ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனம் ஆடிய பாலிவுட் நடிகர், நடிகைகள், அமெரிக்க பாப் பாடகி மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப். 3ல் சென்னையில் துவங்கியது. துவக்க விழாவில், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாச நடனம் ஆடினர். அதனை போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். விழா நிகழ்ச்சிகள் டிவியில்பார்த்த பெண்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.