Thursday 15 December 2011

விடாது கருப்பு : வடிவேலுவை துரத்துகிறது

வடிவேலு மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி பெண் மனு
மதுரை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் வேலுச்சாமி, நடிகர் ராஜ்கிரணிடம் முதலில் பணியாற்றினார். அப்போது நடிகர் வடிவேலுவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், வடிவேலுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. வடிவேலுவிடம் மேனேஜராக வேலைக்கு சேர்ந்த என் கணவர், 2009ல் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை செய்யாமல் அவரது உடலை அடக்கம் செய்து விட்டனர். இதில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். வடிவேலு மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். உள்துறை செயலர், டிஜிபிக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் பாண்டீஸ்வரி கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்து, உள்துறை செயலர், டிஜிபி 1 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் மணிகண்டன், அரசு சார்பில் வக்கீல் ராஜேஸ்வரன் ஆஜரானார்.  (tamil murasu)

Illegal alcohol kills 126 in West Bengal : Dead likely to increase


More than 100 people have been killed by contaminated homemade alcoholic spirits in the Indian state of West Bengal.
Most of the dead are poor manual labourers, rickshaw pullers and hawkers who drank the "country liquor" at a series of makeshift bars all supplied by the same illicit distillery in the town of Diamond Harbour.
Scores more are being treated in hospital and the death toll is expected to continue rising.
"I had purchased two half-litre pouches for 10 rupees while returning home last evening and drank the liquor before dinner. After midnight I felt a pain in my throat. Then I started vomiting," Julfikar Saddar, 35, told the Calcutta Telegraph newspaper from his hospital bed.
This kind of poisoning is frequent in India where local police and inspectors regularly take bribes to turn a blind eye to the production and sale of illicit alcohol, also known as desi daroo. Most cases go unreported.
In 2009, 130 people were killed by illegally produced alcohol in a similar incident in the western state of Gujarat.
Mamata Banerjee, the chief minister of West Bengal, told local media that "consumption of illicit liquor is a social disease" that "has to be eradicated".
Four people are under arrest and 10 illegal shops selling alcohol have been demolished in Diamond Harbour, officials have said.
Angry locals are reported to have destroyed the distillery blamed for the tragedy.
Local residents said one shop was opposite a police station but had been trading openly.
A litre of "chpeti", the local spirit, costs 10 rupees. A manual labourer in India usually earns around 150 rupees for a day's work. The drink is often sold door-to-door by salesmen on bicycles.
Alcoholism is a significant problem in both rural and urban areas.
The state of West Bengal is one of the poorest in India and suffers from some of the deepest corruption.
This week a fire in a hospital killed 90 people in the state capital of Kolkata. It is believed to have started in a carpark under an annex that was being used as a store in breach of local regulations.

உரிமையை விட்டுத்தர மாட்டோம் : முல்லை பெரியாறு அணை விவகாரம்

சட்டசபையில் ஜெ. கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை கூடியது. முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்காலத்தில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வேண்டும். அதற்காக அணையை பலப்படுத்துவதற்கு கேரளா தடையாக இருக்கக் கூடாது என்று தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழக தொழிலாளர்கள், அவர்களது வாகனங்கள் மீது தாக்குதல் நடந்தது. அதற்கு பதிலடியாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. இதற்கிடையே, கேரள சட்டசபையில் கடந்த 9&ம் தேதி முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் போராட்டம் வலுத்தது. தேனி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
கேரளாவை போல தமிழக அரசும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, முல்லை பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று, தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 15&ம் தேதி நடக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, தமிழக சட்டசபையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 10 மணியில் இருந்தே அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்த வண்ணம் இருந்தனர். முதல்வர் ஜெயலலிதா, 10.55க்கு சபைக்குள் வந்தார். அதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள், மு.க.ஸ்டாலின் தலைமையில் வந்தனர். முதல்வருக்கு ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு முதல்வரும் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தேமுதிக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்தனர். பின்னர் விஜயகாந்தும் அவைக்கு வந்தார்.
சரியாக 11 மணிக்கு அவை தொடங்கியது. சபாநாயகர் ஜெயக்குமார், திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 9 பேருக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் வாசித்தார். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் சொ.கருப்பசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் படித்தார். முதல்வர் உள்பட அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 15 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 11.20 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அவை முன்னவரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பேரவை விதி 35-ஐ தளர்த்தி, அரசு அலுவல்களை இன்று எடுத்துக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் நிலை குறித்த சிறப்பு தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். ‘முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் வகையில், நீர்ப்பாசன சட்டத்தில் கேரள அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் அணையில் 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு தடையாக இருக்கக் கூடாது’ என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து பேசினர். முடிவில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடவுள்களின் சொத்து கணக்கு : ஏழுமலையானுக்கு அடுத்து காளஹஸ்தி சிவன்தான் பணக்காரர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சில கோயில்களின் உண்மையான சொத்து கணக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. 
இது குறித்து நீதிமன்றத்திலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களை தவிர்த்து, மற்ற அனைத்து கோயில்களின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, வருமானத்தின் அடிப்படையில் கோயில்கள் வகைப்படுத்தப்பட்டன. ஆண்டுக்கு ரூ. 25 லட்சத்துக்கும் மேல் வருமானம் உளள 7 கோயில்கள் 6&எ எனவும், அதற்கு குறைவான வருமானம் உள்ள 33 கோயில்களை 6&பி எனவும், இதை விட குறைவான வருமானமுள்ள கோயில்களை 6&சி எனவும், 33 மடங்கள் 6&டி எனவும் வகை பிரிக்கப்பட்டுள்ளன. 3,073 கோயில்களில் 161 மட்டுமே இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மற்றவை தர்மகர்த்தாக்கள், பரம்பரை தர்ம கர்த்தாக்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த கோயில்களில் மொத்தம் 103.321 கிலோ தங்க நகைகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 26.50 கோடி. மேலும், 15,068 கிலோ 330 கிராம் வெள்ளி உள்ளது. இதன் மதிப்பு ரூ. 8.50 கோடி.
இதில், திருப்பதி ஏழுமலையானுக்கு அடுத்தபடியாக சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி சிவன் கோயிலுக்குதான் அதிக சொத்துகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்த கோயிலுக்கு 30 கிலோ தங்கமும், 13,809 கிலோ வெள்ளியும் உள்ளன.

தந்தை & மகன் கைது : 3 கோடி திருடி சொந்தமாக கல்வி அறக்கட்டளை

வேலை செய்த அறக்கட்டளையில்
திருப்பூர் மாவட் டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசா�ரதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத் தார். அதில், அய்யப்பன்தாங்கலில் கல்வி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தேன். இங்கு காந்தி என்ற முத்துகிருஷ்ணன்(55), அவரது மகன் விஜயகுமார் (33) ஆகியோர் வேலை செய்து வந்தனர். 
இந்நிலையில் அறக்கட்டளை வரவு& செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ 3,40,88,517 மோசடி செய்து திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து காந்தி, விஜயகுமாரிடம் விசாரித்தால் முறை யான பதில் அளிக்க வில்லை. மேற்கொண்டு விசாரித்ததில் என்னுடைய கல்வி அறக்கட்டளை பணத்தை மோசடி செய்து திருடி காந்தி தன்னுடைய பெயரில் பல்வேறு இடங்களில் கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி விட்டார். இதற்கு அவரது மகன் விஜயகுமார் உடந்தையாக உள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் ஸ்ரீதரன் தலைமையில் எஸ்ஐக்கள் காளிதாஸ், கோபாலகிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த காந்தி, விஜயகுமாரை நேற்று போலீசார் அய்யப்பன் தாங்கல் வழியாக வெளியூர் தப்ப முயன்றபோது கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் சைதாப்பேட்டை குற்றவியல் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பஞ்சாப் விநோதம் : மைனஸ் மதிப்பெண் பெற்ற மாணவர் வெற்றி

பஞ்சாப் நீதித்துறைக்கு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் மைனஸ் 10 மதிப்பெண்கள் பெற்ற பழங்குடியின மாணவர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநில நீதித்துறையில் காலியாக உள்ள துணை நீதித்துறை அதிகாரி பதவிக்காக, பஞ்சாப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது.
இந்த தேர்தல் முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள பிரதான தேர்வை எழுத, கட் & ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டவர், விளையாட்டு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என 13 பிரிவுகளின் கீழ் 979 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவுக்கான கட்&ஆஃப் மதிப்பெண், அதிகபட்சமாக 315 எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பழங்குடியினருக்கான பிரிவில் 6 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் மஞ்ஜிந்தர் கவுர் என்பவர் அதிகபட்சமாக 285 கட்&ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆனால், தஜிந்தர் சிங் என்ற மாணவர், முதல்நிலை தேர்தவில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி, மைனஸ் 10 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். இவர், 23 கேள்விகளுக்கு சரியான பதிலும், 102 கேள்விகளுக்கு தவறான பதிலும் எழுதியுள்ளார்.
இருப்பினும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராக மட்டுமின்றி, முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்ற சிறப்பு பிரிவின் கீழும் இவர் ஒருவர் மட்டுமே வருகிறார். எனவே, வேறுவழியின்றி பிரதான தேர்வுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது யாரும் கிடைக்கவில்லை.

"ரூ.200 கட்டினால் 50 ஆயிரம் கடன்" : பொதுமக்கள் சிறைவைத்த அறக்கட்டளை நிர்வாகிகள்

திருவனந்தபுரம் படூர்குழி பகுதியை மையமாக கொண்டு அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், தங்களிடம் ரூ.200 கட்டினால் 3 மாதத்தில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் 18 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த குழுவினர் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை அணுகியுள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன் மார்த்தாண்டம் அடுத்த மருதங்கோடு ஊராட்சியில் ஒரு மண்டபத்தை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இந்த குழுவை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் லோன் தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள மக்களை ஊராட்சி மன்ற மண்டபத்துக்கு வரவழைத்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் ரூ.200 முதல் 300 வரை வசூல் செய்துள்ளனர். இதற்கு ரசீதும் வழங்கியுள்ளனர். ஆனால் இந்த ரசீதில் உள்ள பதிவு எண்கள் பலவிதமாக இருந்தது. போன் எண்ணும் இல்லை.
இதுகுறித்து மக்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் 4 பேரையும் மண்டபத்திலேயே சிறைபிடித்தனர்.
தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் அவர்கள் வந்த காரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது தாங்கள் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாக கூறினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பொங்கலுக்கு தென்மாவட்டங்களுக்கு முன்பதிவு தொடங்கியது : 700 சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் 700 சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளன. தென் மாவட்டங்களுக்கு செல் லும் பஸ்களுக்கான முன் பதிவு தொடங்கிவிட்டது.
அடுத்த மாதம் 15ம் தேதி ஞாயிற்று கிழமை பொங்கல் திருநாள் தொடங்குகிறது. தொடர்ந்து 17ம் தேதி வரை விடுமுறை இருக்கிறது. இதனால் ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் ரயிலில் டிக்கெட் கிடைக்காததால் ஏராள மான மக்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களே நம்பி யுள்ளனர்.அரசு விரைவு போக்கு வரத்து கழகம் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, புதுச்சேரி உள் ளிட்ட பல்வேறு இடங்க ளு க்கு 50 ஏசி பஸ்கள் உட்பட மொத்தம் 956 பஸ்களை இயக்குகின்றன. இந்நிலையில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் தென்மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பஸ்களை இயக்கு கிறது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் 500 சிறப்பு பஸ்களையும் இயக் குகிறது. இதுதவிர கோவை, நெல்லை, கும்ப கோணம் போக்குவரத்து கழகங்கள் 100 சிறப்பு பஸ் களையும் இயக்கவுள்ளது.
இதுகுறித்து போக்கு வரத்து கழகங்களின் அதிகாரிகள் கூறியதாவது:
மக்களின் தேவைக்கு ஏற்ப பொங்கல் பண்டி கைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். ஒரு மாதத் திற்கு முன்பு நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நீண்ட தூர பயணம் செய்யும் பஸ் களில் முன்பதிவு செய்யப் படும். அந்த வகையில் தென்மாவட் டங்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. தீபாவளி ஒரு நாள் என்பதால் மக்கள் கூட்டம் ஒரே நாளில் குவிந்துவிடும். ஆனால் பொங்கல் 4 நாட்கள் என்பதால் மக்கள் கூட்டம் படிப்படியாக வரும். எனவே மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் வரிசையாக இயக்கப்படும்.
தென்மாவட்டங் களுக்கு செல்லும் பயணிகள் சென்னையில் கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றி யூர், தி.நகர், பிராட்வே, தாம் பரம் ஆகிய பஸ்நிலையங் களில் முன்பதிவு செய்ய லாம். இதுதவிர மாவட் டங்கள் தோறும் 35க்கும் மேற்பட்ட முன்பதிவு மைய ங்கள் உள்ளன. மேலும் விரைவு போக்குவரத்து கழகத்தின் இணையதளத் தில் உள்ள இ&டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய லாம். மற்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு முன்பதிவு தேவையில்லை. மக்கள் கூட்டம் அதிகமாக வரும்போது டோக்கன் கொடுக்கப்படும். டோக்கன் கட்டணம் ரூ.5, ஏசி பஸ் களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

School 'asks' 840 students to buy iPads

Podar International School, Santacruz wants to introduce apple iPad2 for students of Std VI to XII; some parents feel that the Rs 40,000 expense is unnecessary.


"We moved from blackboards to interactive boards and from there to laptops and now, it is the iPad2."  -” Vandana Lulla, Director, Podar International School.
The government may be patting itself on the back for creating the world's cheapest, Android-based tablet Aakash at not more than Rs 3,000, but the homegrown gizmo is clearly not the Apple of this posh city school's eye. 

The middle and high school education at Podar International School in Santacruz seems ready to integrate Steve Jobs' legacy in daily learning. In a recent circular dated December 9, the school management informed parents that it has decided to introduce iPad2 in classrooms from the next academic year. While some parents welcomed the move, others feel the fancy tablet is not feasible for children.

Some parents have their reservations about the concept. K Mahesh (name changed), a parent of a pupil at Podar school, said, "I was a student once and I know what education is. If you change the syllabus, that is digestible. But if you change the system with some weird logic, it is problematic. I want my kid to follow the existing method of education that millions in this country are following, and setting a benchmark for others. I am not against the use of iPad. But I do no find it feasible for my kid."

Lulla said, "After observing how gadget-savvy students have become and how they are familiar with iPads, I took the initiative to introduce the iPad2. It will help students to retain the content. They can download as many textbooks as they want. Further, a research by a laptop manufacturing company concluded that more use of technology has improved the performance of students in subjects like Biology, Chemistry, History, and Earth Science."

Expert says


Jayant Jain, president of Forum For Fairness in Education and All India Federation of Parent Teacher Association, said, "If the school is so keen to bring in technology, parents should be given a choice to buy any company's tablet. But nowhere did the circular mention this. Nor did it say that parents who do not wish to buy their child an iPad2 could learn from interactive boards. This implies that it is mandatory for all. Also, the parent will have to bear the cost if the child drops and damages the expensive gadget. They are in a learning process, so why can't they be given cheaper tablets which can be updated by the school." 

Numbers
On an average, there are 30 students in one class in Podar and each class has four divisions. As such, there are approximately 840 students in the school from grade VI to XII.

விரட்டப்பட்ட கேரள தமிழர்கள் எல்லையில் குவிவதால் பதற்றம் :

தேவாரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
கேரளா வில் தமிழர்களுக்கு சொந்தமான ஏலத்தோட்டங்களை வெட்டி அழிப்பதில் மலையாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மாநிலம், உடுப்பஞ்சோலை, பாறைத்தோடு, மணத்தோடு, சதுரங்கப்பாறை உள்ளிட்ட இடங்களில் அதிகமான ஏக்கர் பரப்பில் ஏலத்தோட்டங்கள் உள்ளன. இதனை கடந்த இரண்டு தினங்களாக மலையாளிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இரவுநேரங்களில் புகுந்துவிடும் கும்பல் இங்குள்ள ஏலச்செடிகளை பறித்து எறிகின்றனர்.
தேவாரம் சதுரங்கப்பாறை அருகே தமிழருக்கு சொந்தமான காற்றாலை மின்சாரம் நான்கை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு கடைகளில் பொருட்களை வழங்கக்கூடாது. பஸ்களில் ஏற்றக்கூடாது என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் கேரள டாக்டர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே தமிழர்களை ஓட, ஓட விரட்டிஅடித்து வருகின்றனர்.
மேலும் பெண்களை மனிதாபிமானமின்றி நடத்தி வருகின்றனர். கேரள மாநில போலீசாரும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் அக்கறை காட்ட மறுத்துள்ளனர். இதனால் இடுக்கி மாவட்டத்தில் இருந்து ஆயிரம் குடும்பங்கள் வரை சாரை, சாரையாக சாக்கலூத்து மெட்டு, போடி மெட்டு வழியாக நடைபயணமாக வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் தேவாரம், கோம்பை, போடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று போராட்டம் சற்று தணிந்திருந்த நிலையில், விரட்டி அடிக்கப்பட்ட தமிழர்கள் வந்து குவிவதால், தமிழக&கேரள எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை குமுளி எல்லைப்பகுதியில் குவிந்திருந்த போலீசார், தற்போது போடி, தேவாரம், கோம்பை பகுதிக்கு விரைந்துள்ளனர். பதற்றத்தை தணிக்கும் வகையில் திண்டுக்கல் டிஐஜி சஞ்சய்மாத்தூர் தலைமையில் 500 போலீசார் தேவாரம் பகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இதற்கிடையில் கோம்பையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேனி கலெக்டர் பேச்சு:
தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பை அளித்திட நடவடிக்கை எடுக்குமாறு தேனிமாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, இடுக்கி மாவட்ட கலெக்டருடன் பேசினார். இதுகுறித்து தேனி கலெக்டர் பழனிச்சாமி கூறுகையில், �இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தமாவட்டத்தில் எந்த நிலைமை என்பதை உடனடியாக இடுக்கி மாவட்ட கலெக்டருடன் பேசி உள்ளேன். அங்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டியுள்ளேன். இங்கு வருபவர்களை அழைத்துச்செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தமிழர்களின் சொத்துக்களை பாதுகாத்திட போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தி உள்ளேன். வீடுகள் இல்லாதவர்களை தங்க வைத்திட தேவாரம் பகுதியில் சம்பந்தப்பட்ட தாசில்தார்களை அழைத்து தேவையான வசதிகள் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்� என்றார்.
குழந்தையுடன் வந்த பெண்:
சதுரங்கப்பாறை மலைப்பாதை வழியே தமிழகத்தை சேர்ந்த பெண், 3 மாத கைக்குழந்தையுடன் கேரளாவில் இருந்து தேவாரம் வந்தார். அங்கு தமிழர் குடும்பங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தமிழர்கள் தாக்கப்படுவதாகவும், தமிழகத்தில் தனக்கு வீடு கிடையாது. நான் எங்கு செல்வது என்று தெரியவில்லை என்று கூறி கதறி அழுதார்.