Sunday 11 December 2011

உரம் பதுக்கலை தடுக்க புதிய திட்டம் : ஜனவரி 1ம் தேதி முதல் அமல்

எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்
மாநிலங்களில் தட்டுபாடின்றி உரம் கிடைப்பதற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் போதிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
ஆனாலும் பல இடங்களில் உரம் பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது, அதிகவிலைக்கு விற்பது போன்றவை நடக்கிறது. தற்போது விவசாயிகளுக்கு எளிதில் உரம் கிடைப்பதை உறுதி செய்யவும், கிடங்கு வாரியாக உரம் இருப்பு நிலவரத்தை கண்காணிக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு உரவிற்பனையகங்கள் உள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு தேவை யான உரங்கள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் புதிய உரவினியோக திட்டத்தின்படி அரசு கூட்டுறவு உரவிற்பனையகம் மற்றும் தனியார் உர விற்பனை யகங்களில் செல்போன் மூலம் உரம் கண்காணிப்பு திட்டம்(மொபைல் பேஸ்டு பெர்டிலைசர் மானிட்டரிங் சிஸ்டம்) வரும் 2012 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது. இதன் மூலம் உர விற்பனையகங்களில் உள்ள இருப்புகள் மற்றும் அந்த உரவிற்பனை நிறுவனங்கள் வாங்கும் உரங்களின் அளவு ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இதற்காக மத்திய அரசு சார்பில் மாவட்ட வாரியாக உரவிற்பனை யாளர்களுக்கு கடந்த மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாவட்ட தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் ஜாகிர் நவாஷ் கூறியதாவது: தனியார் துறைகளுடன் சேர்ந்து அரசு இந்த திட்டத்தை செயல் படுத்த உள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். உதாரணமாக, தூத்துக்குடியில் உள்ள உரஆலையில் இருந்து கோவையை சேர்ந்த ஒரு மொத்த உரவிற்பனை யாள ருக்கு 10 டன் உரம் விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி உர ஆலையை சேர்ந்தவர் உரத்தை, மொத்த வியா பாரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அதுகுறித்து எம்எப்எம்எஸ் மூலம் முன்கூட்டியே தகவல் அனுப்புவார். தகவல் கிடைத்தவுடன் வியாபாரி பதில் தகவல் அனுப்புவார். சில்லரை விற்பனையாளரிடம் உரம் விற்பனை செய்யும் போதும் இதே போல் தகவல் பரிமாறப்படும். இந்த தகவல் பரிமாற்றம் முழுவதும் வேளாண் துறை அலுவலகத்தில் உள்ள எம்எப்எம்எஸ் இணை யதளத்தில் பதிவாகிவிடும். இதன் மூலம் உரவிற்பனையாளர்கள் உரத்தை பதுக்க முடியாது.
இவ்வாறு ஜாகிர் நவாஷ் கூறினார்.

"ஓட்டு கேட்டு வந்தபோது திரும்பிக்கூட பார்க்கல" - தொழிலாளர்கள் அதிர்ச்சி

தொழிற்சங்க மாநில மாநாட்டில் அமைச்சர்கள் பேசுகையில், "ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்க வேண்டும்"; "ஓட்டு கேட்டு வந்தபோது திரும்பியே பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டதால், தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் ஐக்கிய சங்கம் சார்பில், மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:
தொழிலாளர் மாநாடு என்றதுமே கலந்து கொள்ளலாமா என்று தயங்கினேன். ஏனெனில், என்னென்ன கேட்பீர்கள் என்பது தெரியும். உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன் என்றோ; இந்த கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்றோ, இங்கேயே என்னால் கூற முடியாது. மேலும், சில விஷயங்களை மேடையில் பேசவும் முடியாது. எதையும் எதிர்மறையாக செய்யமாட்டோம் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை அல்ல. மின்வாரியத்தின் நிதி நிலை சீரடையும்போது, நிதியாதாரங்கள் சரியாகும்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
"ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்க வேண்டும்" என்று பழமொழி சொல்வார்கள். அதுபோல நிதிநிலை சரியாகும் வரை பொறுமை காக்க வேண்டும். "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி" என்று சொல்வார்கள்.
"இங்கே தாமதிக்கப்படுவது வழங்குவதற்காகத்தான்" என்று புரிந்து கொள்ள வேண்டும். மின் உற்பத்தியில் தமிழ்நாடு மிகை மாநிலமாக திகழ தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
எனது பேச்சு தொழிலாளர்களுக்கு திருப்தியளித்ததா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு எனது பேச்சு ஏமாற்றமே. பின்னால் நடக்கும் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது. இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
முன்னதாக, சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் பேசுகையில், சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வுகளை தாமதிக்காமல் வழங்க வேண்டும் போன்ற 9 கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
ஆனால், இந்த கோரிக்கைகள் எதற்குமே அமைச்சர் பதிலளிக்காமல், கோரிக்கைகள் குறித்து எதுவுமே தெரிவிக்க இயலாது என்று கூறியதோடு, அவசரமாக திருச்சிக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு, பேசியதுமே விழா அரங்கிலிருந்து புறப்பட்டும் சென்று விட்டார்.
"கோரிக்கைகளுக்கு ஏதேனும் விடை கிடைக்காதா" என்று ஆவலோடு வந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். மேலும், மின்துறை அமைச்சர்தான் இப்படி பேசிவிட்டு சென்று விட்டார்.
தொழிலாளர் துறை அமைச்சராவது நமக்கு ஆறுதலாக பேசுவாரா என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் பேசுகையில், “மின்வாரிய தொழிலாளர்களை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், தொழிலாளர்கள்தான் எங்களை புரிந்து கொள்ளவில்லை. எனது தொகுதியான தூத்துக்குடியில் அனல் மின்நிலைய குடியிருப்பில் ஓட்டு கேட்டு சென்றபோது, அங்குள்ள தொழிலாளர்கள் எங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் மீது உங்களுக்கு பற்று இல்லை. உங்கள் மீது எங்களுக்கு பற்று உண்டு” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே தொழிலாளர்கள் சென்றனர். இரண்டு அமைச்சர்கள் வந்தும் ஒரு தீர்வும் இல்லை யே என்ற நிலையில், மாநாட்டு அரங்கில் இருந்து தொழிலாளர்கள் வேதனையுடன் வெளி யேறினர்.                  (Dinakaran)

சாப்பாடு கொடுக்காமல் தந்தையை அடித்து கொடுமை : நானும் எனது மனைவியும் கஷ்டப்பட்டு மகனை படிக்க வைத்தோம்.

சாப்பாட்டுக்கு பணம் கொடுக் காமல், ஒரு ஏக்கர் நிலத்தை எழுதி தருமாறு தந்தையை அடித்து துன்புறுத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.
சேலம் வீராணம் பக்க முள்ள அடிமலைப்புதுரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (70). இவரது மனைவி ஆண்டி யம்மாள். இவர்களின் மகன் அண்ணாமலை (48). இவர் காரைக்காலில் உள்ள எண்ணெய் எரிவாயு கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தந்தை மாரியப்பன் சேலம் மாவட்ட எஸ்பி முத்து சாமியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்ப தாவது:
எனது மகனை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத் தேன். தற்போது நல்ல வேலையில் இருக்கிறார். ஆனால் நானும் எனது மனைவியும் சாப்பிட ஒரு பைசா கூட தருவதில்லை. இதனால் நாங்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறோம். ஆனால், அந்த நிலத்தையும் எழுதி கொடுக்குமாறு அடித்து துன்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் மாரியப்பன் குறிப்பிட்டி ருந்தார்.
இதில் விசாரணை நடத்த, இரும்பாலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமாருக்கு எஸ்பி உத்தர விட்டார். இதையடுத்து, மகன் அண்ணாமலையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
* நானும் எனது மனைவியும் கஷ்டப்பட்டு மகனை படிக்க வைத்தோம்.
* எங்களது மகன் தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்.
* எங்கள் சாப்பாட்டுக்கு ஒரு பைசா கூட தருவதில்லை.
* தள்ளாத வயதிலும் எங்களது ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கிறோம்.
* இப்போது, அந்த நிலத்தையும் எழுதிக் கொடுக்குமாறு அடித்து துன்புறுத்துகிறார்.
* அதனால், எங்கள் மகன் மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்கிறார் தந்தை.

உஷார்!!! பரவுது எலி காய்ச்சல் : தடுக்க என்ன வழி?

சமீபத்தில் சென்னை யில் பெய்த கன மழையால் நகரின் எல்லா சாலைகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது. மழை நின்று 10 நாட்கள் ஆன பிறகும் பல சாலைகளில் இன்னும் மழைநீர் வடிந்தபாடில்லை.
பலத்த மழையால் கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் எங்கும் துர்நாற்றம்... இது போதாதென்று மாநகராட்சியினர் சரிவர குப்பை களை அள்ளாததால் அவைகளும் மழை நீருடன் கை கோர்த்து கொண்டது. இதனால், பொதுமக்களுக்கு தோல் அரிப்பு, சேற்றுப் புண் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
விளைவு... காய்ச்சல்... வயிற்று வலி... வயிற்று போக்கு என பல உடல் உபாதைகள் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரிசுகள் வரை மருத்துவமனையில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். கடந்த 15 நாளாக நகரில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் ஹவுஸ் புல். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்கள் கூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நகரில் தற்போது எலிக் காய்ச்சல் பரவி வருகிறது. கிட்டத்திட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு இந்த காய்ச்சல் வந்துள்ளது. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

[  தடுக்க என்ன வழி?
* வெளியே சென்று வந்ததும் கை கால்களை சோப்பு அல்லது கிருமி நாசின் கொண்டு கழுவவும்.
** மழை காலங்களில் வெளியே செல்லும் போது கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது அவசியம்.
*** காய்ச்சிய தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
**** வெளியே திறந்த வெளியில் விற்கும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.]
எலிக்காய்சல் எப்படி வருகிறது. அதற்கான அறிகுறிகள் என்ன... இது வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து பொது நல மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணனை சந்தித்தோம். அவர் கூறியதாவது:
எலிக்காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. நோய்வாய்ப்பட்ட எலிகள்... தேங்கி யிருக்கும் சாக்கடை நீர் மற்றும் மழைநீரில் சிறுநீர்கழிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து விடுகிறது.
இதுபோன்று, எலியின் பாக்டீரியாக்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும். சாலையில் நடக்கும் மனிதர்களின் கால்களின் விரல்கள் வழியாக ரத்தத்தில் மிக எளிதாக கலந்து விடும். உடலுக்கு செல்லும் பாக்டீரியாக்கள் முதலில் கல்லீரலுக்கு சென்று, அதன் செயல்திறனை செயல் இழக்கச் செய்கிறது.
எலிக்காய்ச்சல், சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் மட்டுமே பரவுவதில்லை. அந்த தண்ணீரில் நடப்பதாலும் அல்லது செல்லப்பிராணிகள் மூலமாகவும் பரவும். காரணம் இது ஒரு தொற்று நோய். செல்லப் பிராணிகளின் உடலில் பாக்டீரியா கிருமிகள் இருந்தாலும் அவற்றை நாம் வருடுவதாலும் இந்த நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நோய் தாக்கினால் முதலில் காய்ச்சல், பிறகு வாந்தி, உடல் வலி, மூட்டு வலி ஏற்படும். காய்ச்சல் ஒரு வாரத்துக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்வது அவசியம். இல்லை என்றால் இந்த நோய் மஞ்சள் காமாலை நோய் போல் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும். இந்த நோயை பொறுத்தவரை இதற்கு என தனி தடுப்பூசி கிடையாது. காய்ச்சல் குறையவும், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.   (Dinakaran)

முல்லை பெரியாறு அணை : உண்மை நிலை என்ன???




https://www.facebook.com/photo.php?fbid=324005447626781&set=a.282333918460601.93674.100000519861970&type=1&theater

(Downloading the picture from above) will help to read the report in full and clear.)