Thursday 8 December 2011

டாக்டர்கள் இல்லை என்ற நிலை குமரி மாவட்டத்தில் மாறிவிட்டது : கலெக்டர் பேச்சு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் இல்லை என்ற நிலை தற்போது குமரி மாவட்டத்தில் மாறிவிட்டது என்று கலெக்டர் கூறினார்.
குமரி மாவட்ட தன்னார்வ நல குழுமம் சார்பில் நல வாழ்வு குழு உறுப்பினர்கள் கொண்ட புத்துணர்வு பயிற்சி முகாம் நாகர்கோவிலில் இன்று நடந்தது. கலெக்டர் மதுமதி பேசியதாவது:& அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவேண்டும் என்பதே அரசின் நோக்கம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மக்கள் அதிக அளவில் செல்ல தொடங்கி உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து அளிக்கப்படும் சிகிச்சை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் இலவச மருத்துவ பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட இலவச சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால் அங்கு டாக்டர் இருப்பது இல்லை என்ற நிலை மாறிவிட்டது. இது போன்ற விஷயங்களை நல்வாழ்வு குழுவினர் மக்களிடம் எடுத்து கூற வேண்டும். அரசு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடைய அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், மற்றும் தன்னார்வ நல்வாழ்வு குழுமத்தை சேர்ந்த உறுப்பினர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

குமரி & கேரள எல்லையில் அமைதி : முல்லைபெரியாறு விவகாரம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தில் எல்லை பகுதிகளில் வாகனங்கள் இயக்குவதில் பாதுகாப்பற்ற நிலை தொடருகிறது. பல பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல இயலாமல் பாதி வழியில் திரும்பி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் மற் றொரு தமிழக கேரள எல்லை பகுதி யான குமரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது. ஒரு சில சம்பவங்களை தவிர பெரும்பாலும் எந்தவித பாதிப்பும் இல்லை. 
சபரிமலை சென்றுவிட்டு சுசீந்திரம், கன்னியாகுமரி நோக்கி வருகின்ற வாகனங்கள் வழக்கம்போல் வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. மேலும் தமிழக & கேரள எல்லை பகுதிகளில் பல இடங்களிலும் பிரச்னைகள் நீடிப்பதால் குமரி மாவட்டம், திருவனந்தபுரம் வழியாக அதிக அளவில் கேரள வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தமிழக பகுதிக்கு வந்து செல்கின்றன. இத னால் தேசிய நெடுஞ்சாலை 47 போக்குவரத்து நெரிசலுடன் திணறி வரு கிறது. இரவு நேரங்களில் மார்த்தாண்டம், நாகர்கோவில் பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறு கிறது.

தமிழகத்துக்கு ஆதரவாக ஈரோட்டில் மலையாளிகள் கடை அடைப்பு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘முல்லை பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். வந்தாரை வாழவைக்கும் தமிழக மண்ணுக்கு பாதகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் வாழும் மலையாளிகளாகிய நாங்கள் தமிழக மக்களோடு இணைந்து போராடுவோம என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்‘ என்றும் இதற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர். அதன்படி இன்று மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் டீக்கடைகள், பேக்கரி கடைகள், நகைக்கடைகள், எலெக்டரிக்கல் கடைகள் என 500 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செல்போனால் பிரிந்த தம்பதியை ஓன்று சேர்த்தது செல்போன் சிக்னல் : கும்பகோணத்தில் சுவாரஸ்யம்

கணவன், மனைவி பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, அவர்கள் மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் தேவையன் (30). இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. தேவையன் ஓராண்டுக்கு முன் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட நேரங்களில் எல்லாம் ‘பிசி பிசி’ என பதில் வந்தால் மனைவி மீது தேவையனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ரேவதி, கணவனுடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு கடந்த செப்டம்பர் 22ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இதையறிந்த தேவையன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால், பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார்.
ரேவதியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது, அவர் மும்பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அங்குள்ள ‘பிரேம் கிரண்‘ என்ற மறுவாழ்வு மையத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மையத்தை தொடர்பு கொண்ட போலீசார், அவரை ஊருக்கு அனுப்பும்படி கூறினார். ஆனால் அதற்கு ரேவதி மறுத்துவிட்டார்.
பின்னர் அந்த மைய மேலாளர் செல்வி, ரேவதியை சமாதானப்படுத்தி நேற்று பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். கணவன், மனைவி இருவருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதன் பின் கணவருடன் செல்ல ரேவதி சம்மதித்ததை அடுத்து போலீசார் அவரை, தேவையனுடன் அனுப்பி வைத்தனர்.  (தமிழ் முரசு)

Sehwag 219 : New World Record in International Cricket

Virender Sehwag 219 : Highest Score in ODI followed by Sachin's 200


A New World Record in International Cricket


Highest Scores