Monday 23 April 2012

இண்டர்வியூ : (நாகர்கோவில்)பார்வதிபுரத்தில் விபசாரம் : 7 பேர் கைது

நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் அந்த கட்டிடத்தில் திடீர் சோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியும் காவல்துறையினர் பெற்று இருந்தனர்.
Nagercoil_Junctionநேற்று (ஞாயிறு) மதியம் வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து 4 வாலிபர்கள் உல்லாசமாக இருப்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் டவுன் டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி, சப் - இன்ஸ்பெக்டர்கள் கண்மணி, பிரேமா மற்றும் போலீசார் அதிரடியாக அந்த கட்டிடத்துக்குள் நுழைந்தனர்.

‘செம்பட்டை’ : குளச்சல், குறும்பனை குப்பமா?? குப்பத்தின் பொருள் தான் என்ன???

‘செம்பட்டை’ 2012 - இல் திரைக்கு வர இருக்கும் திரைப்படத்தின் பெரும்பகுதி அரபி கரையோரம் அமைத்திருக்கும் இயற்கை எழில் மிகுந்த குறும்பனை கிராமத்தில் படமாக்கப்பட்டது. இத்திரைபடத்தில் குறும்பனை கிராமத்தை சார்ந்த இளைஞ்சர்கள் நடித்தும், சிறுவர்கள் ஆடலுடன் நடித்தும் இருக்குகிறர்கள். 
Kurumpanai_coastal_village_Kanyakumari"மீனவ குப்பத்தை தேடி அலைந்த இயக்குனர்." என ஒரு பத்திரிகையின் செய்தி. குப்பம் என்றல் நீங்கள் பொருள் கொள்வது என்ன?. மீனவர்கள் கடலோரம் சிறு குடிசைகள் அமைத்து (நாகரிகமற்று : அப்படித்தானே திரைப்படங்களில் சித்தரிக்கபடுகிறார்கள்) வாழ்பவர்கள். இந்த கிராமத்தில் 3500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.

இறந்த பின் உடலை புதைக்க தீவை வாங்கினார் ஆசிரியர்

teacher_buys_island_to_burried_with_wifeஇறந்த பின் தனது உடலையும், மனைவியின் உடலையும் புதைக்க இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் ஆசிரியர்.

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள்ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது. இங்கு தண்ணீர், சாலைகள், மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால், யாரும் வாங்கவில்லை. இந்நிலையில், செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி, குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

மனித கழிவு கேஸ் : நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் : அசத்துகிறார் ஓய்வு பெற்ற பொறியாளர்

மனித கழிவில் இருந்து கேஸ் உற்பத்தி செய்து அதை பயன்படுத்தி சமையல் செய்து அசத்துகிறது ஓய்வு பெற்ற பொறியாளர் குடும்பம். நாற்றம் இல்லை, எரிதிறன் அதிகம் என்பது இதன் சிறப்பு. றார் 

coimbatore_Pollachi_thirupurகோவை கே.வடமதுரை திரு.வி.க நகரை சேர்ந்தவர் செல்வன் (62). ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர். இவர் எரிசக்தி நிறுவனம், ஆராய்ச்சி பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். இவர் மனைவி கிரிஜேஸ்வரி. செல்வன் பணி ஓய்வு பெற்றபின் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை அணுகி, மனித கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உதவி கேட்டார். கேலி கிண்டலுக்கு பிறகு அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர்.