Saturday 14 January 2012

மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் : அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை கேட்டு வழக்கு

கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த வி. ஆர்த்தி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:
தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள், 14 நடமாடும் மருத்துவ பிரிவு கள், 11 அரசு மருந்தகங்கள், 7 பெண்கள் மற்றும் குழந் தைகள் மருத்துவமனைகள், 4 காசநோய் மருத்துவ மனை கள் மற்றும் 7 தொழுநோய் மருத்துவமனைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த மருத்துவமனைகளின் சேவையை நம்பியே உள்ளனர். சமுதாயத்திற்கு சேவையாற்றும் பொறுப்பு இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு உள்ளது.
அரசு டாக்டர்கள் அரசு ஊழியர்கள். அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு முழு சேவையை வழங்க வேண் டும். ஆனால், பெரும்பாலான அரசு டாக்டர்கள், தனியாக கிளினிக் நடத்துகின்றனர். தனியார் மருத்துவமனை களிலும் பணிபுரிகின்றனர். அரசு மருத்துவமனை களைவிட, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதிலும், தனியாக கிளினிக் நடத்துவதிலும் அதிக லாபம் கிடைப்பதால், அரசு டாக்டர்கள் பணியில் அலட்சியம் காட்டுகின்றனர்.
அரசு மருத்துவம னைகளில் பெரும்பாலான டாக்டர்கள் சரியான நேரத் திற்கு பணிக்கு வருவதில்லை. அந்த நேரத்தில் சொந்த மருத்துவமனையில் உள்ளனர். ஏராளமான ஏழை மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைகளில் காத்திருப்பதை ஒரு பொருட்டாக கருதாமல் பெரும்பாலான அரசு டாக்டர்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களில் அரசு டாக்டர்களின் கவனக் குறைவால் 70 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என்ற உயிர் பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் போலீசார், ஆசிரியர்களுக்கு தனியாக தொழில் நடத்த அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு& காஷ்மீரில் அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் அரசு டாக்டர்கள், தனியாக கிளினிக் நடத்தவும், தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் அருணா ச்சலம் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி கள், மனுவுக்கு பதிலளிக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசார ணை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.



No comments:

Post a Comment