Wednesday 7 December 2011

தூத்தூர் கிராமத்தில் புகையிலை, பாக்கு பொருட்களுக்கு தடை : வீதியில் கொட்டி தீ வைத்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவர் கிராமத்தில் கேன்சர் நோயை உருவாக்கும் புகையிலை, பாக்கு பொருட்களுக்கு தடை விதித்துள்ளனர். இதையெட்டி இன்று காலை ஊராட்சி தலைவர் ஜான் அலோசியஸ், பாதிரியார்கள் சனு, எபிரேன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அப்பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள், பான்பராக் மற்றும் பாக்கு வகை களை எடுத்து வீதியில் குவித்து தீ வைத்து கொளுத்தினர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஜான் அலோசியஸ் கூறியதாவது, தூத்தூர் ஊராட்சியில் புகையிலை பொருட்கள், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பாக்கு வகைகள் விற்க தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக தூத்தூர் கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படப்படியாக மற்ற இடங்களு க்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கு சுயஉதவிக்குழுக்கள், பாதிரியார்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். தூத்தூர் ஊராட்சி பகுதியை இதில் முன்மாதிரியாக மாற்றுவோம் என்றார்.

பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு : ஜப்பான் நிறுவன 4 லட்சம் டின் வாபஸ்

குழந்தைகளுக்கான பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், ஜப்பானை சேர்ந்த மெய்ஜி நிறுவனம் விற்க அனுப்பப்பட்ட 4 லட்சம் டின்களை திரும்ப பெறுகிறது. இது ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் கடந்த மார்ச் 11&ம் தேதி பயங்கர பூகம்பமும் தொடர்ந்து பயங்கர சுனாமியும் ஏற்பட்டது. பல நகரங்களில் பேரழிவு ஏற்பட்டது. புகுஷிமா நகரில் உள்ள டாய்ச்சி அணு உலை பாதிக்கப்பட்டது. அணுஉலையை குளிர்விக்கும் கருவிகள் செயலிழந்ததால், கதிரியக்க தனிமங்கள் உருகின. கதிரியக்கமும் வெளியேறியது. பசிபிக் பெருங்கடல் வழியாக இந்த கதிரியக்க பாதிப்பு பரவுவதாக கூறப்பட்டது. மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள், டீ, பால் ஆகியவற்றில் கதிரியக்க பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கதிரியக்க தன்மை இருந்தாலும், அபாயகரமான அளவுக்கு இல்லை என்று அரசு தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில், மெய்ஜி என்ற நிறுவனத்தின் பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:  
மெய்ஜி பால் பவுடரில் கதிரியக்க சீசியம் தனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு கிலோ பால் பவுடரில் 200 பெக்கரல் என்ற அளவுக்கு சீசியம் இருக்கலாம் என்று ஜப்பான் அரசு கூறுகிறது. அதைவிட பல மடங்கு குறைவாக 30.8 பெக்கரல் அளவுக்கே எங்கள் பால் பவுடரில் சீசியம் உள்ளது. ஆனாலும், 4 லட்சம் டின்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். பால் பவுடர் தயாரிக்கும்போது அதை காயவைப்பதற்கு வெப்ப காற்று பயன்படுத்தப்படும். புகுஷிமா அணுஉலையில் இருந்து பரவிய கதிரியக்கம், காற்று மூலம் பால் பவுடரில் சேர்ந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
இவ்வாறு மெய்ஜி நிறுவன அதிகாரிகள் கூறினர். மெய்ஜி பால் பவுடர், ஜப்பானில் மட்டுமே விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.       (Tamil Murasu)

சரத்பவாரை அறைந்தது தப்பில்லை : அன்னா ஹசாரே

மத்திய அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்தது தப்பில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் மத்திய அமைச்சர் சரத்பவாரை சீக்கிய இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் இந்த சம்பவத்தை கண்டித்தனர். இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘ஒரு அறை தானா?’ என அன்னா பதில் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காந்தியவாதி என கூறிக் கொள்ளும் அன்னா, வன்முறையை ஊக்குவிக்கலாமா என அன்னாவின் ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்து சரத்பவார் தாக்கப்பட்டதற்கு அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்தார். சரத்பவார் சம்பவத்தை கேலி செய்யவில்லை என விளக்கம் அளித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அன்னா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்து:
மகாராஷ்டிராவில் கடந்த ஆட்சியின்போது தேசியவாத காங்கிரசை சேர்ந்த 3 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சவாந்த் கமிஷன், 3 அமைச்சர்களுக்கும் ஊழலில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தது. இதை தொடர்ந்து அவர்கள் பதவியிலிருந்து விலகினார்கள். ஆனால் அவர்கள் மீது சரத்பவார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஊழல்வாதிகளை காப்பாற்றும் பழக்கம் சரத்பவாருக்கு உள்ளது. அவரை அறைந்ததற்காக அரசியல்வாதிகள் கோபப்படுகிறார்கள். ஆனால் நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதற்காக அவர்கள் கோபப்படவில்லை. இளைஞர் எதற்காக அறைந்தார் என்பது குறித்து யோசித்து பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து வருகிறது. எல்லை மீறும் போது ஒரு சிலர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார். (Tamil Murasu)

சாகும் வரை உண்ணாவிரதம் : மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை 19ம் தேதிக்குள் மீட்காவிட்டால், ராமேஸ்வரத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமான விசைப்படகு மீனவர்கள், கடந்தமாதம் 28ம் தேதி கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் கிளாட்வின் என்பவரது படகில் இருந்த மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்தனர். இவர்கள் 5 பேர் மீதும், போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை ஊர்க்காவல் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட இவர் களது காவலை, வரும் 19ம் தேதி வரை நீட்டித்து, மல்லாகம் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. மீனவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவர்களை மீட்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர்.
தொடர் போராட்டத்தை கைவிடக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலெக்டர் அருண்ராய் தலைமையில் நேற்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆர்டிஓ முத்துக்குமரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். 14 மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய கலெக்டர், “இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க அங்கு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மீனவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றார். ஆனால் கலெக்டரின் வேண்டுகோளை மீனவர்கள் ஏற்க மறுத்தனர். மீனவர்களை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மீனவ சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை வரும் 19ம் தேதிக்குள் விடுதலை செய்யாவிட்டால், ராமேஸ்வரத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றனர்.

Web firms blamed : India vows crackdown on offensive internet content

Communications Minister Kapil Sibal met officials from Google, Facebook and other websites on Monday.
On Tuesday he said the firms had told him they were unable to take action.He said the government would introduce guidelines to ensure "blasphemous material" did not appear on internet. Doctored photos of the PM and Sonia Gandhi have angered the government.


Addressing a press conference in the capital, Delhi, on Tuesday, Mr Sibal said he had asked the companies in September to remove images and statements deemed offensive to religious groups, but that they had ignored his requests.

"At a meeting on 4 November, we showed them some of the photos and they too agreed that the photos were offensive," he said.
The minister accused the internet firms of not co-operating.

"They have given it to me in writing that they will not do anything until we get an order from the court," he said.

Mr Sibal said companies would not be allowed to say, "we throw up our hands, we can't do anything about this".

India has more than 100 million internet users and web companies say the large number means broad action is impossible.

Facebook said in a statement that it recognised the "government's interest in minimising the amount of abusive content available online".
But, it said, there were policies in place that enabled people to report abusive content.
"We will remove any content that violates our terms, which are designed to keep material that is hateful, threatening, incites violence or contains nudity off the service."
Facebook said it would "continue to engage with the Indian authorities as they debate this important issue".
India has 28 million Facebook accounts.
A spokesperson for Google was quoted by the Press Trust of India as saying that it did remove illegal material.
But the spokesperson added: "When content is legal and does not violate our policies, we will not remove it just because it is controversial, as we believe that people's differing views, so long as they are legal, should be respected and protected."
Rajesh Chharia, president of the Internet Service Providers Association of India, told Associated Press that internet companies should be aware of national security issues.
"I am not favouring censorship - self-regulation is the best censorship available to our system [but] we should not do anything which should harm the peace of the country."