சிவில் இன்ஜினியரிங், ஆர்க்கிடேக் படிக்காமால், மிக தெளிவாய் திட்டமிட்டு கட்டப்படும் பிற உயிரினங்களின் வாழ்விடங்கள் எப்போதும் அதிசயமே.
இன்றும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட செயற்கையாக ஒரு கூட்டை நூறு விழுக்காடு துல்லியமாக யாராலும் அமைக்க முடியவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவசப் பாடபுத்தகங்களை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு அந்த மாவட்டங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அச்சகங்களில் இருந்தே நேரடியாக செல்லும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த புத்தகங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் இன்று முதல் அனுப்புவார்கள். 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.
அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர். இவருடைய மனைவி பிரபல வக்கீலாக இருக்கிறார். ரத்தோர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது ருச்சிகா கிரிஹோத்ரி என்ற 14 வயது பள்ளி மாணவியை கடந்த 1990ல் மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ருச்சிகாவுக்கு ரத்தோர் கொடுத்த பாலியல் தொல்லையால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாள். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ரத்தோர் கடந்த 2010, மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 7 மாத சிறை தண்டனை அனுபவித்த அவருக்கு, 2010 நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், இப்போது அவர் வெளியே இருக்கிறார்.
குழந்தை திருமணத்தை தடுக்க, திருமண பத்திரிகைகளில் கட்டாயமாக மணமகன், மணமகள் பிறந்த தேதிகளை அச்சடிக்க வேண்டும் என பரத்பூர் கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் குழந்தை திருமணம் செய்வது குறைந்துள்ளது.
** கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடும் மீனவர்களின் குடும்பத்துக்கு தின உதவித் தொகையாக வழங்கப்பட்டு வரும் ரூ 50 ஐ ரூ 250 ஆக உயர்த்தி வழங்கப்படும். காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடுபவர்களின் பிள்ளைகள் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி பயில, அரசால் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்று உயர்கல்வி வழங்கிடும் வகையில் ஒரு நிதி அமைப்பை அரசு உருவாக்கும்.