
குழந்தை திருமணத்தை தடுக்க, திருமண பத்திரிகைகளில் கட்டாயமாக மணமகன், மணமகள் பிறந்த தேதிகளை அச்சடிக்க வேண்டும் என பரத்பூர் கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் குழந்தை திருமணம் செய்வது குறைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் மாவட்ட கலெக்டர் கவுரவ் கோயல். இவர், குழந்தை திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களுக்கும் அதிரடி உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தார். அதாவது, திருமண பத்திரிக்கை அச்சடிக்கும் போது மணமகள், மணமகனின் வயதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.