Thursday 1 December 2011

கூடங்குளம் விவகாரம் டிச.10ல் சென்னையில் உண்ணாவிரதம்

அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பு
கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்பதை வலியுறுத்தி சென்னையில் வரும் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து இயக்கத்தின் அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோதங்கராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழர் நலன் சார்ந்த எந்த ஒரு பிரச்னையிலும் மத்திய அரசு ஆர்வம் காட்டாமல் இருந்து வரும் நிலையில், அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை தேச துரோகிகள் என்று மத்திய அரசும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் குற்றம் சாட்டி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சென்னை கூட்டமைப்பு சார்பில் மனித உரிமை தினமான டிசம்பர் 10ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment