Saturday 21 April 2012

ஆபாச நடனம் : ஐகோர்ட் உத்தரவு : பாலிவுட் நடிகைகள் மீது நடவடிக்கை

ஐபிஎல் (IPL) : கேட்டி பெர்ரி, பாலிவுட் நடிகர்கள் மீது ஆபாச நடன வழக்கு
மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப். 3-ல் சென்னையில் துவங்கியது. அன்று இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, பாப் பாடகி கேட்டி பெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாசமாக நடனம் ஆடினர். நடனநிகழ்ச்சிகளின் போது பல போலீஸ் அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர்.
இதை டிவி, பத்திரிகைகளில் பார்த்து பொதுமக்கள், மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு போலீசார் தடை விதிக்கின்றனர். ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனத்தை போலீசார் தடுக்காதது சட்டவிரோதம். இதற்காக இந்திய நடிகர்கள், பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

இத்தாலி அரசு சமரசம் : 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நஷ்டஈடு

italy_ship_released
இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நஷ்டஈடு வழங்க இத்தாலி அரசு முன் வந்துள்ளது.

கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த படகு மீது இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குமரி, கேரளாவை சேர்ந்த 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், நஷ்டஈடு கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அகில இந்திய நுழைவுத்தேர்வை தமிழில் நடத்தக்கோரி வழக்கு

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வை தமிழில் நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: