
தேனி மாவட்டம் சின்னமனூரில் ஸ்ரீகிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக இருந்தவர் பால்ராஜ். கடந்த 2006ம் ஆண்டு மாணவர்களிடம் ரூ 7 லட்சத்து 41,501 ரூபாயை கூடுதல் கட்டணமாக வசூலித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் புகார் செய்தனர்.
மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் பால்ராஜ் உரிய பதில் அளிக்காததோடு முன்னுக்குப்பின் முரணாக கூறினார். மீண்டும் விசாரணைக்கு அழைத்தபோது ஆஜராகவில்லை. இதற்கிடையே புதிய நிர்வாகிகள் குழு பள்ளியின் பொறுப் பை ஏற்றது.