Thursday 16 February 2012

கள்ளக்காதலியுடன் சுற்றிய மருமகன் : மாமனார், மாமியார் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன், வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண் ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வாலிபருக்கு சொந்தமான காரில் இவர்கள் உல்லாசமாக உலா வர தொடங்கினர்.

குமரியில் இரவு 11 மணிக்கு மேல் சுற்றி திரிபவர்களிடம் தீவிர விசாரணை


குமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும். இரவு 11 மணிக்கு மேல் சுற்றி திரிபவர்களிடம் தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே பள்ளியில் / மாதத்தில் 2வது சம்பவம் : மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது

உடுமலை பள்ளி விடுதியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனது தற்கொலைக்கு பொருளாதார ஆசிரியரே காரணம் என அதில் எழுதப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆபாச படம் எதிரொலி : தமிழக பேரவைக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை : உஷாரையா!!! உஷார்!!!


கர்நாடக சட்டப்பேரவைக்குள் அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட உள்ளது. அவர்கள் அவசரமாக தொலைபேசி பேச பேரவை லாபியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

தமிழகத்தை பசுமையாக்க மாபெரும் மரம் நடும் திட்டம்

மாவட்டத்துக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற அரசின் வாசகங்கள் பலர் வாயில் ஒலித்தாலும், இப்போது மர நட நேரமோ, இடமோ இல்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. மக்கள் தொகை பெருக்கம், நகர்புறங்களின் வேகமான வளர்ச்சி, உறைவிட தேவை ஆகிய காரணங்கள் வானளாவிய மரங்களுக்கு வேட்டு வைத்துள்ளது.

கப்பலில் இருந்து துப்பாக்கி சூடு : 2 மீனவர்கள் பலி : ஒருவர் இரையுமன்துறையை சேர்ந்தவர்

கேரள கடல் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலில் இருந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் உள்பட 2 பேர் பலியாகினர்.