Friday 9 December 2011

ஓட்டல்கள், கடைகளை போலீசார் சூறையாடினர் : லஞ்சம் கொடுக்காததால் ஆத்திரம்

மாமூல் கொடுக்காததால் திண்டி வனத்தில் ஓட்டல் மற்றும் கடைகளை போலீசார் சூறையாடினர். இதை கண் டித்து கடை உரிமையாளர் கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எடைக்குளம் கூட்டுரோடு புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற் பட்ட கடைகள் சாலையின் இருபுறமும் உள்ளன. இதில் டீக்கடை, ஓட்டல், கூல் டிரிங்ஸ் உள்ளிட்ட கடை கள் அடங்கும்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜீப்பில் வந்த இரண்டு போலீசார் 10க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் அத்துமீறி நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தோசை மாவு, சட்னி, சாம் பார் உள்ளிட்டவைகளை வெளியில் வீசினர். அங் கிருந்த டேபிள், சேர், டியூப் லைட் உள்ளிட்ட பொருட் களை அடித்து நொறுக் கினர்.
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு, மாமூல் கொடுக்காததால் இதனை செய்தோம் என தெரிவித்தார்களாம்.
மேலும் நியாயம் கேட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 10 பேரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காவல் நிலை யத்தில் வைத்து தாக்கி உள்ளனர். இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத் திருந்து நேற்று காலை அவர்களை விடுவித்துள் ளனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் புதுவை&திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தக வல் அறிந்து சம்பவ இடத் துக்கு வந்த டிஎஸ்பிக் கள் திண்டிவனம் குப்புசாமி, கோட்டக்குப்பம் முரு கேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் காவல்துறை சார் பில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து கடைக் காரர்கள் மறியலை கைவிட்டனர்.  (Dinakaran)
சிந்திப்போம். தெளிவடைவோம்
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு, மாமூல் கொடுக்காததால் இதனை செய்தோம் என தெரிவித்தார்களாம்.
** போலீசார் பொது இடத்தில் அப்படி வெளிபடையாக சொல்வார்களா???
** போலீசார் இத்தனை அட்டூழியங்களை செய்யும் வரை அனைவரும் பார்த்து கொண்டா இருந்தார்கள்???
இவையனைத்தும் உண்மை எனில் போலீசின் செயல் கண்டிக்கப்பட வேண்டிய செயல்தானே???.

No comments:

Post a Comment