Tuesday 13 December 2011

பெண் மந்திரவாதியின் தலை துண்டிப்பு : சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் பில்லி சூனியம் வைத்து மந்திரம் செய்து வந்த பெண்ணின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில் இஸ்லாமிய கொள்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. நாட்டில் மந்திரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமினா பின்ட் அப்துல்ஹலிம் நாசர் என்ற பெண் பில்லி சூனியத்தை அகற்றுவதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து தகவல் பரவியதும், அமினாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜாவ்ப் நகரில் நேற்று அமினாவின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை சட்டவிரோதமாக செயல்பட்ட 73 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment