Wednesday 8 February 2012

ரயில் டிக்கெட்டுகளை 4 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் : மார்ச் 10 அமல்


ரயில்களில் டிக்கெட் முன்பதிவை இனிமேல் 120 நாட்களுக்கு முன்பே செய்யலாம். மார்ச் 10ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
ரயில்களில் வெளியூர் செல்வோர் இப்போது 90 நாட்களுக்கு முன் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இனி 90 நாட்களுக்கு பதிலாக 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. மார்ச் மாதம் 10ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.
இது குறித்து டெல்லியில் பேட்டியளித்த ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி மார்ச் 10 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் 4 மாதங்கள் முன்னதாகவே பயணிகள் தங்கள் பயண திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். மேலும், திருவிழா மற்றும் கோடைக்காலங்களில் பயணம் செல்வோருக்கும் இந்த முறை உதவியாக இருக்கும்” என்றார்.
ஏற்கனவே, ரயில் பயணிகளின் வசதிக்காகவும், முறைகேடுகளை தவிர்க்கவும் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை இரண்டு நாட்களில் இருந்து ஒரு நாளாக ரயில்வே சமீபத்தில் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment