Tuesday 5 June 2012

மத்திய அரசு கூடுதல் வரி திட்டத்தால் டீசல் கார் விலை உயரும்?

டீசல் கார் மீதான உற்பத்தி வரியை அதிகரிப்பது குறித்து நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. வரி உயர்வு பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய தலைவர் எஸ்.கே.கோயல் நேற்று தெரிவித்தார்.
india-diesel-car-price-to-go-upடீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. அப்படியிருந்தும் டீசலின் விலையில் லிட்டருக்கு ரூ 15.35 வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே, டீசல் கார்களின் விலை அதிகரித்தால், அதன் விற்பனை குறையும். அதன் மூலம், டீசல் பயன்பாடு குறையும் என மத்திய அரசு கருதுகிறது.

டெங்குவை தொடர்ந்து பரவுகிறது சிக்குன் குனியா!

tirunelveli-nagercoil-mosquito-feverதமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் முதலில் பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை திருச்சி, கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களுக்கு டெங்கு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2,000 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.