Wednesday, 7 December 2011

தூத்தூர் கிராமத்தில் புகையிலை, பாக்கு பொருட்களுக்கு தடை : வீதியில் கொட்டி தீ வைத்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவர் கிராமத்தில் கேன்சர் நோயை உருவாக்கும் புகையிலை, பாக்கு பொருட்களுக்கு தடை விதித்துள்ளனர். இதையெட்டி இன்று காலை ஊராட்சி தலைவர் ஜான் அலோசியஸ், பாதிரியார்கள் சனு, எபிரேன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அப்பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள், பான்பராக் மற்றும் பாக்கு வகை களை எடுத்து வீதியில் குவித்து தீ வைத்து கொளுத்தினர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஜான் அலோசியஸ் கூறியதாவது, தூத்தூர் ஊராட்சியில் புகையிலை பொருட்கள், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பாக்கு வகைகள் விற்க தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக தூத்தூர் கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படப்படியாக மற்ற இடங்களு க்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கு சுயஉதவிக்குழுக்கள், பாதிரியார்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். தூத்தூர் ஊராட்சி பகுதியை இதில் முன்மாதிரியாக மாற்றுவோம் என்றார்.

பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு : ஜப்பான் நிறுவன 4 லட்சம் டின் வாபஸ்

குழந்தைகளுக்கான பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், ஜப்பானை சேர்ந்த மெய்ஜி நிறுவனம் விற்க அனுப்பப்பட்ட 4 லட்சம் டின்களை திரும்ப பெறுகிறது. இது ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் கடந்த மார்ச் 11&ம் தேதி பயங்கர பூகம்பமும் தொடர்ந்து பயங்கர சுனாமியும் ஏற்பட்டது. பல நகரங்களில் பேரழிவு ஏற்பட்டது. புகுஷிமா நகரில் உள்ள டாய்ச்சி அணு உலை பாதிக்கப்பட்டது. அணுஉலையை குளிர்விக்கும் கருவிகள் செயலிழந்ததால், கதிரியக்க தனிமங்கள் உருகின. கதிரியக்கமும் வெளியேறியது. பசிபிக் பெருங்கடல் வழியாக இந்த கதிரியக்க பாதிப்பு பரவுவதாக கூறப்பட்டது. மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள், டீ, பால் ஆகியவற்றில் கதிரியக்க பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கதிரியக்க தன்மை இருந்தாலும், அபாயகரமான அளவுக்கு இல்லை என்று அரசு தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில், மெய்ஜி என்ற நிறுவனத்தின் பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:  
மெய்ஜி பால் பவுடரில் கதிரியக்க சீசியம் தனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு கிலோ பால் பவுடரில் 200 பெக்கரல் என்ற அளவுக்கு சீசியம் இருக்கலாம் என்று ஜப்பான் அரசு கூறுகிறது. அதைவிட பல மடங்கு குறைவாக 30.8 பெக்கரல் அளவுக்கே எங்கள் பால் பவுடரில் சீசியம் உள்ளது. ஆனாலும், 4 லட்சம் டின்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். பால் பவுடர் தயாரிக்கும்போது அதை காயவைப்பதற்கு வெப்ப காற்று பயன்படுத்தப்படும். புகுஷிமா அணுஉலையில் இருந்து பரவிய கதிரியக்கம், காற்று மூலம் பால் பவுடரில் சேர்ந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
இவ்வாறு மெய்ஜி நிறுவன அதிகாரிகள் கூறினர். மெய்ஜி பால் பவுடர், ஜப்பானில் மட்டுமே விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.       (Tamil Murasu)

சரத்பவாரை அறைந்தது தப்பில்லை : அன்னா ஹசாரே

மத்திய அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்தது தப்பில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் மத்திய அமைச்சர் சரத்பவாரை சீக்கிய இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் இந்த சம்பவத்தை கண்டித்தனர். இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘ஒரு அறை தானா?’ என அன்னா பதில் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காந்தியவாதி என கூறிக் கொள்ளும் அன்னா, வன்முறையை ஊக்குவிக்கலாமா என அன்னாவின் ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்து சரத்பவார் தாக்கப்பட்டதற்கு அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்தார். சரத்பவார் சம்பவத்தை கேலி செய்யவில்லை என விளக்கம் அளித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அன்னா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்து:
மகாராஷ்டிராவில் கடந்த ஆட்சியின்போது தேசியவாத காங்கிரசை சேர்ந்த 3 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சவாந்த் கமிஷன், 3 அமைச்சர்களுக்கும் ஊழலில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தது. இதை தொடர்ந்து அவர்கள் பதவியிலிருந்து விலகினார்கள். ஆனால் அவர்கள் மீது சரத்பவார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஊழல்வாதிகளை காப்பாற்றும் பழக்கம் சரத்பவாருக்கு உள்ளது. அவரை அறைந்ததற்காக அரசியல்வாதிகள் கோபப்படுகிறார்கள். ஆனால் நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதற்காக அவர்கள் கோபப்படவில்லை. இளைஞர் எதற்காக அறைந்தார் என்பது குறித்து யோசித்து பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து வருகிறது. எல்லை மீறும் போது ஒரு சிலர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார். (Tamil Murasu)

சாகும் வரை உண்ணாவிரதம் : மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை 19ம் தேதிக்குள் மீட்காவிட்டால், ராமேஸ்வரத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமான விசைப்படகு மீனவர்கள், கடந்தமாதம் 28ம் தேதி கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் கிளாட்வின் என்பவரது படகில் இருந்த மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்தனர். இவர்கள் 5 பேர் மீதும், போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை ஊர்க்காவல் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட இவர் களது காவலை, வரும் 19ம் தேதி வரை நீட்டித்து, மல்லாகம் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. மீனவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவர்களை மீட்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர்.
தொடர் போராட்டத்தை கைவிடக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலெக்டர் அருண்ராய் தலைமையில் நேற்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆர்டிஓ முத்துக்குமரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். 14 மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய கலெக்டர், “இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க அங்கு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மீனவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றார். ஆனால் கலெக்டரின் வேண்டுகோளை மீனவர்கள் ஏற்க மறுத்தனர். மீனவர்களை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மீனவ சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை வரும் 19ம் தேதிக்குள் விடுதலை செய்யாவிட்டால், ராமேஸ்வரத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றனர்.

Web firms blamed : India vows crackdown on offensive internet content

Communications Minister Kapil Sibal met officials from Google, Facebook and other websites on Monday.
On Tuesday he said the firms had told him they were unable to take action.He said the government would introduce guidelines to ensure "blasphemous material" did not appear on internet. Doctored photos of the PM and Sonia Gandhi have angered the government.


Addressing a press conference in the capital, Delhi, on Tuesday, Mr Sibal said he had asked the companies in September to remove images and statements deemed offensive to religious groups, but that they had ignored his requests.

"At a meeting on 4 November, we showed them some of the photos and they too agreed that the photos were offensive," he said.
The minister accused the internet firms of not co-operating.

"They have given it to me in writing that they will not do anything until we get an order from the court," he said.

Mr Sibal said companies would not be allowed to say, "we throw up our hands, we can't do anything about this".

India has more than 100 million internet users and web companies say the large number means broad action is impossible.

Facebook said in a statement that it recognised the "government's interest in minimising the amount of abusive content available online".
But, it said, there were policies in place that enabled people to report abusive content.
"We will remove any content that violates our terms, which are designed to keep material that is hateful, threatening, incites violence or contains nudity off the service."
Facebook said it would "continue to engage with the Indian authorities as they debate this important issue".
India has 28 million Facebook accounts.
A spokesperson for Google was quoted by the Press Trust of India as saying that it did remove illegal material.
But the spokesperson added: "When content is legal and does not violate our policies, we will not remove it just because it is controversial, as we believe that people's differing views, so long as they are legal, should be respected and protected."
Rajesh Chharia, president of the Internet Service Providers Association of India, told Associated Press that internet companies should be aware of national security issues.
"I am not favouring censorship - self-regulation is the best censorship available to our system [but] we should not do anything which should harm the peace of the country."

Tuesday, 6 December 2011

Youngest Couple Married : Engaged Young Couple


Youngest Couple of the World
Every little girl dreams about her wedding day, complete with visions of a big beautiful white dress and, of course, the perfect man. But 9-year-old Jayla Cooper didn't have a lifetime to wait for Mr. Right.
 

The Southlake, TX, girl had been battling leukemia for two years, a battle that would end in just a matter of weeks. But what Jayla did have was a groom. He's her best friend, Jose Griggs, 7, a fellow patient at Children's Medical Center in Dallas.

Jayla and Jose tied the knot in February 2009 to fulfill her final wish: Getting married in a beautiful wedding, surrounded by family and friends. From the flowers to the banquet hall, donations poured in to give a North Texas bride the wedding of her dreams.

Jaila died on Wednesday, April 1, 2009.
============

Worlds Couple Engaged in Syria She's 3, He's 5
Hala and her fiance Khalid

Khalid's father Juma -- who lives in the city of Homs, some 100 miles north of Damascus -- told the paper that his son asked for his fellow kindergartner's hand in marriage "of his own free will," after a brief holiday romance. Both families are now reportedly preparing for the ceremony, which will take place in a decade, when Khalid is 15 and Hala 13. Such a ceremony would still be against Syrian law, which states the minimum age for marriage is 17 for women and 18 for men.

While child marriages aren't unknown in Syria's more remote rural regions -- ceremonies involving girls as young as 13 and boys age 15 have been known to take place in defiance of the law -- they're almost unheard of in its cities, where the average age of marriage for women is 25, according to rights organization Freedom House.

However, Juma has pledged that if the youngsters decide not to marry in a decade's time, he'll honor their request. "We know that Khalid or Hala might change their mind in the future," he said. "But what we do know at this stage is that they are very happy and talk to each other every day."

Exam for pilot licences goes online

In a bid to prevent pilots from getting licences through fraudulent means, Civil Aviation regulator DGCA on Dec 3rd started for the first time its online examinations for pilot licences.

The examinations for both Commercial Pilots Licence (CPL) and Airlines Transport Pilots Licence (ATPL) would be conducted till December 9, a Directorate General of Civil Aviation official said.
The examination are held at seven centres in six cities across the country including two online centres in Mumbai. 2,192 candidates are expected to appear for CPL test and another 1,339 for ATPL exam, the DGCA official said.
DGCA chief E K Bharat Bhushan had told PTI that introduction of the online test system was part of efforts to modernise the examination system for pilots. This time even the registration of candidates for the examinations had been conducted online, the official said.
The DGCA has been reviewing its procedures for conducting pilots' tests after a chance probe earlier this year had found that unscrupulous elements had managed to procure licences after bending rules.
The government had after the probe started plugging loopholes in the examination and licencing system for pilots.

யாரும் வன்முறையில் இறங்க வேண்டாம் : கேரள முதல்வர் உம்மன்சாண்டி வேண்டுகோள்

இடுக்கியில் போராட்டம்
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக & கேரள எல்லை யில் பதற்றம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் குமுளியில் தமிழக லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று அங்கு தமிழர்கள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களை துரத்தி துரத்தி ஒரு கும்பல் தாக்கியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் சுமூக தீர்வு காண, தமிழகம் மற்றும் கேரளா இடையே அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து இருமாநில நீர்வளத் துறை செயலாளர்களுக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை கேரளா வரவேற்கிறது. பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே கேரளா விரும்புகிறது. தமிழகத்துக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பதே கேரளாவின் நிலைப்பாடு. குமுளி மற்றும் கம்பம் மேடு பகுதியில் சில துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது. யாரும் சட்டத்தை கையிலெடுக்க அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.
முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் இன்று அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

NASA confirms another Earth (சுத்துகிறது இன்னொரு பூமி)

NASA has found a planet outside our solar system that looks to be an awful lot like Earth or maybe even better, given that its climate is roughly like a balmy day in Key West.
The planet, Kepler-22b, is the first confirmed planet within the "habitable zone," meaning that liquid water could exist on the surface and support life. It is almost 2.5 times the size of Earth and 600 light years away, so you may want to start saving your frequent flier miles now if you want your great-to-the-29th-power grandchildren to have a shot at vacationing there.
Scientists estimate the temperature on the surface of the planet to be about 72 degrees, according to the Associated Press. Kepler-22b circles a star very similar to our own sun, although it does it in a slightly shorter period, with one Kepler 22-b year lasting about 290 days.
Scientists say it's likely the planet has water and land, but can't yet rule out the possibility that it is an entirely gaseous planet, which would severely limit its potential as an intergalactic vacation destination.
NASA's Kepler mission is all about finding potentially habitable planets by identifying possible candidates in other solar systems that are both roughly Earth-sized and in the "habitable zone" of their solar systems. The mission's most recent data identifies 48 candidate planets, but Kepler 22-b is the first to be confirmed.
Tamil : [சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் உறுதிசெய்துள்ளது.
அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வேறு ஏதும் கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது. வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறைய பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.
அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கேமராக்கள் உறுதி செய்துள்ளன. சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உள்ளிட்ட அம்சங்களை பார்க்கும்போது, உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது. கெப்ளர் 22பி என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது.]

இடுக்கியில் 144 தடை : முற்றுகிறது முல்லை பெரியாறு பிரச்னை

ஐயப்ப பக்தர்கள் பீதி
(6.12.11) முல்லை பெரியாறு சர்ச்சையில் தமிழக & கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால், இடுக்கியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் கேரளா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேனியில் பீதியுடன் தங்கியுள்ளனர்.
பதில் தாக்குதலால் தமிழகத்திலும் பதற்றம் பரவுகிறது 
முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழக தென் மாவட்டங்களிலும், கேரளாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள இளைஞர் காங்கிரஸ், மாநில பாஜவினர் பெரியாறு அணையை இடிக்க முயன்றது தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகப்படுத்தி உள்ளது.
கேரளாவில் தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கியதாலும், டிரைவர்களை தாக்கியதாலும், கம்பம், கூடலூரில் நேற்று மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கூடலூரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையை 50க்கும் அதிகமான இடங்களில் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் உம்மன்சாண்டி உருவ பொம்மை எரிப்பு
நூற்றுக்கணக்கான பைக்குகளில் கம்பம் நகர் முழுவதும் இளைஞர்கள் வலம் வந்து கேரளாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கேரளா செல்ல முயன்ற பஸ்கள் மறிக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளிகளுக்கு நேற்று மதியம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பதற்றம் அதிகரித்ததை அடுத்து தமிழக & கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு பகுதிகளில் நேற்று கேரள போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால், தமிழகத்துக்கு உட்பட்ட கம்பம், கூடலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி கலெக்டர் பழனிச்சாமி, தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், திண்டுக்கல் எஸ்பி ஜெயச்சந்திரன், மதுரை சிறப்பு அதிரடிப் படை எஸ்பி ஈஸ்வரன், நெல்லை எஸ்பி விஜேந்திர பிதரி, விருதுநகர் எஸ்பி நஜ்மல் ஹோடா, ராமநாதபுரம் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் கம்பத்தில் முகாமிட்டுள்ளனர்
தமிழகத்தில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதால் நேற்று முதல் ஐயப்ப பக்தர்கள் யாரும் கேரளா செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை முதல் சபரிமலை செல்ல சாரை சாரையாக வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் மறித்து நிறுத்தி விட்டனர்.
உத்தமபாளையம் அருகே ஆலைமலையான்பட்டியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையை எரிப்பதற்காக ஊர்வலமாக எடுத்துவரும் மக்கள்.
தமிழக & கேரள எல்லையில் பதற்றம் நிலவுவதால் தேனி மாவட்டம் கம்பத்தில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதால் நேற்று முதல் ஐயப்ப பக்தர்கள் யாரும் கேரளா செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை முதல் சபரிமலை செல்ல சாரை சாரையாக வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் மறித்து நிறுத்தி விட்டனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 2 நாட்களாக கம்பம், கூடலூர் பகுதியில் தவித்து வருகின்றனர். இன்றும் அதே நிலை நீடித்தது. இதற்கிடையில் ஏற்கனவே சபரிமலை சென்ற ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்களும் திரும்பி வர முடியாமல் கேரளாவில் தவித்து வருகின்றனர்.
கேரளாவுக்கு செல்ல முடியாததால் பழநி கோயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது. பாளையம், தேவாரம், பெரியகுளம், சின்னமனூர், வீரபாண்டி என ஏராளமான ஊர்களில் உம்மன்சாண்டியின் உருவபொம்மையை இன்று மக்கள் தீயிட்டு கொளுத்தினர். தேனி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநில எல்லையில் வஜ்ரா, தீயணைப்பு வாகனங்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உத்தமபாளையம் டிஎஸ்பி ஸ்டாலின் தலைமையில் விடிய விடிய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கேரள நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல்
கேரளா சென்ற தமிழக தொழிலாளர்களின் ஜீப்களை நேற்று முன்தினம் சிறை பிடித்து ஒரு கும்பல் தாக்கியது. தகவல் பரவியதும் ஆத்திரம் அடைந்த மக்கள் கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் கேரள வாகனங்கள் அனைத்தையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவாரம், கம்பம் உள்ளிட்ட இடங்களில் கேரளாவை சேர்ந்த சிலர் நிதி நிறுவனங்கள், ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களை தாக்கிய பொதுமக்கள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சுக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட சில ஜீப்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன.   (Tamil Murasu)

தமிழகத்தில் மாவட்ட வாரியான மக்கள்தொகை : 15 -வது கணக்கெடுப்பு

2011 மார்ச் 31 -ம் தேதி வெளியிடப்பட்ட 15 -வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மக்கள்தொகை

சட்டவிரோதம் : ஊழியருக்கு கொடுத்த பணத்தை ஓய்வு பெற்ற பிறகு அரசு கேட்பது

பணியின் போது பெற்ற பணத்தை ஓய்வு பெற்ற பிறகு அரசு கேட்பது நியாயமற்றது , சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த கண்ணம்மாள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
நான் அரசு சுகாதார மையத்தில் மலேரியா ஓழிப்பு களப்பணியாளராக கடந்த 1969ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். எனது பணியை கடந்த 1978ம் ஆண்டு அரசு நிரந்தரப்படுத்தியது. இதனால் எனக்கு கடந்த 1969ம் ஆண்டில் இருந்து ஊதியம் கொடுக்கப்பட்டது.
கடந்த 32 ஆண்டுகளாக நான் அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய பிறகு கடந்த 2010ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெற்ற பிறகு அரசு எனக்கு ஒரு நோட்டீசு கொடுத்தது. அதில், கடந்த 1978ம் ஆண்டு தான் நான் பணியில் நிரந்தரப்படுத்தப்பட்டேன். ஆனால் கடந்த 1969ம் ஆண்டில் இருந்து பணி நிரந்ததரத்திற்கான ஊதிய பயனடைந்துள்ளது தவறானது, ஆகவே கடந்த 1969ம் ஆண்டில் இருந்து 1978ம் ஆண்டு வரை கூடுதலாக பெற்ற பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறியுள்ளது.
இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே 32 ஆண்டுக்கு பிறகு எனக்கு அரசு நோட்டீசு கொடுத்தது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து, மனுதாரர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசு நோட்டீசு கொடுத்தது சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் அரசுக்கு சேர வேண்டிய பணத்தை திரும்ப கேட்க கூடாது கூறியுள்ளது. எனவே 32 ஆண்டுகளுக்கு பிறகு மனுதாரரிடம் பணத்தை திரும்ப அரசு கேட்பது சட்டவிரோமானது.
ஆகவே அரசு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.

200 ஆண்டுகளுக்கு மேல் பயன்தரும் ‘ஜியோபேக்’ மூட்டைகள் உப்பு நீராலும் பாதிக்கப்படாது

தண்ணீரில் போட்டாலும் 200 ஆண்டுகளுக்கு மேல் பாதிப்பு ஏற்படாமல் மண் அரிப்பை தடுக்க உதவும் ‘ஜியோபேக்’ என்னும் பைபர் இழைகளால் ஆன பை, கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப் படுகிறது.
மழை மற்றும் வெள்ளம் ஏற்படும்போது வாய்க்கால், ஏரி மற்றும் நீர்நிலைகளின் கரைகள் எளிதில் உடையும். அப்போது பொதுப்பணி த்துறை சார்பில் மணல் நிரப்பப்பட்ட சாக்கு மூட்டைகள் கரை உடையும் இடத்தில் போடப்பட்டு உடைப்பு சரி செய்யப்படு வது வழக்கம். ஆனால், நீண்ட நாள் பயன்படும் வகையிலும், மண் அரிப்பை தடுக்கும் வகையிலும், ‘ஜியோபேக்’ வகை சாக்கு மூட்டைகளை பொதுப் பணித்துறையினர் தற்போது அறிமுகம் செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அளக்குடி என்ற இடத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி, கரையை பலப்படுத்தும் வகையில் கான்கிரீட் சிமென்ட் தூண் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. ஆற்றின் கரையை ஒட்டி, மண் அரிப்பை தடுக்கும் வகையில் ‘ஜியோபேக்’ என்ற வகை சாக்கு மூட்டைகளில் மணல் கொட்டி அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, கொள்ளிடம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மஜித் கூறுகையில், ஜியோபேக் என்பது கண்ணாடி நாரினால் (பைபர் கிளாஸ்) தயாரிக்கப்பட்ட பெரிய பை போன்றது.
இந்த பையில் மணலை நிரப்பி, தண்ணீரு க்குள் போட்டுவிட்டால் 200 ஆண்டுகள் ஆனாலும் பைக்கு பாதிப்பு ஏற்படாமல் அப்படியே இருக்கும். இதனால் மண் அரிப்பு நீண்ட காலத்திற்கு தடுக்கப் படும்.
இது உப்பு நீராலும் பாதிக்கப்படாது என்றார். (Dinakaran)

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால் எல்கேஜி மாணவன் மூச்சுத் திணறி சாவு :

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால், எல்.கே.ஜி. மாணவன் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான்.
சென்னை அடுத்த கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், தனியார் சாப்ட்வேர் கம்பெனி மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் களது மகன் ஹரீஸ் சாய்நாதன். மூன்றரை வயது சிறுவன். இவன் பல்லாவரம், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.
கிருஷ்ணகுமார், தனது மகனை நேற்று காரில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றார். ஹரீஸ், காலை 10.15 மணிக்கு பள்ளி வராண்டாவில் சக மாணவர்களுடன் வீட்டில் இருந்து கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப் பிட்டுக் கொண்டிருந்தான். வேகமாக சாப்பிட்டதாக தெரிகிறது.
அப்போது, எதிர்பாராதவிதமாக பழம் தொண்டையில் சிக்கியது. இதில் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் அவனுக்கு முதலுதவி செய்தனர். இருப்பினும், மூச்சுத் திணறல் நீடித்தது. பின்னர் வலிப்பு ஏற்பட்டது.
பயந்துபோன பள்ளி ஆசிரியர்கள், அவனை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதனை செய்த மருத்துவர் ஹரீஸ், ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், ஹரீஸ் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், ஹரீஸ் காலையில் என்னுடன் காரில் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தான். நான் வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில், அவன் இறந்து விட்ட செய்தி என்னை அதிர்ச்சியடைய செய்துவிட்டதாக கூறி கதறி அழுத்தார்.  (- தினகரன்)
"பெற்றோர்கள் எளிதில் ஜீரணம் ஆக கூடிய கடினமல்லாத உணவுகளை தங்கள் குழந்தைகளுக்கு தருவதன் மூலம் இதுபோன்ற இழப்பு /அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்"

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்று : அரசு புது உத்தரவு

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வு துறை தெரிவித்துள்ளது. இதற்காக, விண்ணப்பத்துடன் வழங்கப்பட்டுள்ள கூடுதல் படிவத்தில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கலர் புகைப்படம் ஒட்டி, தேர்வர்கள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்காமல், தனித்தேர்வராக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. வரும் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அன்றைய தினம் மாலை 5 மணிக்குள், விண்ணப்பம் விநியோகம் செய்த மையத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, தனித்தேர் வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத்தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. இதற்கு வசதியாக, தனித்தேர்வருக்கான விண்ணப்பத்துடன் கூடுதல் படிவம் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த படிவத்தில் தனித்தேர்வர்கள் தனியாக ஒரு கலர் புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். அந்த படிவத்தில் ஒட்டப்பட்ட புகைப்படத்தில் தேர்வர்களோ, அதிகாரிகளோ கையெழுத் திடத் தேவையில்லை. புகைப்படம், சமீபத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
புகைப்படம் ஒட்டப்பட்ட படிவம், தனித்தேர்வர் விண்ணப்பம் ஆகியவற்றில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடிக்கவோ, குண்டூசி குத்தவோ கூடாது. விண்ணப்பங்களை சேர்த்து அனுப்ப ‘ஜெம் கிளிப்’ மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். தேர்வரின் புகைப்படம்தான் படிவத்தில் ஒட்டப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட தேர்வரே, நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசுத்தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

புரோட்டா எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது : கன்னியாகுமரி வந்த ஹாலந்து மாணவிகள்

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மாரா, எலன், ப்ளூன், ஆகிய மாணவிகளும் தைஸ் என்ற மாணவனும் அங்குள்ள போன்றிஸ் பல்கலைக் கழகத்தில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் பற்றி படித்து வருகின்றனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஹாலந்து மாணவிகள் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று புரோட்டா தயாரிப்பது குறித்து மாஸ்டரிடம் கேட்டறிந்தனர்.
இவர்கள் நான்குபேரும் இந்தியாவில் இந்த சிகிச்சைபற்றிய பயிற்சி பெறுவதற்காக கடந்த மாதம் 3ம் தேதி இந்தியா வந்தனர். திருச்சியிலுள்ள புனித சிலுவை கல்லூரியில் இந்த துறை சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர்கள் கன்னியாகுமரியை சுற்றிப் பார்ப்பதற்காக நேற்று கன்னியாகுமரி வந்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், நாங்கள் முதன் முறையாக இந்தியா வந்துள்ளோம். தமிழகத்தில் பிரபலமான புரோட்டா எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புரோட்டாக்களை தயாரிக்க நாங்கள் கற்றுக்கொண்டோம்.
இந்திய நாடும், இந்த நாட்டின் கலாச்சாரமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. இந்தியாவில் உள்ள வானிலை எங்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
எல்லாவற்றிலும் மேலாக இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.6 வார காலம் இந்தியாவில் தங்கி இருந்து பயிற்சியை முடித்து எங்கள் நாட்டுக்கு செல்ல இருக்கிறோம். ஆனால் இந்தியாவையும் , இந்தியர்களையும் எங்களால் என்றுமே மறக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Monday, 5 December 2011

Couples meet after 60 years : Separated 3 days after Marriage

When Anna Kozlov caught sight of the elderly man clambering out of a car in her home village of Borovlyanka in Siberia, she stopped dead in her tracks, convinced her eyes were playing tricks. There, in front of her, was Boris, the man she had fallen in love with and married 60 years earlier. The last time she had seen him was three days after their wedding, when she kissed him goodbye and sent him off to rejoin his Red Army unit.


By the time he returned, Anna was gone, consigned by Stalin’s purges to internal exile in Siberia with the rest of her family as an enemy of the people. They left no forwarding address.

Frantic, Boris tried everything he could to find his young bride, but it was no good. She was gone.
Now, more than half a century later, they were reunited, an extraordinary coincidence leading them both to return to their home village on the very same day.

“I thought my eyes were playing games with me,” Anna said. “I saw this familiar looking man approaching me, his eyes gazing at me. My heart jumped. I knew it was him. I was crying with joy.”

Now 80 years old, Boris had returned to visit his parents’ grave. As he stepped out of the car, he looked up to see Anna standing by her old house, where they had lived for the few days after the wedding.

“I ran up to her and said: 'My darling, I’ve been waiting for you for so long. My wife, my life...’”

They stayed up all night, talking about everything that had happened to them and the cruel circumstances that tore them apart.

In 1946, they married. It was a hasty wedding; there was no time for anything else and they could not afford anything grand in those hard years after the war.

Three days later, he had to return to his unit. “We kissed goodbye - but I never expected we wouldn’t see each other for more than half a century,” Anna said.

A little while later, the state caught up with her. Like her father, she was branded an enemy of the people and forced with the rest of her family into internal exile in Siberia.

“I threatened to commit suicide rather than go because I couldn’t live without him,” she said, “but in the end I was forced to go. It was the most miserable time of my life.”
On his return, Boris was distraught. “She was always waiting for me when I came home, but this time there was no sign of her,” he said. “Nobody knew where they were, or what had happened to Anna. That’s how we lost any track of each other”.

In their new village, Anna’s mother resolved that the girl should remarry. She told her that Boris had remarried. “She said he had forgotten about me - that’s why no letters came.

“I didn’t believe it and I longed for him so much. But one day I got back home from work at a timber plant and my mum had burned all his earlier letters, poems and pictures - including our wedding photographs.

“She told me this other man was coming to meet me - and that I should go out with him, and if I was lucky, he’d marry me. I burst into tears and rushed into the yard. The world turned black for me. I wanted to die and I got a clothes line and went into the hayloft intending to hang myself.

“My mother came in and slapped me in the face and told me not to be so stupid. She persuaded me to go out with this man, Nefed, and gradually he and my mother persuaded me that this was where my future lay.”

Boris, too, finally gave in and re-married. He became a writer, penning a book dedicated to the woman he’d married as a young soldier but only ever spent three nights with.

In time, their respective spouses died. With the demise of the Soviet Union, Anna was once more able to travel home. Then came the chance reunion. “I felt the same when we met last year,” Boris said. “I couldn’t take my eyes off her. Yes I had loved other women when we were separated. But she was the true love of my life.”

He suggested they marry again. Anna resisted, but says he talked her round. “What’s the point, I said, we can just live together they rest of our lives? But he insisted. I never thought I’d be a bride at my age but it was my happiest wedding.

“Since we found each other again, I swear we haven’t had a single quarrel. We’ve been parted for so long and who knows how much is left for us, so we just don’t want to lose time on arguing.”

டிஜிட்டல் பப்ளிஷிங் பட்ட படிப்பு : அண்ணாமலை பல்கலை அறிமுகம்

அண்ணாமலை பல்கலைக்கழகம், டிஜிட்டல் பப்ளிஷிங் எனப்படும் கணினி வழி பதிப்புதுறை சார்ந்த இளநிலை பட்ட படிப்பை வேலை மற்றும் 100 சதவீத கல்வி உதவி தொகையுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆன்லைன் வழியாக கற்றுத் தரப்படும் இந்த படிப்பை, சென்னையை சேர்ந்த டிஜிஸ்கேப் கேலரி நடத்துகிறது. இதில் சேரும் தகுதி பெற்ற 40 மாணவர்களுக்கு ஜோவ் இந்தியா என்னும் பன்னாட்டு நிறுவனம், படிப்பில் சேர்ந்த முதல் நாளே முழு நேர வேலை வாய்ப்பை வழங்குவதோடு, அவர்களுக்கான 3 ஆண்டு கல்வி கட்டணமான ரூ.70 ஆயிரத்தையும் ஏற்றுக் கொள்கிறது.
12ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களும் பொதுவான பட்டதாரிகளும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். வரும் 10-ம் தேதி சேர்க்கைக்கான கடைசி நாள்.
பட்டப் படிப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வு, கணினி வழியாக நடத்தப்படும். நேர்காணல் மூலம் இறுதி தேர்வு நடக்கும். ஒரு மணி நேரம் நடக்கும் தகுதி தேர்வில் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை சார்ந்த வினாக்கள் இடம்பெறும். விண்ணப்ப படிவத்தை www.dpub.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 9710938631, 9710938632 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல்களை டிஜிஸ்கேப் கேலரி தெரிவித்துள்ளது. (Tamil Murasu)

What can we do to control the Price Hike? : A Moral Story.

A man eats two eggs each morning for breakfast. When he goes to the Grocery store he pays Rs. 12 a dozen. Since a dozen eggs won't last a week he normally buys two dozens at a time. One day while buying eggs he notices that the price has risen to Rs. 16. The next time he buys groceries, eggs are Rs. 22 a dozen.
When asked to explain the price of eggs the store owner says, "The price has gone up and I have to raise my price accordingly" .

This store buys 100 dozen eggs a day. He checked around for a better price and all the distributors have raised their prices. The distributors have begun to buy from the huge egg farms. 

The small egg farms have been driven out of business. The huge egg farms sell 100,000 dozen eggs a day to distributors. With no competition, they can set the price as they see fit.

The distributors then have to raise their prices to the grocery stores. And on and on and on.

As the man kept buying eggs the price kept going up. He saw the big egg trucks delivering 100 dozen eggs each day. Nothing changed there. 

He checked out the huge egg farms and found they were selling 100,000 dozen eggs to the distributors daily. Nothing had changed but the price of eggs.

Then week before Diwali the price of eggs shot up to Rs. 40 a dozen. Again he asked the grocery owner why and was told, "Cakes and baking for the holiday". The huge egg farmers know there will be a lot of baking going on and more eggs will be used. Hence, the price of eggs goes up.

Expect the same thing at Christmas and other times when family cooking, baking, etc. happen. This pattern continues until the price of eggs is Rs. 60 a dozen. The man says, " There must be something we can do about the price of eggs".

He starts talking to all the people in his town and they decide to stop buying eggs. This didn't work because everyone needed eggs.

Finally, the man suggested only buying what you need. He ate 2 eggs a day. On the way home from work he would stop at the grocery and buy two eggs. Everyone in town started buying 2 or 3 eggs a day.

The grocery store owner began complaining that he had too many eggs in his cooler. He told the distributor that he didn't need any eggs.
Maybe wouldn't need any all week.

The distributor had eggs piling up at his warehouse. He told the huge egg farms that he didn't have any room for eggs would not need any for at least two weeks.

At the egg farm, the chickens just kept on laying eggs. To relieve the pressure, the huge egg farm told the distributor that they could buy the eggs at a lower price.

The distributor said, " I don't have the room for the %$&^*&% eggs even if they were free". The distributor told the grocery store owner that he would lower the price of the eggs if the store would start buying again.

The grocery store owner said, "I don't have room for more eggs. The customers are only buying 2 or 3 eggs at a time. Now if you were to drop the price of eggs back down to the original price, the customers would start buying by the dozen again".

The distributors sent that proposal to the huge egg farmers but the egg farmers liked the price they were getting for their eggs but, those chickens just kept on laying. Finally, the egg farmers lowered the price of their eggs. But only a few paisa.

The customers still bought 2 or 3 eggs at a time. They said, "When the price of eggs gets down to where it was before, we will start buying by the dozen."
Slowly the price of eggs started dropping. The distributors had to slash their prices to make room for the eggs coming from the egg farmers. 

The egg farmers cut their prices because the distributors wouldn't buy at a higher price than they were selling eggs for. Anyway, they had full warehouses and wouldn't need eggs for quite a while. And those chickens kept on laying. Eventually, the egg farmers cut their prices because they were throwing away eggs they couldn't sell.

The distributors started buying again because the eggs were priced to where the stores could afford to sell them at the lower price. And the customers starting buying by the dozen again.

Now, transpose this analogy to the gasoline industry.

What if everyone only bought Rs 200.00 worth of Petrol each time they pulled to the pump? The dealer's tanks would stay semi full all the time. The dealers wouldn't have room for the gas coming from the huge tanks. The tank farms wouldn't have room for the petrol coming from the refining plants. And the refining plants wouldn't have room for the oil being off loaded from the huge tankers coming from the oil fiends.

Just Rs 200.00 each time you buy gas. Don't fill up the tank of your car. You may have to stop for gas twice a week, but the price should come down.

Think about it.

Also, don't buy anything else at the fuel station; don't give them any more of your hard earned money than what you spend on gas, until the prices come down..."

"Let's buy to Consume. Let's not Accumulate"