Wednesday 30 November 2011

இன பெருக்க காலம் துவங்கியதால் தின்பண்டம் கொடுக்க தடை :

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோவை மாவட்டம், வால்பாறை வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் காணப்படும் இந்த குரங்குகளின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆகும். கர்ப்ப காலம் 170 நாட்கள்.
ஒரு கூட்டத்தில் 14 முதல் 80 குரங்குகள் வரை காணப்படும். இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் இருக்கும். பல குரங்குகள் குட்டிகளுடன் உயரமான மரங்களுக்கிடையே தாவி செல்வது அழகாக இருக்கும்.
வால்பாறை & பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் இவை அதிகமாக உள்ளன. இந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி இவற்றுக்கு தின்பண்டங்கள் கொடுத்து பழக்கியுள்ளனர். எனவே உணவுப் பொருள் கிடைக்கும் என்ற எண்ணத்தில், வாகனங்களை எதிர்பார்த்து இவை காத்திருக்கின்றன. குரங்குகள் வாகனத்தில் தாவும்போது, அடிபட்டு இறப்பது அடிக்கடி நடக்கிறது.
இதை தடுக்க, ஊழியர்களை வனத்துறை நியமித்துள்ளது. சிங்கவால் குரங்குகளுக்கு உணவு பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர், சுற்றுலா பயணிகளிடம் எச்சரித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்கள் : ஜிம்பாப்வே பெண்களிடம் தீவிர விசாரணை

தென்ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பாலியல் பலாத்கார செயல்களால் ஆண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. காரில் லிப்ட் கொடுப்பது போல ஏற்றிச் சென்று பலாத்காரம் செய்ததாகவும் எதிர்பாராத நேரத்தில் முகத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு மயக்க ஊசி போட்டு பின்னர் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பல ஆண்கள் புகார் கூறினர். அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை ஏற்படுத்துவதாக கூறி சிறப்பு சடங்குகள், வழிபாடுகள் நடத்தும் பெண் கும்பல் ஒன்று ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வலுக்கட்டாயமாக விந்து எடுப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.
தனியாக செல்லும் ஆண்களை மயக்கி அல்லது தாக்கி அந்த பெண்கள் பலாத்காரத்தில் ஈடுபடுவதாகவும் பின்னர் அவர்களை நிர்வாணமாக்கி புதர்களில் வீசிவிட்டு தப்பிவிடுகின்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக 3 பெண்கள் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்கள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோர்ட்டில் வழக்கு விசாரணை தீவிரமாக நடக்கிறது. பாலியல் தொழிலாளர்களான தங்கள் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளதாக 3 பெண்களும் கூறிவருகின்றனர்.

Earthquake in north Philippines; no damage reported yet.


An official says an earthquake with a magnitude of 6 shook the capital and parts of the northern Philippines. There are no immediate reports of damages or injuries.
Philippine Institute of Volcanology and Seismology chief Renato Solidum says movement in the Manila Trench off the country's western coast set off the earthquake Wednesday but it occurred deep under the ocean floor and did not cause any destruction.
Solidum says the quake was felt in metropolitan Manila and in the nearby provinces of Zambales, Bulacan, Pangasinan and in the mountain resort city of Baguio.
The Philippines is located in the Pacific "Ring of Fire" where earthquakes and volcanic activity are common. A 7.7-magnitude quake killed nearly 2,000 people in Luzon in 1990.

தேங்காப்பட்டணத்தில் கடல் சீற்றம்

சாலை துண்டிப்பு: பஸ்கள் நிறுத்தம் : 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு
குமரி கடல் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் முடங்கிப்போய் உள்ளனர்.
நாகர்கோவிலில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கனமழை கொட்டியது. தேங்காப்பட்டணம் அருகே உள்ள முள்ளூர்துறை கடற்கரை கிராம பகுதியில் அரையான்தோப்பு என்ற இடத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் கடல் அரிப்பு தடுப்புசுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும் போது அங்குள்ள 50& க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அரையான்தோப்பு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. நேற்று சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அந்த பாதையில் இயக்கப்படவில்லை. இந்த வழியாக பல கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பல பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை பகுதிகளுக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.

‘ஏ’ குடும்பம் : அம்மா பெருமிதம்

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் ரெண்டால். நர்சாக வேலை பார்க்கிறார். இவரது பெண்கள் அலிசியா (27), அமண்டா (26), கிம்பர்லி (22). மூன்று பேரும் ஆபாச படங்களில் நடிப்பவர்கள்.
இதுபற்றி அமண்டா கூறியதாவது:
பள்ளியில் படிக்கும் காலத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அசத்துவேன். காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைக்கும் அளவுக்கு வேகமாக தயாராகி வந்தேன். பிறகு பள்ளியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, படிப்பை நிறுத்திவிட்டேன். எதிர்பாராதவிதமாக ஆபாச பட நடிகை ஆகிவிட்டேன். பேப்ஸ்டேஷன் ஆபாச நிகழ்ச்சியில் 7 ஆண்டுகளாக நடித்து வருகிறேன்.
அதற்கு அப்புறம், அக்கா அலிசியாவும் இத்துறைக்கு வந்துவிட்டார். பிரிட்டனின் முன்னணி ஆபாச நடிகைகளில் அக்கா அலிசியாவும் ஒருத்தி. தங்கை கிம்பர்லியும் தற்போது ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறாள். இதில் என்ன தவறு இருக்கிறது?
அம்மா தான் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம், “என் 3 பெண்களும் ஆபாச பட நடிகைகள். வாழ்க்கை நடத்த சொந்தக் காலில் நிற்கிறார்களே, அதுவே பெருமைக்குரிய விஷயம்தான்” என்று பெருமை பொங்க சொல்கிறார்.
வெளிநாட்டில் தானே என்று நினைத்து கொள்ளாதீர்கள். தற்பொழுது ஹிந்தி colours என்னும் சேனல் - ல் ஒளிபரப்ப பட்டு வரும் Big Boss ரியாலிட்டி ஷோ - வில் Indo கனடியன் (பஞ்சாப்யை சேர்ந்த தாய் தந்தைக்கு பிறந்து கனடா வில் வளர்ந்த ) Sunny Leone பங்கு பெற்றுள்ளார்.
என்ன கொடும சார்?????  என்ன கலாச்சாரம் சார்?????

கலக்குகிறார் சிறுமியான சிறுவன்

ஜாஸ் (11)
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜாஸ் (11). இசை, நடனம் என கலக்கி வருகிறார். ஆண் குழந்தையாக பிறந்த இவரிடம் நாள் ஆகஆக மாற்றங்கள் தெரிந்தன. தன்னை சிறுமி போல உணரும் அவரை சிறுமியாகவே வளர்த்து வருகின்றனர் பெற்றோர். “என்னை போல உலகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வெறுக்காமல் அரவணைத்து செல்ல வேண்டும். சாதாரண ஹார்மோன் சிகிச்சைகள் மூலம் இதை சரிசெய்துவிட முடியும்” என்று டிவி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார் ஜாஸ்.