Thursday 26 April 2012

புதைக்கப்படும் பொக்கிஷங்கள் : தூக்கணாம் குருவி கூடு

சிவில் இன்ஜினியரிங், ஆர்க்கிடேக் படிக்காமால், மிக தெளிவாய் திட்டமிட்டு கட்டப்படும் பிற உயிரினங்களின் வாழ்விடங்கள் எப்போதும் அதிசயமே.

தங்களுக்கு வாழ தகுதியான இடத்தை தெளிவாக தேர்வு செய்து சிறுக சிறுக பொருள் சேமித்து துல்லியமாக தனக்கும் குஞ்சுகளுக்கும் ஏற்ற அனைத்து வசதிகளுடன் அவை தங்கள் வாழ்விடங்களை அமைக்கும் விதம் புதிரானது.

இன்றும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட செயற்கையாக ஒரு கூட்டை நூறு விழுக்காடு துல்லியமாக யாராலும் அமைக்க முடியவில்லை.

இன்று முதல் 10 - ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வினியோகம்

பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவசப் பாடபுத்தகங்களை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு அந்த மாவட்டங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அச்சகங்களில் இருந்தே நேரடியாக செல்லும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த புத்தகங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் இன்று முதல் அனுப்புவார்கள். 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

மனைவிக்காக ரூ.9,50,000 கொடுத்து பேன்சி நம்பர் வாங்கிய முன்னாள் டிஜிபி

ருச்சிகா மானபங்க வழக்கில் சிக்கிய அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர், தனது மனைவிக்கு பரிசாக வழங்கிய புதிய மெர்சிடஸ் பென்ஸ் காருக்கு, 9 லட்சத்து ஐந்தாயிரத்து ஒரு ரூபாய் கொடுத்து பேன்சி நம்பரை வாங்கியுள்ளார்.

Police_ex_DGP_rathoreஅரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர். இவருடைய மனைவி பிரபல வக்கீலாக இருக்கிறார். ரத்தோர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது ருச்சிகா கிரிஹோத்ரி என்ற 14 வயது பள்ளி மாணவியை கடந்த 1990ல் மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ருச்சிகாவுக்கு ரத்தோர் கொடுத்த பாலியல் தொல்லையால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாள். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ரத்தோர் கடந்த 2010, மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 7 மாத சிறை தண்டனை அனுபவித்த அவருக்கு, 2010 நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், இப்போது அவர் வெளியே இருக்கிறார்.

பரத்பூர் கலெக்டர் அதிரடி : திருமண பத்திரிகையில் பிறந்த தேதி கட்டாயம்

குழந்தை திருமணத்தை தடுக்க, திருமண பத்திரிகைகளில் கட்டாயமாக மணமகன், மணமகள் பிறந்த தேதிகளை அச்சடிக்க வேண்டும் என பரத்பூர் கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் குழந்தை திருமணம் செய்வது குறைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூர் மாவட்ட கலெக்டர் கவுரவ் கோயல். இவர், குழந்தை திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களுக்கும் அதிரடி உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தார். அதாவது, திருமண பத்திரிக்கை அச்சடிக்கும் போது மணமகள், மணமகனின் வயதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இறக்கும் மீனவர் பிள்ளைகளின் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் மற்றும் பல : சட்டசபையில் அமைச்சர் ஜெயபால் பேசியது

மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயபால் சட்டசபையில் நேற்று பேசியதாவது:  
** கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடும் மீனவர்களின் குடும்பத்துக்கு தின உதவித் தொகையாக வழங்கப்பட்டு வரும் ரூ 50 ஐ ரூ 250 ஆக உயர்த்தி வழங்கப்படும். காணாமல் போகும் அல்லது இறக்க நேரிடுபவர்களின் பிள்ளைகள் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி பயில, அரசால் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்று உயர்கல்வி வழங்கிடும் வகையில் ஒரு நிதி அமைப்பை அரசு உருவாக்கும்.