குளச்சல் கோடிமுனையை சேர்ந்தவர் அல்போன்ஸ். இவரது மகன் ரெமி(38). இவர் கேரளாவில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி எர்ணாகுளத்திலிருந்து நாகர்கோவில் வரும் ரயிலில் பயணித்துள்ளார். கொல்லம் அருகே வந்துகொண்டிருந்த போது ரெமி தவறி கீழே விழுந்துள்ளார்.

இது குறித்து அவர்கள், குளச்சல் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோடிமுனை சென்று உயிரிழந்தவர் ரெமிதான் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் நேற்று ரெமியின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment