Tuesday 20 December 2011

நாசரேத் : ஒரு ‘நவீன’ பிச்சைக்காரர் : ரூ.2000 கோல்ட் வாட்ச் : விலை உயர்ந்த செல்போனுடன்

நாசரேத் பகுதியில் தினமும் ஒரு வாலிபர் வருவோர் போவோரிடம் பிச்சை எடுப்பதால் பொதுமக்களுக்கு தொந்தரவு அதிகமாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட வாலிபர் ஒருவர் தர்மம் எடுப்பதையே தனது முழுநேர வேலையாகக் கொண்டுள்ளார். நாசரேத் அருகே உள்ள உடையார்குளத்தைச்சேர்ந்த 35 வயது மதிக்க தக்க அந்த வாலிபர் தினமும் காலை 8 மணிக்கு பஸ் ஏறி நாசரேத் வந்துவிடுகிறார்.
வரும்போது சிறிய சூட்கேஸ் ஒன்றையும் எடுத்து வருகிறார். நாசரேத் சந்தி பஜாரில் இறங்கும் அவர் தனது பணியை தொடங்கிவிடுகிறார். ரோட்டில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம், ரூ.5 கொடு...ரூ.10 கொடு என்று கேட்பார். யாரிடமும் அவர் தர்மம் போடுங்க சாமி என்று கேட்க மாட்டார்.
2 மணி நேரம் அங்கு நின்று கொண்டு பிச்சை எடுக்கும் அவர் அதன்பிறகு தனது எல்கையை மாற்றி அங்குள்ள சிஎஸ்ஐ தேவா லயம் பகுதிக்கு செல்கிறார். அங்குபிச்சை எடுக்கும் அவர் அங் குள்ள ஓட்டல்களில் மதிய உணவை சாப்பிட்டபின் நேராக நாசரேத் பஸ்நிலையம் பகுதிக்கு வருகிறார்.
இரவு 8 மணி ஆனதும் தனது பணியை முடித்துக்கொண்டு பஸ் ஏறி ஊர் சென்று விடுகிறார். மீண்டும் மறுநாள் தனது பணியை வழக்கம்போல் தொடங்கி விடுகிறார். இப்படி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. பல ஆண்டுகளாக அவரது தர்மம் எடுக்கும் பணி தொடர்கிறது. அவர் தற்போது கையில் ரூ.2ஆயிரம் மதிப்புள்ள கோல்ட் வாட்ச் கட்டியுள் ளார். இதுபோல் விலை உயர்ந்த செல்போனும் வைத்துள்ளார். இவரது தினசரி வருமானம் ரூ.300ஐ தாண்டும் என்கிறார்கள்.
பணம் கேட்பது மட்டுமின்றி சிலரிடம் மீன் குழம்பு சாப்பாடு வாங்கி கொடு, மட்டன் சாப்பாடு வாங்கிக்கொடு என்று நச்சரிக்கிறார். இவரது தொல்லை தாங்காமல் பொதுமக்கள் மாற்று வழியாக செல்கிறார்கள்.
‘உனது பெயர் என்ன‘ என்று கேட்டால், முருகன் என்கிறார். உடம்புதான் நன்றாக இருக்கிறதே ஏன் இப்படி பிச்சை எடுக்கிறாய்? என்று யாராவது கேட்டால், அவரிடம் இருந்து வரும் பதில் புன்னகை மட்டும்தான். 
நமது நாடு எல்லாவிதத்திலும் அபரிதமான முன்னேற்ற பாதை யில் சென்று கொண்டிருந்தபோதிலும். பிச்சைக்காரர்கள் மட்டும் காலம் காலமாக அப்படித்தான் உள்ளனர். அரசு கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் இறங்கினாலும் பிச்சைக்காரர்களை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை. காரணம் அதில் கிடைக் கும் அதிகப்படியான வருமானம்தான். நாள் முழுக்க ரூ.200, ரூ.300 என்று பார்க்கும் இவர் எப்படி திருந்துவார்கள்? பொதுமக்கள் பிச்சை போடுவதை நிறுத்தினால் மட்டுமே இதை தடுக்கமுடியும்.        (தமிழ் முரசு)

Jyoti Amge : 62.8 cm Tall makes Guinness World Record (உலகின் மிக குள்ளமான பெண்)

Jyoti Amge - a high school student from Nagpur, Maharashtra has been recognized as world's shortest woman by Guinness World Records recently. She is 18, and is dreaming of make it in Bollywood one day!

"Jyoti Amge stood just 62.8 centimeters (24.7 inches) tall — shorter than the average 2-year-old". "I have put Nagpur on the world map. Now everyone will know where it is," said Amge, 

Jyoti dreams of working in a film one day ' alongside Salman Khan.
"Jyoti encourages us all to look beyond mere size and to just celebrate our differences," Guinness adjudicator Rob Molloy said.
"Last year, she passed her Class X exams with distinction and is now studying higher secondary at a junior college"
 "The title of shortest woman in history continues to be held by Pauline Musters, who lived in the Netherlands from 1876 to 1895 and stood 61 centimeters (24 inches) tall"
 "Like any other woman her age, Jyoti loves being fashionable. "I love ornaments," she said shyly, "and I like partying with friends"
"I feel grateful to be this size. It's bringing name and fame to my family," Jyoti said. "After all, if I weren't small and had not achieved these world records, I might never have been able to visit Japan and Europe and many other wonderful countries"

A Man's Life became cheaper than a Loan of Rs.40

Inability to repay a loan of a mere Rs 40 cost a man his life at Odisha's Sundargarh district, police said today.
Kailash Munda, a brick kiln labourer was allegedly beaten to death at Bhogopali village, about 140 km from here, by his niece yesterday after a fight over the return of the money he had taken from her.
Police later arrested the dead man's niece and her husband,both of them also brick kiln workers.

Team Anna Hazare threatened with HIV Needles : FIR Lodged

Last week the police received a letter that threatened to inject Anna Hazare and his supporters with needles contaminated with the HIV virus. The letter said if Anna remained adamant on his Lokpal agitation, they will be attacked with the deadly virus.



The police, now beginning to take the threat seriously, have registered an FIR and begun looking for those who sent the letter. The letter states that "a needle team, which has prepared 500 HIV positive needles, would inject the virus in atleast 1,000 people at the demonstration".

This anonymous letter was sent to DCP Central office on December 9.

Delhi Police has registered an FIR under sections 505 (2) - statements conducting to public mischief, 506 (criminal intimidation) and 507 (criminal intimidation by anonymous communication) of Indian Penal Code at Daryaganj police station last week and investigations have begun. The police suspect that "this letter seems to have been posted to the DCP's office from Delhi itself".

"We are trying to ascertain the identity of the sender though, after lot of discussions, we have also come to the conclusion that it might be a prank letter sent by some criminals. But since it is related to Anna Hazare, we don't want to take any chances as there is already a threat to his life and to the large number of people who congregate at his demonstrations," said a police officer.

The letter had stated that there are around 50 "volunteers in this needle group who are trained and they would use the needles cleverly on at least 1,000 people".  (Times of India)

1 வாழைப்பழம் = 4 ஆப்பிள் : இளமை, ஆரோக்கியம் நிச்சயம்

"தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்" என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம்.
இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

கூடங்குளம் : தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் : வி.எஸ்.அச்சுதானந்தன்

தமிழக மக்களின் அச்சம் நீங்கும் வரை கூடங்குளம் அணுமின்நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளம் அணுமின்நிலையத்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என தமிழக மக்கள் கருதுகின்றனர். தமிழக மக்களின் இந்த நியாயமான அச்சத்தை மத்திய அரசு புரிந்து கொண்டு அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அணுமின்நிலைய விஷயத்தில் தமிழக மக்களின் அச்சம் நீங்கும்வரை அதன் செயல்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும்.
அணுமின்நிலையம் தொடர்பாக தமிழக மக்கள் தங்களது அச்சத்தையும், பீதியையும் ஆட்சியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இது தவிர தமிழக அரசும் மத்திய அரசுக்கு எழுத்து மூலமும் தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வைத்து இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அணுமின்நிலையம் தொடர்பான தமிழக மக்களின் போராட்டத்தையும், அச்சத்தையும் ஏளனம் செய்யும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நமது பிரதமரின் இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் மதிப்பளிக்காத வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசின் செய்லபாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மார்த்தாண்டம் : 2-ம் திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

மனைவிக்கு தெரியாமல் 2- ம் திருமணம்
குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மீனச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். இவருக்கும் நித்திரவிளை அடுத்த பாத்திமாபுரத்தை சேர்ந்த கமலாட்சி க்கும் 30.3.1992ல் திருமணம் நடந்தது. கமலாட்சி திருவனந்தபுரம் வேளாண் மை இயக்குனர் அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார். நிரந்தரமான வேலை இல்லாததால், திருமணம் முடிந்து சில மாதங்களில் கணவருக்கு பண உதவி செய்து வெளிநாட்டு வேலைக்கு கமலாட்சி அனுப்பினார். சில நாட்களில் திரும்பி வந்த சத்யராஜ், கமலாட்சியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார்.
இந்நிலையில், கடந்த 99-ம் ஆண்டு சத்யராஜ், படந்தாலுமூட்டை சேர்ந்த பிரீடா என்பவரை, 2-வதாக ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்த கமலாட்சி, கணவர் சத்யராஜ், பிரீடா, அவரது தந்தை யானோஸ், கணவரின் உறவினர்கள் ராஜன், ஜெயந்தி, மற்றும் ராபி ஆகியோர் மீது குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், சத்யராஜூக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதமும், பிரீடாவுக்கு 6 மாத சிறை தண்டனை, ரூ 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.