Wednesday 25 January 2012

திருவட்டார் : 80 வயது மூதாட்டியை விரட்டியடித்த போலீசார்

திருவட்டார் காவல் நிலையத்தில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சுமார் 80 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் தனது மகன் மற்றும் மருமகள் கொடுமை படுத்துவதாக தனது மற்றொரு மகனுடன் புகார் கொடுக்க வந் தார். அப்போது அங்கு இருந்த ஏட்டு ஒருவர் இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறி கடின வார்த்தைகளால் பேசி வெளியே அனுப்பினார். அழுது கொண்டே வெளியே வந்த மூதாட்டியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

நடுக்கடலில் மூழ்கிய 4 இலங்கை மீனவர்களை உயிருடன் மீட்ட வாணியக்குடி மீனவர்கள்

குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் தனது விசை படகில் கடந்த சில தினங்களுக்கு முன் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றார். இன்று அதிகாலை குளச்சல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது அங்கு ஒரு படகு கடலில் மூழ்கிக்கொண்டு இருந்தது. அதை பார்த்த ரஞ்சித் உள்பட 9 பேரும் விரைந்து சென்று அந்த படகில் இருந்த 4 பேரை மீட்டு தங்களது படகில் ஏற்றினர். அவர்களை கரைக்கு அழைத்து வருகிறார்கள்.

ஆசாரிபள்ளத்தில் ஆக்ரமிப்பு அகற்றம் : கலெக்டர் நேரடி நடவடிக்கை

அதிகாரிகளை ஒருமையில் திட்டிய அதிமுக எம்எல்ஏ
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அனந்தன்பாலம் பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்கில் ஆக்ரமிப்புகளை அகற்ற கடந்த 2010ம் ஆண்டு முதல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை தாசில்தார் ராபர்ட்புரூஸ் தலைமையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு பொறியாளர் லூயிஸ், அருள்செழியன், இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

முல்லைப் பெரியாறு : மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது
"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற மத்திய நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது" என்று கேரள அமைச்சர் கே.பாபு கூறினார்.