Thursday 12 January 2012

அமெரிக்க தூதரக ஆபீசில் தமிழ், இந்தி, மலையாளதில் விசாரணை

இந்திய, அமெரிக்க தொழில் வர்த்தக சபை சார்பில் அமெரிக்க விசா பெறுவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி நிக்கோலஸ் மேன்ரிங் பேசிய தாவது:
உலகில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் சென்னையில் உள்ள தூதரகம் 10&வது மிகப்பெரிய தூதரகமாகும். கடந்த ஆண்டு மட்டும் இங்கு 1.75 லட்சம் விசா வழங்கப்பட்டுள்ளது.

பூனையை புலி என கூறி ரூ 10 லட்சத்துக்கு பேரம்

உடம்பில் வரிகள் கொண்ட காட்டு பூனையை, புலி என கூறி ரூ.10 லட்சத்துக்கு விற்க முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடி வனப்பகுதியில் சிலர் புலிக்குட்டியை விற்க முயற்சிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வனத்துறையினர் அங்கு சென்றனர். சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரிடம் நைசாக பேச்சு கொடுத்தபோது, தங்களிடம் புலிக்குட்டி இருப்பதாகவும்,

1,000 பள்ளிகளுக்கு நோட்டீஸ் : நிர்ணயிக்கப்பட்டகுறைந்தபட்ச இடவசதி

மாநிலம் முழுவதும் குறைந்தபட்ச இடவசதி இல்லாத 1,000 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளை தொடங்கி நடத்த அரசு குறைந்தபட்ச நில அளவை நிர்ணயித்து உள்ளது. மாநகராட்சி பகுதியில் 33 சென்ட், நகராட்சி பகுதியில் 1 ஏக்கர், பேரூராட்சி பகுதியில் 2 ஏக்கர், ஊராட்சி பகுதியில் 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3 மாதத்தில் உற்பத்தி தொடக்கம்

இந்திய அணுமின் கழக இயக்குநர் தகவல்
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி கிடைத்தவுடன் 3 மாதத்தில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று இந்திய அணுமின் கழகத்தின் இயக்குநர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

பணம் தின்னும் ஆம்னி பஸ்கள் : அரசு கண்காணிக்குமா???

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் அதிக வசூல் வேட்டை தொடங்கியிருக்கிறது. 
தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் மற்றும் கோயில் திருவிழா காலங்களில், சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பிறப்பு & இறப்பு சான்றிதழ் இணைய தளத்தில் பெறலாம்

சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் பிறப்பு & இறப்பு சான்றிதழ்களை இணைய தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

ரயில் மீது குண்டுவீச்சு, பஸ் போக்குவரத்து முடங்கியது : தென் மாவட்டங்களில் பதற்றம்

பசுபதிபாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக, தென் மாவட்டங்களில் பதற்றம் காணப்படுகிறது. ரயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பஸ்கள் அடியோடு முடக்கப்பட்டன.
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். அன்றிரவு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பூசாரிபட்டி பிரிவு அருகே இரவு 11 மணிக்கு வத்தலகுண்டு நோக்கி சென்ற அரசு பஸ் மீது 20 பேர் கும்பல் கல்வீசி தாக்கியது. இதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.