Wednesday 11 January 2012

அஞ்சுகிராமம் அருகே விளக்கு தவறி விழுந்து பயங்கர தீ குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

அஞ்சுகிராமம் அடுத்த மகாராஜபுரம் அருகே உள்ளது ஹரிதாசபுரம் கிராமம். இங்குள்ள புதுக்காலனி பகுதியில் சுமார் 25 குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் அனை வரும் கூலி தொழிலாளர்கள். காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் இரு மகன்கள் செல்வன், பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன் தினம் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றனர். மகன்கள் கோயிலுக்கு புறப்பட்டு சென்ற பிறகு செல்லத் துரை மனைவி செல்ல ராணி தனது வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தார். விளக்கு அணை யாமல் இருக்க அதிக எண் ணெய் ஊற்றப்பட்டு இருந்தது.