Friday 9 December 2011

24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி எண்

சென்னையில்  24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கலாம். குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.
வடக்கு மண்டலம் 90031 30104, 
தெற்கு மண்டலம் 90031 30102, 
கிழக்கு மண்டலம் 90031 30101, 
மேற்கு மண்டல மக்கள் 98408 24100 
போக்குவரத்து பிரச்னைகள் 90031 30103
குறுஞ்செய்திகள் 95000 99100 என்ற எண்ணுகளுக்கு அனுப்பலாம்.
சென்னை போலீஸ் தெற்கு, வடக்கு, மத்திய என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்கள் அவசர இலவச அழைப்பான 100ஐ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் தற்போது தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொது மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு செல்போன் எண் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் குறைகளை தெரியபடுத்தவும், அவசர தேவைக்கும் தொடர்பு கொள்ளலாம். குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமும் தகவல் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் தகவல்களை தெரிவிக்கலாம்.  (தினகரன்)

No comments:

Post a Comment