Monday 9 January 2012

அதிர்ச்சி தகவல்கள் : மாணவர்களிடம் பரவும் புதுவித போதை பழக்கம்


பஞ்சர்ஒட்ட பயன்படும் சொல்யூசன்
ரப்பர் டியூப்புகளை ஒட்ட வும், பஞ்சர் ஒட்டவும் பயன்படும் சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும், புதுவித பழக்கம் மாணவர்கள் சிலரிடம் பரவி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள் ளன. நாகர்கோவில் அருகே உள்ள பள்ளியில் இருந்து ஏராளமான சொல்யூசன் காலி டியூப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதைக்காக பயன்படுத்தி விட்டு வீசி எறிந்த காலியான பசை டியூப்புகள்.
குமரி மாவட்ட பள்ளி மாணவர்கள் இடையே சமீப காலங்களாக புது வித போதை பழக்கம் பிரபலமாகி வருகிறது. வழக்கமாக சிகரெட், போதை பாக்குகள், புகையிலை என பயன்படுத்தும் மாணவர்கள் சிலர், இப்போது கெமிக்கல் வகைகளை போதைக்காக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் ரப்பர் டியூப்புகளை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சொல்யூசனை தண்ணீரில் கலந்து குடிப்பது, தீயில் வாட்டி பின்னர் சொல்யூசன் பேஸ்டை கையில் வைத்து நுகர்ந்து பார்ப்பது என்பன போன்ற செய்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
இதை பயன்படுத்திய சில நிமிடங்கள் போதை அப்படியே தலைக்கேறி நிற்கும் என்பது இதை பயன்படுத்தி பழக்கப்பட்ட மாணவர்கள் சிலர் , சக மாணவர்களிடம் சொல்லும் வாக்கு மூலமாக இருக்கிறது. போதை ஏறியதற்கான எந்த வித மணமும் இல்லாமல் இருப்பதால் இதை பயன்படுத்துபவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பள்ளி இடைவேளை நேரத்தில் கூட சில மாணவர்கள் வாடிக்கையாக பயன்படுத்துகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இது போன்று சொல் யூசனை பயன்படுத்தி போடப் பட்ட காலி டியூப்புகள் கழிவறை மற்றும் பள்ளி வளாகங்களில் ஏராள மாக கிடப்பதாக தகவல் வந்ததன் பேரில், பொதுமக்கள் சிலர் நேற்று அந்த பள்ளிக்கு சென்று அவற்றை கைப்பற்றினர்.
பின்னர் இது குறித்து டவுன் டி.எஸ்.பி. பாஸ்கரன், பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவற்றை கைப்பற்றினர். நேற்று (ஞாயிறு) பள்ளி விடுமுறை என்பதால் இது தொடர்பாக விசாரணை நடத்த முடிய வில்லை. இன்று காலை இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
சம்பவ இடத்துக்கு தலித் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் என்பவரும் வந்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பூதப்பாண்டி, இறச்சக்குளம், புத்தேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரித்த போது இது போன்று சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. இப்போது பள் ளிக்கு வந்து பார்த்த பிறகு தான், இந்த தகவல் உண்மை என தெரிய வந்திருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். மாணவர்களை இந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். இது போன்று பயன்படுத்துவதால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.
சம்பவ இடத்துக்கு தலித் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் என்பவரும் வந்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பூதப்பாண்டி, இறச்சக்குளம், புத்தேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரித்த போது இது போன்று சொல்யூசனை போதைக்காக பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. இப்போது பள்ளிக்கு வந்து பார்த்த பிறகு தான், இந்த தகவல் உண்மை என தெரிய வந்திருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். மாணவர்களை இந்த போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். இது போன்று பயன்படுத்துவதால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பள்ளிகளில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.
மூளையை பாதிக்கும்
இது தொடர்பாக அருமநல்லூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியதாவது :
வழக்கமாக கெமிக்கல் கலந்த பொருட்களை போதைக்காக பயன்படுத்துபவர்கள் உள்ளனர். ஷூ பாலிஷை கூட தண்ணீரில் கலந்து குடித்து, போதையை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். இது போன்ற கெமிக்கலை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் சிந்தனை திறன் குறைந்து ஒரு மன நோயாளியாக கூட மாற்றி விடுவர். எனவே இது போன்ற பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு ஆகும் என்றார்.  (Dinakaran)

No comments:

Post a Comment