Friday 9 December 2011

15ம் தேதி கடைசி நாள் : பென்ஷன்தாரர் உறுதிமொழி படிவம்


பென்ஷன்தாரர்கள் உறுதிமொழி படிவத்தினை வரும் 15-ம் தேதிக்குள் பென்ஷன் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்புநிதி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். திருச்சி துணை மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இருந்து வங்கி மூலமாக மாதாந்திர பென்ஷன் பெறும் பென்ஷன்தாரர்கள், தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான உறுதிமொழிப் படிவத்தை வங்கியில் பெற்று பூர்த்தி செய்து வரும் 15-ம் தேதிக்குள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தில் முகவரி, செல்போன் நம்பர் தவறாமல் குறிப்பிடவேண்டும். இந்த தகவலை திருச்சி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் சுதீப்தா கோஷ் தெரிவித்து உள்ளார்.
இந்த செய்தி உங்களை சார்ந்ததாக இல்லை எனினும் பிறருடன் பகிருந்து கொள்ளுங்கள். இதை பற்றி அறியாமல் இருக்கும் சிலர் இதை அறிய கூடும். அரசு ஊழியர்கள் லஞ்சம் என்ற பெயரில் முதியவர்களை அலைகளிக்கும் குற்றம் சிறிதாவது குறையும்.

No comments:

Post a Comment