Wednesday 30 November 2011

இன பெருக்க காலம் துவங்கியதால் தின்பண்டம் கொடுக்க தடை :

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோவை மாவட்டம், வால்பாறை வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் காணப்படும் இந்த குரங்குகளின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆகும். கர்ப்ப காலம் 170 நாட்கள்.
ஒரு கூட்டத்தில் 14 முதல் 80 குரங்குகள் வரை காணப்படும். இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் இருக்கும். பல குரங்குகள் குட்டிகளுடன் உயரமான மரங்களுக்கிடையே தாவி செல்வது அழகாக இருக்கும்.
வால்பாறை & பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் இவை அதிகமாக உள்ளன. இந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி இவற்றுக்கு தின்பண்டங்கள் கொடுத்து பழக்கியுள்ளனர். எனவே உணவுப் பொருள் கிடைக்கும் என்ற எண்ணத்தில், வாகனங்களை எதிர்பார்த்து இவை காத்திருக்கின்றன. குரங்குகள் வாகனத்தில் தாவும்போது, அடிபட்டு இறப்பது அடிக்கடி நடக்கிறது.
இதை தடுக்க, ஊழியர்களை வனத்துறை நியமித்துள்ளது. சிங்கவால் குரங்குகளுக்கு உணவு பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர், சுற்றுலா பயணிகளிடம் எச்சரித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்கள் : ஜிம்பாப்வே பெண்களிடம் தீவிர விசாரணை

தென்ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பாலியல் பலாத்கார செயல்களால் ஆண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. காரில் லிப்ட் கொடுப்பது போல ஏற்றிச் சென்று பலாத்காரம் செய்ததாகவும் எதிர்பாராத நேரத்தில் முகத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு மயக்க ஊசி போட்டு பின்னர் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பல ஆண்கள் புகார் கூறினர். அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை ஏற்படுத்துவதாக கூறி சிறப்பு சடங்குகள், வழிபாடுகள் நடத்தும் பெண் கும்பல் ஒன்று ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வலுக்கட்டாயமாக விந்து எடுப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.
தனியாக செல்லும் ஆண்களை மயக்கி அல்லது தாக்கி அந்த பெண்கள் பலாத்காரத்தில் ஈடுபடுவதாகவும் பின்னர் அவர்களை நிர்வாணமாக்கி புதர்களில் வீசிவிட்டு தப்பிவிடுகின்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக 3 பெண்கள் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்கள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோர்ட்டில் வழக்கு விசாரணை தீவிரமாக நடக்கிறது. பாலியல் தொழிலாளர்களான தங்கள் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளதாக 3 பெண்களும் கூறிவருகின்றனர்.

Earthquake in north Philippines; no damage reported yet.


An official says an earthquake with a magnitude of 6 shook the capital and parts of the northern Philippines. There are no immediate reports of damages or injuries.
Philippine Institute of Volcanology and Seismology chief Renato Solidum says movement in the Manila Trench off the country's western coast set off the earthquake Wednesday but it occurred deep under the ocean floor and did not cause any destruction.
Solidum says the quake was felt in metropolitan Manila and in the nearby provinces of Zambales, Bulacan, Pangasinan and in the mountain resort city of Baguio.
The Philippines is located in the Pacific "Ring of Fire" where earthquakes and volcanic activity are common. A 7.7-magnitude quake killed nearly 2,000 people in Luzon in 1990.

தேங்காப்பட்டணத்தில் கடல் சீற்றம்

சாலை துண்டிப்பு: பஸ்கள் நிறுத்தம் : 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு
குமரி கடல் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் முடங்கிப்போய் உள்ளனர்.
நாகர்கோவிலில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கனமழை கொட்டியது. தேங்காப்பட்டணம் அருகே உள்ள முள்ளூர்துறை கடற்கரை கிராம பகுதியில் அரையான்தோப்பு என்ற இடத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் கடல் அரிப்பு தடுப்புசுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும் போது அங்குள்ள 50& க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அரையான்தோப்பு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. நேற்று சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அந்த பாதையில் இயக்கப்படவில்லை. இந்த வழியாக பல கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பல பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை பகுதிகளுக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.

‘ஏ’ குடும்பம் : அம்மா பெருமிதம்

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் ரெண்டால். நர்சாக வேலை பார்க்கிறார். இவரது பெண்கள் அலிசியா (27), அமண்டா (26), கிம்பர்லி (22). மூன்று பேரும் ஆபாச படங்களில் நடிப்பவர்கள்.
இதுபற்றி அமண்டா கூறியதாவது:
பள்ளியில் படிக்கும் காலத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அசத்துவேன். காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைக்கும் அளவுக்கு வேகமாக தயாராகி வந்தேன். பிறகு பள்ளியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, படிப்பை நிறுத்திவிட்டேன். எதிர்பாராதவிதமாக ஆபாச பட நடிகை ஆகிவிட்டேன். பேப்ஸ்டேஷன் ஆபாச நிகழ்ச்சியில் 7 ஆண்டுகளாக நடித்து வருகிறேன்.
அதற்கு அப்புறம், அக்கா அலிசியாவும் இத்துறைக்கு வந்துவிட்டார். பிரிட்டனின் முன்னணி ஆபாச நடிகைகளில் அக்கா அலிசியாவும் ஒருத்தி. தங்கை கிம்பர்லியும் தற்போது ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறாள். இதில் என்ன தவறு இருக்கிறது?
அம்மா தான் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம், “என் 3 பெண்களும் ஆபாச பட நடிகைகள். வாழ்க்கை நடத்த சொந்தக் காலில் நிற்கிறார்களே, அதுவே பெருமைக்குரிய விஷயம்தான்” என்று பெருமை பொங்க சொல்கிறார்.
வெளிநாட்டில் தானே என்று நினைத்து கொள்ளாதீர்கள். தற்பொழுது ஹிந்தி colours என்னும் சேனல் - ல் ஒளிபரப்ப பட்டு வரும் Big Boss ரியாலிட்டி ஷோ - வில் Indo கனடியன் (பஞ்சாப்யை சேர்ந்த தாய் தந்தைக்கு பிறந்து கனடா வில் வளர்ந்த ) Sunny Leone பங்கு பெற்றுள்ளார்.
என்ன கொடும சார்?????  என்ன கலாச்சாரம் சார்?????

கலக்குகிறார் சிறுமியான சிறுவன்

ஜாஸ் (11)
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜாஸ் (11). இசை, நடனம் என கலக்கி வருகிறார். ஆண் குழந்தையாக பிறந்த இவரிடம் நாள் ஆகஆக மாற்றங்கள் தெரிந்தன. தன்னை சிறுமி போல உணரும் அவரை சிறுமியாகவே வளர்த்து வருகின்றனர் பெற்றோர். “என்னை போல உலகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வெறுக்காமல் அரவணைத்து செல்ல வேண்டும். சாதாரண ஹார்மோன் சிகிச்சைகள் மூலம் இதை சரிசெய்துவிட முடியும்” என்று டிவி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார் ஜாஸ். 

Tuesday 29 November 2011

N.S.K (Nagercoil Sudalaimuthu Krishnan) 103 years

Kalaivanar
D.O.B : November 29, 1908.


Actor N.S.Krishnan Birthday is celebrated every year on Nov 29. Let us collect little knowledge about this Actor.


1. Villu Paatu is the first movie in which N S Krishnana started his career as an Artist


2. Menaka (1935) is the first movie in which he made his acting debut as an Actor.


3. T.A Madhuram was the popular actor in his day with whom he has acted in many films.


4. Haridas (1944) is the film first time in Tamil Cinema which ran successfully for 110 weeks in Chennai Broadway Talkies


5. In 1936 he acted his first film with M.G.R in Sathi Leelavathi


6. In 1952 he acted his first film with Sivaji Ganeshan in Panam


7. He also acted in two Telugu films apart from Tamil movies. They are Bagya Lakshmi (1943) and Governors Cup (1955)

‘நமக்கு நாமே’ கல்லறை!


இவர்கள் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த கையுண்ணி பைங்காள் பகுதியை சேர்ந்த தம்பதி திம்மையா (82) & லட்சுமியம்மா (77). பின்னால் இருப்பது.. தங்களுக்காக அவர்களே கட்டி வைத்திருக்கும் கல்லறை. மறைவு தேதிக்கு மட்டும் இடம் விட்டு, பெயர் கல்வெட்டுகூட பதித்து வைத்துவிட்டார்கள். நான் கோயில் கட்டி கும்பிடும் பகவதி அம்மன் ‘என்னைவிட்டு எங்கும் போய்டாத’னு கனவுல சொன்னா. அதனாலதான் இந்த ஏற்பாடு என்கின்றனர்.
நன்றி : தினகரன் Nov 29

கடலோர காவல்படை மனு : மீனவர்களிடையே கொந்தளிப்பு


இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின், தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை தாக்குவது தொடர் கதையாகியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் குறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை, கடலோர காவல் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இந்திய கடலோர காவல் படை தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கின்றனர்.
இலங்கை கடல் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். என குறிப்பிட்டது. இதை ஏற்காத ஐகோர்ட், தனது தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
மேலும், கடலோர காவல் படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாட்டின் பாதுகாப்பு கருதி, குஜராத் & பாகிஸ்தான் எல்லையில் மீன்பிடி இல்லா மண்டலம் உருவாக்கப்பட்டு இருப்பதை போல், தமிழக & இலங்கை கடற்பகுதியை மீன்பிடி இல்லா மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடலோர காவல் படை தாக்கல் செய்துள்ள இம்மனுவை திரும்ப பெற வலியுறுத்தி, ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு மீனவர் நலச்சங்க ஆலோசகரும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவருமான தேவதாஸ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மீனவர் நலச்சங்க பொதுச்செயலாளர் போஸ், ராமேஸ்வரம் மீனவர் நலச்சங்கத்தலைவர் எமரிட் உள்பட 13 மீனவர் சங்க பிரதிநிதிகள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேவதாஸ் கூறுகையில், “உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்திய கடலோர காவல் படை தாக்கல் செய்த மனு தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலோர காவல் படையின் இச்செயல்பாடு, இலங்கை ராணுவத்துக்கு சாமரம் வீசுவது போல் உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் கடலோர காவல் படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால், தமிழகம் முழுவதும் மீனவர்களை ஒருங்கிணைத்து, பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.
நன்றி : தினகரன் Nov 29

சபரிமலை : 2026 வரை முன்பதிவு முடிந்தது

சபரிமலையில் படி பூஜைகள் முன்பதிவு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதற்கான முன்பதிவு 2026ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துவிட்டது. உதயாஸ்தமன பூஜை முன்பதிவு 2017 வரையும் முடிந்துவிட்டது.  
படிபூஜைக்கு 40 ஆயிரமும், உதயாஸ்தமன பூஜைக்கு 25 ஆயிரமும் வழிபாடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பூங்காவனத்தில் உள்ள 18 மலை தேவதைகளுக்காக இது நடத்தப்படுகிறது. முன்பு 12 வருடங்களுக்கு ஒரு முறை படிபூஜை வழிபாடு நடந்து வந்தது. இதற்காக பக்தர்கள் எண்ணிக்கை பெருகியதை தொடர்ந்து மாதம்தோறும் மாத பூஜைக்கு நடை திறப்பு நடக்கின்ற ஐந்து நாட்கள் படிபூஜை நடக்கிறது.
நினைத்த காரியம் நிறைவேற நடத்தப்படும் முக்கிய வழிபாடு உதயாஸ்தமன பூஜையாகும். உஷபூஜையும், உச்சபூஜையும் தந்திரி தலைமையில் நடைபெறுகின்ற பூஜைகளாகும். இதர 16 பூஜைகளும் மேல்சாந்தியால் நடத்தப்படும்.
நன்றி : தினகரன் Nov 29

புயல்சின்னம் : மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல்சின்னம் காரணமாக பெய்து வந்த மழை குறைந்தபோதும் பலத்த காற்று எச்சரிக்கை தொடருவதால் குமரி மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இடம்பெயர்ந்ததால் குமரி மாவட்டத்தில் நேற்று மழையின் தீவிரம் குறைந்திருந்தது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும், அவ்வப்போது சாரல் மழை தொடருவதுமாக இருந்தது. பிற்பகல் முதல் வெயிலடிக்க துவங்கிவிட்டது. தொடர் மழை காரணமாக மீனவர்கள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்றிருந்த மீனவர்களும் கரைதிரும்பிவிட்டனர். நேற்று புயல்சின்னம் மாறி மழையின் தீவிரம் குறைந்தபோதும் கடலோர பகுதிகளில் மணிக்கு 44 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று மீன்வளதுறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இது தொடர்பான அறிவிப்பு நேற்று இரவு வரை அமலில் இருந்தது என்பதால் மீனவர்கள் நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கட்டுமரங்கள் கரையோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது. குளச்சல் பகுதியிலும் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கட்டுமரங்கள் நிறுத்திவிடப்பட்டிருந்தன.
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குளச்சலில் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
மழைக்காலம் துவங்கிய கடந்த 25ம் தேதி அன்று மீனவர்கள் காலையில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை. நேற்றும் மீன்பிடிக்க செல்லாததால் 3 வது நாளாக மீன்பிடி தொழில் முடங்கியிருந்தது.
தொடர் மழை காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 29.50 அடியாக இருந்தது. அணை க்கு வினாடிக்கு 1146 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 61.20 அடியாக இருந்தது. அணைக்கு 1530 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்&1ல் 5.22 அடியும், சிற்றார்&2ல் 5.31 அடியும் நீர்மட்டம் இருந்தது. பொய்கை அணை நீர்மட்டம் 11.80 அடியாக உயர்ந்தது.
மாவட்டத்தில் பேச்சிப்பாறையில் 20, பெருஞ்சாணியில் 26, சிற்றார்&1ல் 12, நாகர்கோவிலில் 15, பூதப்பாண்டியில் 27.4, சுருளோட்டில் 25.4, கன்னிமாரில் 18.4, குளச்சலில் 68, அடையாமடையில் 43, கோழிப்போர்விளை 26, திருவட்டார் 90, முள்ளங்கினாவிளை 36.2 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. இதற்கிடையே மழையால் சேதமடைந்த படகுகள், இடிந்து விழுந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணிகளில் வருவாய்துறை, மீன்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி : தினகரன் Nov 29

Tuesday 22 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 8

மனைவியின் அன்பு
இரவில் மடித்துவைக்கப்பட்டிருந்த இருந்த போர்வை ...... 
காலையில் என் கழுத்துவரை போர்த்தப்பட்டிருந்ததில் 
புலனானது மனைவியின் அன்பு

#############################

பொய்க்கால் குதிரை
கால் மட்டுமே மெய்யான .விளையாட்டுக்கு அது ...
பெயர் ஏனோ, பொய்க்கால் குதிரை என்று

#############################

விடுதலை
என் மகள் தினமும் நச்சரிக்கிறாள்... அவள் சட்டைப்பையில், 
வரையப்பட்ட முயலை விடுவிக்கச்சொல்லி ..

#############################

பெண்
கோட்டை தாண்டிவிட்டாள்... 
விளையாட்டில் இருந்து நீக்கப்பட்டேன் .. 
பெண் விளையாட்டிலும் தாண்டக்கூடாது கோட்டை
படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...

அவளின் கிறுக்கல்கள் - 7

குழந்தையின் கிறுக்கல்கள்
குழந்தை இல்லாத குடும்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியது 
கிறுக்கல்கள்களை தொலைத்த வீட்டுச்சுவர்கள்

#############################

ஐயனார்
நிலம்வாங்க வசதி இல்லை.............
ஊரின் எல்லையில் பாவம் ஐயனார்

#############################

பாவனை ஜெயித்தது
வலிப்பதாய், பாவனை செய்த உன்னிடம் தோற்றுப்போனது ............
நிஜமாய் வலித்த வலி

#############################

என் கவிதைகள்
என் கவிதைகள் கழுதை போல................ 
தினமும் நிறைய காகிதம் சாப்பிடுகின்றன

படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...

Tuesday 15 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 6

காதல் காட்டில்

www.sevai.net.in
காதல் காட்டில் மட்டும்......
மான்கள் வலைவிரிக்க,
வேடர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்...

#############################

காதல்

www.sevai.net.in
காதலும் குழந்தையும் ஒரே மாதிரி ...
 குழந்தை சிரித்தாலும் அழகு ,அழுதாலும் அழகு...

#############################

அப்பா-வின்

www.sevai.net.in
ஒவ்வொரு சிறுவனும் போட்டுப் பார்க்க தவறுவதில்லை...
அப்பாவின் பெரிய காலணியை...

#############################


அப்பா

www.sevai.net.in
ஆய்வு கூடத்தில் அப்பா விட்ட ராக்கெட்டை விட...
அடுத்தவீட்டு கூரைக்கு நான் விட்ட காகித ராக்கெட் அப்பாவுக்கு மிகுந்த குதூகலத்தை கொடுத்தது ...

#############################


கண்ணீர்

www.sevai.net.in
கண்ணீர் எப்போதும் ஒன்றுதான் நாம் தாம் வகைப்படுத்துகின்றோம் ....
ஆனந்தக் கண்ணீரிலும் உப்புக்கரிக்கின்றேதே

படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...

Monday 14 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 5

காதலும் கண்களும்

காதலுக்கும் கண்களுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு........... 
கண்களில் தொடங்கி கண்ணீரில் முடிவது தானே?

#############################

அழுக்கு சட்டை


நீ இல்லாத இரவில்................... 
உன் அழுக்கு சட்டை தரும் தைரியத்தை உன் ஆளுயர்ந்த நாய் தரவில்லை

#############################

கைகள்


காதுகள்.. கண்களுக்கு அருகில் இருந்து என்ன பயன்?.. .. 
நான் அழும் போது எங்கோ இருக்கும் கைகள் தானே கண்ணீரை துடைக்கின்றன?

#############################

நல்ல சாதி


எவன் நல்லவனோ அவனே நல்ல சாதி............
ஆசானும் வலியுருதினார் சாதியை

படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...

Wednesday 9 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 4

புத்தன்

அக்கிரமங்கள் புத்தன் கண்ணுக்கு முழுதாய் தெரியவில்லை.......... அரைக்கண் மூடி இருப்பதால்...

#############################

கடாவெட்டி திருவிழா

கடாவெட்டி திருவிழா காளி கோவிலில் கடாவுக்கு அருளில்லை காளியிடம்....!!!

#############################


புள்ளி மான்

மான் என்ன குற்றம் செய்தது இயற்கையாகவே அதுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தபட்டிருக்கிறதே???


#############################


யார் முட்டாள்??


நானும் அண்ணாவும் சண்டை பிடித்தோம்... நீ முட்டாள் என்றான் அவன்.. இல்லடா நீ முட்டாள் என்றேன் நான்.. மாறி மாறி முட்டாள் என்று சண்டை போட்டு கொண்டோம்.. அப்பா வந்தார் . நான் ஒருத்தன் இருக்கிரன்ல..? 



படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...
..

Tuesday 8 November 2011

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை - இன்று பேச்சுவார்த்தை

U†‡V Œ“QŸ hµ CÁ¿ UÖŒX hµ°PÁ ÚTorYÖŸ†ÛR

iPjh[• A„ –Á ŒÛXV ‘WopÛ] h½†‰ U†‡V AWNÖ¥ ŒV–eLTyP 15 ÚTŸ Œ“QŸ hµ«]Ÿ CÁ¿ ÙS¥ÛX Y£f\ÖŸL·. AYŸL· ÙS¥ÛX LÙXePŸ RÛXÛU›XÖ] UÖŒX hµ«P• ˜efV ÚTorYÖŸ†ÛR SP†‰f\ÖŸL·.





U†‡V Œ“QŸ hµ

iPjh[• A„–Á ŒÛXV• ÙRÖPŸTÖL, UeLºeh H¼Ty|·[ AoN†ÛR ÚTÖehYR¼h 15 ÚTŸ ÙLցP hµÛY U†‡V AWr ŒV–†‰ E·[‰. C‹R hµ CÁ¿ (ÙNªYÖšefZÛU) LÖÛX 11 U‚eh ÙS¥ÛX LÙXePŸ A¨YXL†‰eh Y‹‰, UÖŒX AWpÁ hµ«]£PÁ ÚTorYÖŸ†ÛR SP†‰f\ÖŸL·.

UÖŒX AWr hµ«¥ LÙXePŸ CWÖ.ÙN¥YWÖÇ, UÖYyP ÚTÖ§Í s‘W| «^ÚV‹‡W ‘R¡, Š†‰ehz UÛ\ UÖYyP ‘c CYÖÁ A•“ÚWÖÍ, RjLWÖÇ, “ÐTWÖVÁ, ÛUTÖ Ú^rWÖÇ BfV 6 ÚTŸ CP• ÙT¼¿ E·[]Ÿ. CYŸL· U†‡V AWr Œ“QŸ hµ°PÁ ÚTor YÖŸ†ÛR SP†‰f\ÖŸL·.

LÙXeP¡P• BÚXÖNÛ]

iPjh[• A„ –Á ŒÛXV ÚTÖWÖyPehµ J£jfÛQTÖ[Ÿ ERVhUÖŸ, “ÐTWÖVÁ, Yeg¥ pYr‘WU‚VÁ, ÛUTÖ Ú^rWÖÇ, WÖ^¦jL• BfÚVÖŸ ÚS¼¿ LÙXePŸ A¨YXL†‰eh Y‹‰, LÙXeP¡P• ÚTorYÖŸ†ÛR SP†‡]ÖŸL·. UÖYyP Y£YÖš A¨YXŸ EUÖUÚLrY¡, LÙXeP¡Á ÚSŸ˜L ER«VÖ[Ÿ N‹‡WÚNLWÁ, LÙXePŸ A¨YXL ÚUXÖ[Ÿ ‡VÖLWÖ^Á BfÚVÖŸ AÚTÖ‰ EPÁ C£‹R]Ÿ.

ÚTorYÖŸ†ÛR

C‰ h½†‰ iPjh[• ÚTÖWÖyPehµ J£jfÛQTÖ[Ÿ ERVhUÖŸ Œ£TŸL¸P• i¿•ÚTÖ‰, "U†‡V AWr hµ«]£PÁ, UÖŒX hµ«¥ CP• ÙT¼¿ E·[ GjL· ÚTÖWÖyPe hµÛY ÚNŸ‹R ÛUTÖ Ú^rWÖÇ, “ÐTWÖVÁ BfV 2 ÚT£• LX‹‰ ÙLց| ÚTor YÖŸ†ÛR SP†‰YÖŸL·. AÚTÖ‰ A„ EÛX L³°LÛ[ GTz AL¼¿Y‰ GÁT‰ E·TP 30 ÚL·«LÛ[ R–³¨•, BjfX†‡¨•, UÛXVÖ[†‡¨• ÚLyÚTÖ•,'' GÁ\ÖŸ.

Monday 7 November 2011

அவளின் கிறுக்கல்கள் - 3

விலைமகள் 


விலைமகள் மறைத்துக்கொள்கிறாள் எப்போதும் அவள் அக நிர்வாணத்தை

#############################


கணவன் மனைவி

மனைவியும் கணவனும் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் ...என்னிடம் நீயும் உன்னிடம் நானும் எதையும் மறைபதில்லை என..

#############################



அப்பா

எந்தவொரு உலங்கு வானூர்த்தி பயணமும் அப்பாவின் உப்பு மூட்டைக்கும் சமமில்லை

#############################

அடைகாத்த நினைவுகள்


நான் அடைகாத்த உன் நினைவுகளை பருந்தென வட்டமிட்டுய் கொத்திக்கொள்கிறாய்
படைப்பு : அவள்  ??
#############################
இந்த வரிகள் அனைத்தும் என்னை கவர்ந்த வரிகள் .... உங்களையும் கவரும்.... நன்றி...