
மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் பால்ராஜ் உரிய பதில் அளிக்காததோடு முன்னுக்குப்பின் முரணாக கூறினார். மீண்டும் விசாரணைக்கு அழைத்தபோது ஆஜராகவில்லை. இதற்கிடையே புதிய நிர்வாகிகள் குழு பள்ளியின் பொறுப் பை ஏற்றது.
இந்நிலையில் உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் முருகன் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், பள்ளி மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கூறியிருந்தார். பள்ளி நிர்வாக தலைவர் முருகேசன் தலைமையில் நேற்றுமுன்தினம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாணவர்களிடம் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்ததற்காக தலைமையாசிரியர் பால்ராஜை தற்காலிக பணி நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment