Thursday 15 December 2011

பொங்கலுக்கு தென்மாவட்டங்களுக்கு முன்பதிவு தொடங்கியது : 700 சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் 700 சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளன. தென் மாவட்டங்களுக்கு செல் லும் பஸ்களுக்கான முன் பதிவு தொடங்கிவிட்டது.
அடுத்த மாதம் 15ம் தேதி ஞாயிற்று கிழமை பொங்கல் திருநாள் தொடங்குகிறது. தொடர்ந்து 17ம் தேதி வரை விடுமுறை இருக்கிறது. இதனால் ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் ரயிலில் டிக்கெட் கிடைக்காததால் ஏராள மான மக்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களே நம்பி யுள்ளனர்.அரசு விரைவு போக்கு வரத்து கழகம் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, புதுச்சேரி உள் ளிட்ட பல்வேறு இடங்க ளு க்கு 50 ஏசி பஸ்கள் உட்பட மொத்தம் 956 பஸ்களை இயக்குகின்றன. இந்நிலையில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் தென்மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பஸ்களை இயக்கு கிறது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் 500 சிறப்பு பஸ்களையும் இயக் குகிறது. இதுதவிர கோவை, நெல்லை, கும்ப கோணம் போக்குவரத்து கழகங்கள் 100 சிறப்பு பஸ் களையும் இயக்கவுள்ளது.
இதுகுறித்து போக்கு வரத்து கழகங்களின் அதிகாரிகள் கூறியதாவது:
மக்களின் தேவைக்கு ஏற்ப பொங்கல் பண்டி கைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். ஒரு மாதத் திற்கு முன்பு நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நீண்ட தூர பயணம் செய்யும் பஸ் களில் முன்பதிவு செய்யப் படும். அந்த வகையில் தென்மாவட் டங்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. தீபாவளி ஒரு நாள் என்பதால் மக்கள் கூட்டம் ஒரே நாளில் குவிந்துவிடும். ஆனால் பொங்கல் 4 நாட்கள் என்பதால் மக்கள் கூட்டம் படிப்படியாக வரும். எனவே மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் வரிசையாக இயக்கப்படும்.
தென்மாவட்டங் களுக்கு செல்லும் பயணிகள் சென்னையில் கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றி யூர், தி.நகர், பிராட்வே, தாம் பரம் ஆகிய பஸ்நிலையங் களில் முன்பதிவு செய்ய லாம். இதுதவிர மாவட் டங்கள் தோறும் 35க்கும் மேற்பட்ட முன்பதிவு மைய ங்கள் உள்ளன. மேலும் விரைவு போக்குவரத்து கழகத்தின் இணையதளத் தில் உள்ள இ&டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய லாம். மற்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு முன்பதிவு தேவையில்லை. மக்கள் கூட்டம் அதிகமாக வரும்போது டோக்கன் கொடுக்கப்படும். டோக்கன் கட்டணம் ரூ.5, ஏசி பஸ் களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment