Saturday 19 May 2012

கோடிமுனை : ரயிலில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி

குளச்சல் கோடிமுனையை சேர்ந்தவர் அல்போன்ஸ். இவரது மகன் ரெமி(38). இவர் கேரளாவில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி எர்ணாகுளத்திலிருந்து நாகர்கோவில் வரும் ரயிலில் பயணித்துள்ளார். கொல்லம் அருகே வந்துகொண்டிருந்த போது ரெமி தவறி கீழே விழுந்துள்ளார்.
kodimunai-kanyakumari-Distஇதில் ரெமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவரது செல்போனில் இருந்த சிம்கார்டு கிடைத்தது. அதை வைத்து நடத்திய விசாரணையில் அவர் குமரி மாவட்டம் கோடிமுனையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இது குறித்து அவர்கள், குளச்சல் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோடிமுனை சென்று உயிரிழந்தவர் ரெமிதான் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் நேற்று ரெமியின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment