படிக்க
**************************************

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால், எல்.கே.ஜி. மாணவன் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான்.
சென்னை அடுத்த கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், தனியார் சாப்ட்வேர் கம்பெனி மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் களது மகன் ஹரீஸ் சாய்நாதன். மூன்றரை வயது சிறுவன். இவன் பல்லாவரம், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.
கிருஷ்ணகுமார், தனது மகனை நேற்று காரில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றார். ஹரீஸ், காலை 10.15 மணிக்கு மேலும் படிக்க
*************************************

தமிழக ஜீப்களை மறித்து அடாவடி வசூல் : பெண்களிடம் அத்து மீறல் : கம்பம் மெட்டு அருகே பதற்றம்
தமிழகத்திலிருந்து கேரள தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஜீப்புகளை கம்பம் மெட்டில் இன்று காலை வழிமறித்து, மிரட்டி கேரள கும்பல் பணம் பறிக்கும் அடிவாடியில் இறங்கியுள்ளது. மேலும் ஜீப்பில் இருந்த பெண்களை கீழே இழுத்து போட்டு வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. நில அதிர்வுகளால் அணை பலமிழந்து விட்டதாகவும் பேரழிவு ஏற்பட போகிறது என்றும் மேலும் படிக்க
****************************************

டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை : தமிழக அரசு புறக்கணிப்பு
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு நாளை ஏற்பாடு செய்திருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறி வருகிறது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, மேலும் படிக்க
**********************************

அமோகமாய் நடக்கும் அதிர்ச்சி பிசினஸ் : சென்னையில் மட்டும் 50 ஏஜென்ட்கள் 
அயல்நாடுகளுக்கு ஆள் கடத்தும் பிசினஸ் அமோகமாக நடக்கிறது சென்னையில் & இப்படியொரு தகவல், அதிலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.
அபின், ஹெராயின், ஆயுதம் என்று வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியல் கொஞ்சம் பெருசு. அதிலே புதிதாக இடம் பிடித்திருப்பது ஆள் கடத்தல். அப்படியென்றால்? பணத்துக்காக ஆளை கடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பணம் வாங்கிக் கொண்டு மேலும் படிக்க
***********************************

4 மகளிர் குழு தலைவிகள் கைது : வங்கியில் ரூ.8 கோடி மோசடி
(3.11.11) விழுப்புரம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, தொழில் கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், மேலும் படிக்க
************************************

மத்திய அரசு ஏற்பாடு
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசின் நீர்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. அணைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட சிறு நிலஅதிர்வுகளை காரணம்காட்டி, அணை பலவீனம் அடைந்துவிட்டதாகவும், மேலும் படிக்க
***********************************************

அணு உலை எதிர்ப்பு பேரணி
அணு உலைக்கு எதிர்ப்பு தெரி வித்து கோவையில் இருந்து 60 பேர் பைக்கில் பேரணி யாக கூடங்குளம் புறப்பட்டு சென்றனர்.
கோவையில் பல்வேறு அமைப்புகள் ஒன்றுசேர்ந்து அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற புதிய இயக்கம் துவக்கியுள்ளனர். இந்த இயக்கம் சார்பில், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக மேலும் படிக்க


**********************

கூடங்குளம் விவகாரம் டிச.10ல் சென்னையில் உண்ணாவிரதம்
கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்பதை வலியுறுத்தி சென்னையில் வரும் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து இயக்கத்தின் அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோதங்கராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழர் நலன் சார்ந்த எந்த ஒரு பிரச்னையிலும் மத்திய அரசு மேலும் படிக்க

****************************

சென்னையை தகர்க்க சதி
தீவிரவாதிகள் பற்றி வீடியோ ஆதாரம் சிக்கியதால் போலீசார் அதிர்ச்சி
பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினா பகுதிகளை வேவு பார்த்ததோடு நாசவேலையில் ஈடுபட தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதற்கான வீடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை அருகே உள்ள தாம்பரம் சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், கடந்த 27&ம் தேதி காலை சென்னை மாநகர போலீஸ் உதவியுடன் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டில் இருந்த 6 மாணவர்கள் உள்பட மேலும் படிக்க

**********************************


இன பெருக்க காலம் துவங்கியதால் தின்பண்டம் கொடுக்க தடை :
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோவை மாவட்டம், வால்பாறை வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் காணப்படும் இந்த குரங்குகளின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆகும். கர்ப்ப காலம் 170 நாட்கள்.
ஒரு கூட்டத்தில் 14 முதல் 80 குரங்குகள் வரை காணப்படும். இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் இருக்கும். பல குரங்குகள் குட்டிகளுடன் உயரமான மரங்களுக்கிடை மேலும் படிக்க

***************************


கடலோர காவல்படை மனு : மீனவர்கள் கொந்தளிப்பு 
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின், தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை தாக்குவது தொடர் கதையாகியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் குறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை, கடலோர காவல் படை மேலும் படிக்க