
நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விவசாய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வில் உயிரியல், இயற்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பெரும்பாலானோரின் மதிப்பெண்கள் குறைந்துள்ளது. இதனால் மருத்துவம், பொறியியல் ‘கட்ஆப்‘ மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், மருத்துவம், பொறியியலுக்கு அடுத்து, மாணவர்கள் கவனம் விவசாய படிப்பில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, விவசாய படிப்புகளுக்கான விண்ணப்பம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனையானது. மே 7 முதல் நேற்று வரை மாநில அளவில் சுமார் 7 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் விற்றுள்ளன.
மதுரை விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வைரவன் கூறுகையில், “விவசாய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. விவசாயம் படித்தவர்கள் பலர் ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாநில அளவில் சுமார் 15 ஆயிரம் விண்ணப்பம் விற்பனையாகும் வாய்ப்புள்ளது” என்றார்.
No comments:
Post a Comment