Thursday 31 May 2012

கூடுதல் கட்டணம் வசூல் : தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஸ்ரீகிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக இருந்தவர் பால்ராஜ். கடந்த 2006ம் ஆண்டு மாணவர்களிடம் ரூ 7 லட்சத்து 41,501 ரூபாயை கூடுதல் கட்டணமாக வசூலித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் புகார் செய்தனர்.
மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் பால்ராஜ் உரிய பதில் அளிக்காததோடு முன்னுக்குப்பின் முரணாக கூறினார். மீண்டும் விசாரணைக்கு அழைத்தபோது ஆஜராகவில்லை. இதற்கிடையே புதிய நிர்வாகிகள் குழு பள்ளியின் பொறுப் பை ஏற்றது.
இந்நிலையில் உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் முருகன் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், பள்ளி மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கூறியிருந்தார். பள்ளி நிர்வாக தலைவர் முருகேசன் தலைமையில் நேற்றுமுன்தினம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாணவர்களிடம் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்ததற்காக தலைமையாசிரியர் பால்ராஜை தற்காலிக பணி நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment