Friday 16 December 2011

பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ல் ஆரம்பம் : அட்டவணை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி முடிகிறது. தேர்வு கால அட்டவணையை அரசு பொது தேர்வுகள் துறை நேற்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பிளஸ்2 தேர்வை 7.50 லட்சம் மாணவ&மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். 2008ம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதே போல கூடுதலாக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஆகும். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு முக்கிய படமான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு இடையே விடுமுறை நாட்கள் உள்ளன.

No comments:

Post a Comment