ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனம் ஆடிய பாலிவுட் நடிகர், நடிகைகள், அமெரிக்க பாப் பாடகி மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

கிராம கோயில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு போலீசார் தடை விதிக்கின்றனர். ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடன காட்சிகளை போலீ சார் தடுக்காதது சட்டவிரோதம். ஆபாசமாக நடனம் ஆடிய இந்தி நடிகர், நடிகைகள் மற்றும் பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் ஆகியோர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டம், பாஸ்போர்ட் மற்றும் விசா நிபந்தனை, கட்டுப்பாடு மீறல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக டிஜிபி, மதுரை மண்டல ஐஜிக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மனுவை விசாரித்த நீதிபதி ஏ.செல்வம் மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டார். விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment