Monday 9 January 2012

சவுதி அரேபியாவில் இறந்த குமரி மீனவர் உடலை கொண்டுவர நடவடிக்கை

பள்ளம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ஆன்ட்றின்(32). மீனவர். இவருக்கு ஜோன்ஸ் பென்சா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது பென்சா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். சகாய ஆன்ட்றின் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித்தொழில் செய்து வந்தார். கடந்த 7ம் தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஆன்ட்றின் இறந்தார்.
அவரது உடல் தற்போது சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் உள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் ஹெலன்டேவிட்சன் எம்பியிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து ஹெலன்டேவிட்சன் எம்பி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வயலார்ரவி மற்றும் சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் பைஸ் அகமது ஆகியோரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment