Monday 12 December 2011

நெய்வேலியில் மேல்நோக்கி குலை தள்ளும் அதிசய வாழை

முக்கனிகளில் ஒன்று வாழை. நெய்வேலியில் வாழை மரத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக வாழைமர குருத்தில் இருந்துதான் வாழைக்குலை தள்ளுவது வழக்கம். ஆனால் நெய்வேலி டவுன்ஷிப் 18வது வட்டம் மகாத்மா காந்தி சாலையில் வசித்து வரும் பொறியாளர் செல்வராஜ் வீட்டில் உள்ள வாழைமரத்தில், தண்டின் நடுவில் இருந்து புவிஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி வாழைக் குலை தள்ளியுள்ளது. 
அதிசய வாழை...! நெய்வேலியில் பொறியாளர் செல்வராஜ் வீட்டில் வளர்ந்துள்ள அதிசய வாழை.
இந்த அதிசய வாழையை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். வாழை மரம் வைத்தவுடன் வளரும் பக்க கன்றுகளை ஆரம்பத்தில் இருந்தே அதனை வெட்டிவிடுவது நடைமுறையில் உள்ளதாகும். பக்க கன்று களை வெட்டிவிடும் போது அந்த தண்டில் இருக்கும் செல் முதிர்ச்சி நிலை அடைந்து விடுகிறது. ஆயினும் முதிர்ச்சி அடைந்த செல்கள் தண்டின் நடுப்பகுதியில் இருப்பதால் இதுபோன்ற அதிசய நிகழ்வுகள் நடக்கிறது என ஓய்வுபெற்ற தோட்டக்கலை பராமரிப்பாளர் பழனி யப்பன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment