Tuesday 14 February 2012

ரேபீஸ் நோய் : இந்தியாவில் ஆண்டுக்கு 20,000 பேர் பலி : குழந்தைகள் அதிகம்

இந்தியாவில், நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய்க்கு ஆண்டு தோறும் 20 ஆயிரம் பேர் பலியாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

திருவட்டார் : கணவன் வெளிநாட்டில் : இளம்பெண் தற்கொலை


திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் கடுகனூர்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்(35). இவர் பல வருடமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தக்கலையை அடுத்துள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த ஜாஸ் மின்(31) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இரயுமன்துறை : எம்.பி.ஏ மாணவர் பைக் விபத்தில் பலி


நித்திரவிளை அருகே உள்ள இரயுமன்துறை குருசடி வளாகத்தை சேர்ந்தவர் கிபின்(24). சென்னையில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு கிபின், அதே பகுதியை சேர்ந்த கிளின்டன் (20) என்பவருடன் தூத்தூரில் இருந்து இரயுமன்துறைக்கு பைக்கில் புறப்பட்டார்.

10-ம் வகுப்பு மாதிரி வினா விடை சிடி பள்ளிகளுக்கு சப்ளை


பத்தாம் வகுப்பு மாணவர்களின் வசதிக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்து வழங்கி வந்த மாதிரி வினாவிடை புத்தகம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இதையடுத்து மாதிரி வினாவிடை அடங்கிய சிடியை அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை வினியோகித்து வருகிறது.

ரூ 25 லட்சம் கோடி கருப்பு பணம் : சிபிஐ பகிரங்க அறிவிப்பு

இந்தியர்களின் கருப்பு பணம் சுமார் 25 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். இவ்வளவு கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பது குறித்து அரசு தரப்பில் வெளிப்படையாக அறிவிப்பது இதுவே முதல் முறை.