Monday 14 May 2012

சேலத்தில் சோகம் : சீட் பிடிக்க உயிர் போன பரிதாபம்

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று ஓடும் ரயிலில் சீட் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறிய 2 குழந்தைகளின் தந்தை, அவர்கள் கண் முன்னே ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
salem-junction-railway-station
கோவையிலிருந்து மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக நண்பகல் 12.30 மணிக்கு வந்தது. 4வது பிளாட்பாரத்தில் வந்த அந்த ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்து நின்றனர்.

60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு : விண்ணப்பிக்க அனுமதி

ரேஷன் கார்டுகளை புதுப்பிக்காத சுமார் 4 லட்சம் பேருக்கு உணவுப்பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் 60 நாட்களில் கிடைக்கும் என்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
tamil-nadu-ration-card-application
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 82,595 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை அனைத்தும் 2012ம் ஆண்டு இறுதி வரை நீட்டித்துக் கொள்ளும் வகையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் 31ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டது. 4 லட்சத்து 16,925 கார்டுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.