Tuesday 13 December 2011

மாதந்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக, முதல்வர் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், விடுதியில் தங்காமல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25 வீதம் 10 மாதங்களுக்கும்;
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.40 வீதம் 10 மாதங்களுக்கும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இதேபோன்று, விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் 10 மாதங்களுக்கும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதம் ரூ.250 வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

No comments:

Post a Comment