Thursday 10 May 2012

30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதிக்காத கிராமம்

சாத்தூர் அருகே உள்ள ஊஞ்சம்பட்டி கிராம மக்கள், 30 ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷனில் கால் பதித்ததில்லை. ஆச்சரியமாக உள்ளதா?
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது ஊஞ்சம்பட்டி. சுமார் 200 வீடுகள் கொண்ட இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் தீப்பெட்டி தயாரிப்பு மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தினர் வசித்தபோதும், ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக, சகோதர உணர்வுடன் வாழ்கின்றனர். எந்த பிரச்னையாக இருந்தாலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுகின்றனர். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் இக்கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்கின்றனர். ஊர் தலைவர்களை அழைத்துப்பேசி பிரச்னையை சுமூகமாக தீர்த்துக்கொள்கின்றனர்.

"பணம் இருந்தால் கடவுளும் வீடு தேடி வருவார்"

சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
** ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, காஞ்சிபுரம் தேவராஜசுவாமி, ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமநாதபுரம் ஆதிஜெகன்னாதபெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய கோயில்கள் உள்ளிட்ட 43 கோயில்களுக்கு ரூ 22.50 கோடி வழங்கி திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.