Thursday 1 December 2011

நாடு முழுவதும் வியாபாரிகள் போராட்டம் : இன்று கடைகள் அடைப்பு

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவை கைவிட வேண்டும் என்று நாடு முழுவதும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி ஆகியோர் அன்னிய நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று அறிவித்தனர்.
மேலும், தமிழகத்தில் வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் விக்கிரமராஜா மாநிலம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு நடத்துவார்கள் என்று அறிவித்தார். அதேபோல, மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்தார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பல தலைவர்கள் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வணிகர்களின் இந்தப் போராட்டத்துக்கு மளிகைக் கடை வியாபாரிகள், டீ கடை வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டும் என்று அனைத்து கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். ஆனால் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மட்டும்
சென்னை ஓட்டல்கள் சங்கத் தலைவர் கே.டி.சீனிவாச ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர் சங்கங்களின் இதர அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு, பால், தண்ணீர், மருத்துவம் போன்றே ஓட்டல் மற்றும் உணவகங்கள் அத்தியாவசியப் பொருட்களின் அடிப்படையில் இருப்பதாலும், பொது மக்களின் நலன் கருதியும், ஓட்டல் மற்றும் உணவகங்கள் வழக்கம்போல திறந்திருக்கும்’ என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
எனினும், டீக்கடைகள் கடையடைப்பில் பங்கேற்பதால், அவை மூடியிருக்கும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் உள்ள ஏபிஎம்சி விற்பனை மையம் மற்றும் கர்நாடக வர்த்தக சங்கம் இணைந்து ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தை இன்று நடத்துவதாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment