Monday 19 December 2011

ஒபாமா குழந்தைகள் பேஸ்புக் பயன்படுத்த தடை

இன்னும் 4 ஆண்டுகளுக்கு பேஸ்புக் பயன்படுத்தக் கூடாது என்று தனது 2 பெண் குழந்தைகளுக்கும் அமெரி க்க அதிபர் ஒபாமா தடை விதித்துள்ளார்.
பேஸ்புக் உள்பட சமுக இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக் கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, கட ந்த 2008 தேர்தலின் போது, தனது பிரசாரத்திற்கு இந்த இணையதளங்களை அதிக அளவில் பயன்படுத்தினார். அதிபரான பின்பு, முதலாவது "சோஷியல் மீடியா பிரசி டென்ட்" என்று பாராட்டு பெற்றார். அப்படிப் பட்டவர் இப்போது தனது 2 பெண் குழந்தைகளுக்கும் பேஸ்புக் பயன்படுத்த தடை விதித்துள்ளார். ஒபாமா & மிச்சேல் தம்பதிக்கு மாலியா(13), சாஷா(10) என 2 பெண் குழந்தைகள். இருவரும் மிகவும் சுட்டி. ஆனாலும், இருவரையும் கட்டுப் பாடாக வளர்க்கின் றனர் ஒபாமா தம்பதி.
குழந்தைகள் இருவரும் இன்னும் 4 ஆண்டுகளுக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களை பயன் படுத்தக் கூடாது என்று ஒபாமா தடை விதித்து ள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘எங்களுக்கு யாரென்றே தெரியாத எத்தனையோ பேர் எங்கள் குடும்ப விவரங்களை அறி ந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை வெளியிடுவதில் அர்த்தம் எதுவும் இல்லை. இன்னும் 4 ஆண்டுகள் அவர்கள் காத்திருக்கட்டும்’ என்றார்.

No comments:

Post a Comment