தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது போஷன் நகரம். இங்கு பரபரப்பான சாலையில் 2 வயது பெண் குழந்தை வாங்யூ திடீரென குறுக்கே பாய்ந்தது. வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றது. விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்கவில்லை. அதில் குழந்தை படுகாயம் அடைந்து சாலையிலேயே சுயநினைவிழந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் பின் அந்த பக்கம் பல வாகனங்கள் சென்றன. பாதசாரிகள் 18 பேர் குழந்தையை பார்த்து கொண்டே கடந்து சென்றனர்.
Thursday 19 January 2012
தமிழ் நாடு : 2 நாட்களுக்கு கடும் பனிப் பொழிவு நீடிக்கும்
வளி மண்டல மேல் அடுக்கில் மேகங்கள் ஏதும் இன்றி வானம் தெளிவாக காணப்படுவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கடுமையாக பனி பெய்யும். வட திசையில் இருந்து குளிர்காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் குளிர் காற்றும், மூடுபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக காலையில் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. மலைப் பிரதேசங்களில் உறைபனியாகவும் இருந்தது. இதற்கு காரணம் வெப்ப நிலை குறைவாக இருப்பதுதான்.
Subscribe to:
Posts (Atom)