Friday 20 April 2012

குமரியில் வேகமாக பரவி வரும் அம்மை நோய் : நீர் உணவுகளை சாப்பிட வேண்டும்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குமரியில் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
குமரிமாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாக காணப்படுகிறது. ஆங்காங்கே மழை பெய் துள்ள போதிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெப்பத்தின் தாக்குதலால் மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக வைரஸ் நோயான அம்மை நோய் பலரை தாக்கியுள்ளது. காய்ச்சல், உடல்வலி ஆகிய அறிகுறிகளுடன் இந்த நோய் தொடங்குகிறது.

தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு 0.25 சதவீதமாக குறைந்தது

தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 927 பேருக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பணிகளுக்காக, இந்தியாவின் முதல் சங்கமாக ,தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 1994ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் எச்ஐவி தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2001ல் எச்ஐவியின் தாக்கம் 1.13 சதவீதமாக அதிகரித்திருந்தது.

இந்தியாவில் இனி யானைகளுக்கும் RC புத்தகம் : கேரள அறிமுகம்

வாகனங்களுக்கு இருப்பது போல் யானைகளுக்கும் ஆர்சி புத்தகம் வழங்கும் புதுமை திட்டத்தை கேரள அரசு இன்று முதல் தொடங்குகிறது. 
வளர்ப்பு யானைகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நடிகர் ஜெயராம் முதல் இப்போது வனத்துறை அமைச்சராக இருக்கும் கணேஷ் குமார் உட்பட பல முக்கிய பிரபலங்கள் தங்கள் வீடுகளில் யானைகளை செல்ல பிராணிகளாக வளர்க்கின்றனர். இது தவிர கேரளாவில் சிறிய கோயிலாக இருந்தாலும் கூட திருவிழா நடக்கும்போது அந்த கோயிலில் நெற்றிப்பட்டம் சூடிய யானையின் வீதி உலா கண்டிப்பாக இருக்கும்.

பொதுமக்கள் பூட்டு : அரசு அதிகாரிகள் திறந்தனர் : கிறிஸ்தவ தேவாலயத்தில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம்

கிறிஸ்தவ தேவாலயத்தில் ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் பரிசுத்த திருக்குடும்ப தேவலாயம் உள்ளது. இங்கு ஊர் நிர்வாகத்திற்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அருள்தாஸ் மகளுக்கு நேற்று (19.4.2012) திருமணம் நிச்சயமானது. திருமணத்தை கார்மல்நகர் தேவாலயத்தில் நடத்த அவர் ஏற்பாடுகளை செய்தார். ஆனால் தேவாலயத்தில் திருமணம் நடத்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐபிஎல் (IPL) : கேட்டி பெர்ரி, பாலிவுட் நடிகர்கள் மீது ஆபாச நடன வழக்கு

ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனம் ஆடிய பாலிவுட் நடிகர், நடிகைகள், அமெரிக்க பாப் பாடகி மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப். 3ல் சென்னையில் துவங்கியது. துவக்க விழாவில், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாச நடனம் ஆடினர். அதனை போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். விழா நிகழ்ச்சிகள் டிவியில்பார்த்த பெண்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.