Monday, 5 December 2011

What can we do to control the Price Hike? : A Moral Story.

A man eats two eggs each morning for breakfast. When he goes to the Grocery store he pays Rs. 12 a dozen. Since a dozen eggs won't last a week he normally buys two dozens at a time. One day while buying eggs he notices that the price has risen to Rs. 16. The next time he buys groceries, eggs are Rs. 22 a dozen.
When asked to explain the price of eggs the store owner says, "The price has gone up and I have to raise my price accordingly" .

This store buys 100 dozen eggs a day. He checked around for a better price and all the distributors have raised their prices. The distributors have begun to buy from the huge egg farms. 

The small egg farms have been driven out of business. The huge egg farms sell 100,000 dozen eggs a day to distributors. With no competition, they can set the price as they see fit.

The distributors then have to raise their prices to the grocery stores. And on and on and on.

As the man kept buying eggs the price kept going up. He saw the big egg trucks delivering 100 dozen eggs each day. Nothing changed there. 

He checked out the huge egg farms and found they were selling 100,000 dozen eggs to the distributors daily. Nothing had changed but the price of eggs.

Then week before Diwali the price of eggs shot up to Rs. 40 a dozen. Again he asked the grocery owner why and was told, "Cakes and baking for the holiday". The huge egg farmers know there will be a lot of baking going on and more eggs will be used. Hence, the price of eggs goes up.

Expect the same thing at Christmas and other times when family cooking, baking, etc. happen. This pattern continues until the price of eggs is Rs. 60 a dozen. The man says, " There must be something we can do about the price of eggs".

He starts talking to all the people in his town and they decide to stop buying eggs. This didn't work because everyone needed eggs.

Finally, the man suggested only buying what you need. He ate 2 eggs a day. On the way home from work he would stop at the grocery and buy two eggs. Everyone in town started buying 2 or 3 eggs a day.

The grocery store owner began complaining that he had too many eggs in his cooler. He told the distributor that he didn't need any eggs.
Maybe wouldn't need any all week.

The distributor had eggs piling up at his warehouse. He told the huge egg farms that he didn't have any room for eggs would not need any for at least two weeks.

At the egg farm, the chickens just kept on laying eggs. To relieve the pressure, the huge egg farm told the distributor that they could buy the eggs at a lower price.

The distributor said, " I don't have the room for the %$&^*&% eggs even if they were free". The distributor told the grocery store owner that he would lower the price of the eggs if the store would start buying again.

The grocery store owner said, "I don't have room for more eggs. The customers are only buying 2 or 3 eggs at a time. Now if you were to drop the price of eggs back down to the original price, the customers would start buying by the dozen again".

The distributors sent that proposal to the huge egg farmers but the egg farmers liked the price they were getting for their eggs but, those chickens just kept on laying. Finally, the egg farmers lowered the price of their eggs. But only a few paisa.

The customers still bought 2 or 3 eggs at a time. They said, "When the price of eggs gets down to where it was before, we will start buying by the dozen."
Slowly the price of eggs started dropping. The distributors had to slash their prices to make room for the eggs coming from the egg farmers. 

The egg farmers cut their prices because the distributors wouldn't buy at a higher price than they were selling eggs for. Anyway, they had full warehouses and wouldn't need eggs for quite a while. And those chickens kept on laying. Eventually, the egg farmers cut their prices because they were throwing away eggs they couldn't sell.

The distributors started buying again because the eggs were priced to where the stores could afford to sell them at the lower price. And the customers starting buying by the dozen again.

Now, transpose this analogy to the gasoline industry.

What if everyone only bought Rs 200.00 worth of Petrol each time they pulled to the pump? The dealer's tanks would stay semi full all the time. The dealers wouldn't have room for the gas coming from the huge tanks. The tank farms wouldn't have room for the petrol coming from the refining plants. And the refining plants wouldn't have room for the oil being off loaded from the huge tankers coming from the oil fiends.

Just Rs 200.00 each time you buy gas. Don't fill up the tank of your car. You may have to stop for gas twice a week, but the price should come down.

Think about it.

Also, don't buy anything else at the fuel station; don't give them any more of your hard earned money than what you spend on gas, until the prices come down..."

"Let's buy to Consume. Let's not Accumulate"

Sunday, 4 December 2011

தமிழக ஜீப்களை மறித்து அடாவடி வசூல் : புதிய அணை கட்ட நிதி

பெண்களிடம் அத்து மீறல் : கம்பம் மெட்டு அருகே பதற்றம்
தமிழகத்திலிருந்து கேரள தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஜீப்புகளை கம்பம் மெட்டில் இன்று காலை வழிமறித்து, மிரட்டி கேரள கும்பல் பணம் பறிக்கும் அடிவாடியில் இறங்கியுள்ளது. மேலும் ஜீப்பில் இருந்த பெண்களை கீழே இழுத்து போட்டு வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. நில அதிர்வுகளால் அணை பலமிழந்து விட்டதாகவும் பேரழிவு ஏற்பட போகிறது என்றும் கேரள மக்களிடையே பீதி கிளப்பப்பட்டு வருகிறது. இதனால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், கேரளாவில், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. தமிழக பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நேற்று பெரியாறு அணைக்குள் அத்துமீறி புகுந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் தலைமதகு பகுதிக்குள் நுழைந்த அம்மாநில இளைஞர் காங்கிரசார் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அலுவலகங்களை சூறையாடினர். பணியில் இருந்த ஊழியர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்தனர். முன்னதாக ஊர்வலமாக வந்த போது, உருட்டுக்கட்டைகளை கொண்டு கண்ணில் தென்பட்ட தமிழ் விளம்பர போர்டுகளை உடைத்தெறிந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க பெரியாறு அணையில் நூற்றுக்கணக்கான கேரள போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் உச்சகட்டமாக தற்போது கேரள எல்லையில் தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் செயலில் இறங்கியுள்ளனர். தேனி மாவட்டத்தில் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பணை, மேட்டுக்குழி, மாழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலம், காபி தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
தோட்ட உரிமையாளர்கள் ஜீப்புகளை மாத வாடகைக்கு பேசி, தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்வர். தமிழ்நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜீப்புகள் கேரள மாநிலத்திற்கு தினசரி வேலையாட்களை ஏற்றி சென்று வருகின்றன.
இன்று காலை வேலையாட்களுடன் சென்ற ஜீப்புகளை கம்பம் மெட்டு கேரள எல்லையில் மறித்த சிலர், நாங்கள் புதிய அணை கட்ட வேண்டும். அதற்கு பணம் வசூலிக்கும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கேரள மாநிலத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் ரூ.100 தர வேண்டும் என்று தகராறு செய்தனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு, டிரைவர் அசோசியேசன் என்று மலையாளத்தில் அச்சடித்த ரசீதை கொடுத்தனர். அதில், எந்த பதிவெண்ணும் கிடையாது. இதனால் சந்தேகமடைந்த ஒரு சில ஜீப் டிரைவர்கள், பணம் கொடுக்க முடியாது என்றனர். ஆத்திரமடைந்த அக்கும்பல், வேனில் அமர்ந்திருந்த தமிழ் பெண்களை வெளியே இழுத்துப் போட்டு ரகளையில் ஈடுபட்டனர். பணம் கொடுக்காமல் யாரும் கேரளாவுக்குள் நுழைய முடியாது என்று எச்சரித்தனர். இதனால் மற்ற ஜீப்புகளில் அமர்ந்திருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கேரளா சென்ற ஜீப்புகளை மறித்து, பெண்களிடம் அத்துமீறி நடந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்லாமல் மீண்டும் வீடு திரும்பி விட்டனர். இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் கேரள மாநிலத்தவரின் அராஜக போக்கை தடுத்த நிறுத்த வேண்டும் என தமிழக மற்றும் மத்திய அரசை பல்வேறு அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.         (Tamil Murasu)

தோவாளையில் வரலாறு காணாத விலைஉயர்வு : மல்லிகை பூ கிலோ ரூ 2000

(4.12.11) குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. பெங்களூர், ஓசூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் இருந்து இங்கு பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், அதிக முகூர்த்த நாட்கள் இருப்பதாலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.
வழக்கமாக கிலோ ரூ.250, 300 ஆக இருக்கும் மல்லிகை பூவின் விலை, கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து ரூ.500 ஆக உயர்ந்தது. நேற்று 3 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ. 1500க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அது மேலும் அதிகரித்து கிலோ ரூ. 2000 என விற்கப்பட்டது. தோவாளை மார்க்கெட் வரலாற்றில் இது அதிகபட்ச விலையாகும்.
சபரிமலை சீசன், திருமண முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் மல்லிகை விலை வரலாறு காணாத உயர்வை அடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல் பிச்சி பூ கிலோ ரூ.625க்கு விற்கப்பட்டது. அரளி ரூ. 60, சம்பங்கி ரூ. 100, கிரேந்தி ரூ.40, வாடாமல்லி ரூ. 40, கோழிக்கொண்டை ரூ. 40க்கு விற்பனையானது. பனிப்பொழிவு அதிகரித்தால் பூக்களின் விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ், ரயில் விளம்பரத்தை பார்த்து ஏமாறாதீங்க : அதிர்ச்சி ரிப்போர்ட்

பஸ், ரயில், பொது இடங்களில், இப்படி ஒரு பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆட்கள் தேவை. இந்திய அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு ரூ.8,000 சம்பளம், முழு நேர பணிக்கு ரூ.12,000, ஞாயிறு மட்டும் ரூ.5,000 சம்பளம். வயது, கல்வி தடையில்லை� என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்.
அந்த விளம்பரத்தை பார்த்து போனால் என்ன நடக்கும் தெரியுமா...? ஏமாந்தவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா...? இதோ ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.
ஞாயிறு மட்டும் வேலை பார்த்தால் அஞ்சாயிரமா என்று நாமும் ஒரு விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தோம்.
அங்கு, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரே ஹாலில் அமர வைக்கப்பட்டிருந்தனர். முதலில் அட்மிஷன் பீஸ் என்று கூறி ரூ.20 வாங்கப்பட்டது.
பேச்சு திறமை மிக்க ஒரு நிர்வாகி இனிக்க, மணக்க, ருசிக்க பேசினார். அவர் பேசப்பேச இளைஞர்கள் முகம் பிரகாசம் அடைந்தது. ஏதோ அப்போதே தாங்கள் டாட்டா பிர்லா ஆகிவிட்டதாக பரவசம் அடைந்தார்கள் சிலர். அப்போது அந்த நிர்வாகி, அடுத்த அஸ்திரத்தை ஏவினார். �ரூ.4,000 கட்டினால் போதும், எந்த வேலையும் பார்க்க வேண்டியதில்லை. போன் மூலம் எஸ்.எம்.எஸ். செய்து, வேலை தேடும் இளைஞர்களை இங்கு வரவைக்க வேண்டும். ஒரு ஆள் எத்தனை ஆட்களை சேர்த்து விடுகிறாரோ? அதற்கு தகுந்த கமிஷன் தரப்படும்� என்றார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
பேச்சு திறமை மிக்க ஒரு நிர்வாகி இனிக்க, மணக்க, ருசிக்க பேசினார். அவர் பேசப்பேச இளைஞர்கள் முகம் பிரகாசம் அடைந்தது. ஏதோ அப்போதே தாங்கள் டாட்டா பிர்லா ஆகிவிட்டதாக பரவசம் அடைந்தார்கள் சிலர். அப்போது அந்த நிர்வாகி, அடுத்த அஸ்திரத்தை ஏவினார். �ரூ.4,000 கட்டினால் போதும், எந்த வேலையும் பார்க்க வேண்டியதில்லை. போன் மூலம் எஸ்.எம்.எஸ். செய்து, வேலை தேடும் இளைஞர்களை இங்கு வரவைக்க வேண்டும். ஒரு ஆள் எத்தனை ஆட்களை சேர்த்து விடுகிறாரோ? அதற்கு தகுந்த கமிஷன் தரப்படும்� என்றார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
3 நாட்களுக்கு பிறகு மீண்டும் அங்கு சென்று பார்த்தோம். சிலர் ரூ.4,000 கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் கேட்டதற்கு, �ரொம்ப கஷ்டப்பட்டு வீட்டில் இருக்கும், கொலுசு, பழைய பாத்திரங்கள், பட்டுப் புடவையை விற்று காசு புரட்டினோம். எல்லாம் ஒரு நம்பிக்கையில்தான்� என்றனர். சிலர் பெற்றோருடன் வந்தும் பணம் கட்டினார்கள்.
சரி... அப்படி பணம் கட்டி சேர்ந்தவர்கள் நல்ல சம்பாதிக்கிறார்களா என்றும் விசாரணை மேற்கொண்டோம். பணம் கட்டிய சிலரை நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி அவ்வப்போது விசாரித்தோம். நிஜமாகவே அவர்கள் பாவம்தான். பணம் கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம்.
சூளைமேட்டை சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், �ஒரு மெம்பரை சேர்ப்பதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எஸ்.எம்.எஸ். பண்ணிக் கொண்டே இருக்கிறேன். ஒரு மாதத்தில் குறைந்தது இருபது பேரையாவது சேர்த்து விட்டால்தான் மாசம் இரண்டாயிரம் ரூபாயாவது கிடைக்கும். ஆனால் இதில் என்ன கொடுமை என்றால் இரண்டு பேரை சேர்ப்பதுகூட முடியாத காரியம். கைக்காசை போட்டு பிட்நோட்டீஸ் அடித்து, பசை வாங்கி, பகல் இரவு என்று நானே ஒட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது போன் செய்து வரமாட்டார்களே என காத்திருக்கிறேன். கொடுத்த காசை திருப்பவே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றார்.
இவரைப் போல்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் அடியாட்களால் தாக்குவதாகவும் ஏமாந்தவர்கள் கூறுகிறார்கள். இதைப் போன்று அப்பாவி இளைஞர்களை குறிவைத்து அவர்களின் நம்பிக்கையோடும், எதிர்காலத்தோடும் விளையாடும் திருட்டுக் கும்பல்களை காவல் துறை களையெடுத்தால் தான் நல்லது. இருப்பினும் இளைஞர்களும் சற்று உஷாராகத்தான் இருக்க வேண்டும்.   (தினகரன்) 

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : தமிழக அரசு புறக்கணிப்பு

டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு நாளை ஏற்பாடு செய்திருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறி வருகிறது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, முல்லை பெரியாறு அணை பலவீனம் அடைந்திருப்பதாகவும், இதனால் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அப்பகுதி மக்களிடையே கேரள அரசு பீதியை கிளப்பி வருகிறது. புதிய அணை கட்டியே தீர வேண்டும் என்று கேரளாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு, கேரளாவின் விஷம பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதியதுடன், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று முன்தினம் டெல்லியில் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு, மத்திய நீர்வளத்துறைக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளின் முன்னிலையில் தமிழக, கேரள அதிகாரிகளின் கூட்டம் நாளை நடைபெறும் என்று மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து, தமிழக கவர்னர் ரோசய்யாவை நேற்று சந்தித்து அவர் மனு கொடுத்தார். பல கட்சி தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தினர்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாளை நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக டெல்லியில் 5ம் தேதி நடக்க உள்ள அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில், தமிழக அரசு ஏற்கனவே செய்த முடிவின்படி கலந்து கொள்ளாது என தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்’’ என்று கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையை தமிழக அரசு புறக்கணித்துள்ள நிலையில் டெல்லியில் நாளை இக் கூட்டம் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

ஐபிஎல் சீசன் 5 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ராகுல் டிராவிட் கேப்டன்

ஐபிஎல் டி20 2012 தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து 4 சீசனில் பொறுப்பு வகித்த ஆஸ்திரேலிய சுழல் நட்சத்திரம் ஷேன் வார்ன், 2011 சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி 2008ல் நடந்த முதலாவது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
முதல் 3 சீசனிலும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் டிராவிட், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ.2.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷேன் வார்ன் ஓய்வு பெற்றதால், ஐபிஎல் சீசன் 5 தொடருக்கான புதிய கேப்டனாக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், ஜோகன் போத்தா (தெ.ஆப்ரிக்கா), பால் காலிங்வுட் (இங்கிலாந்து), ஷேன் வாட்சன் (ஆஸி.) ஆகியோரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அதிக ஆதரவுடன் டிராவிட் தேர்வு செய்யப்பட்டதாக ராயல்ஸ் அணி நிர்வாகி ரகு அய்யர் நேற்று தெரிவித்தார்.
2011 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடிய டிராவிட் 343 ரன் (சராசரி 31.18) எடுத்தார். தற்போது நல்ல பார்மில் உள்ள டிராவிட், டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடி ரன் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

சென்னையில் மட்டும் 50 ஏஜென்ட்கள் : அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தல்

அமோகமாய் நடக்கும் அதிர்ச்சி பிசினஸ்
அயல்நாடுகளுக்கு ஆள் கடத்தும் பிசினஸ் அமோகமாக நடக்கிறது சென்னையில் & இப்படியொரு தகவல், அதிலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.
அபின், ஹெராயின், ஆயுதம் என்று வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியல் கொஞ்சம் பெருசு. அதிலே புதிதாக இடம் பிடித்திருப்பது ஆள் கடத்தல். அப்படியென்றால்? பணத்துக்காக ஆளை கடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பணம் வாங்கிக் கொண்டு ஆளை கடத்துவது கேள்விப்படாத விஷயம். அதற்காக சென்னையில் 50 ஏஜென்ட்கள் வரை இருக்கிறார்கள் என்றால், இந்த வியாபாரம் எந்தளவுக்கு கொடிகட்டி பறக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அந்த 50 பேரும் விலை உயர்ந்த, வெளிநாட்டு இறக்குமதி கார்களில் வலம் வரக் கூடிய அளவுக்கு இதிலே பணம் புழங்குகிறது என்பதால், இந்த விவகாரத்தை சிபிஐ கையில் எடுக்க வேண்டும் என்ற பேச்சு, மெல்ல கிளம்பியுள்ளது.
அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தல் எப்படி நடக்கிறது? இங்கிருந்தோ அல்லது இலங்கையில் இருந்தோ ஒருவர், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி, நார்வே என ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு செல்ல விரும்பினால், அவர்களை விரும்பிய நாட்டுக்கு பத்திரமாக கொண்டு போய் இறக்கி விடுவது தான் இந்த ஏஜென்ட்களின் வேலை.
அமெரிக்காவுக்கு மட்டும் அனுப்ப முடியாது; எனென்றால், அங்கே கெடுபிடிகள் அதிகம்.
கடத்தலுக்கு தேவைப்படும் விசா பெறுவதற்காக, இவர்கள் கைவசம் நிறைய ஐடியாக்கள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் சினிமா ஷூட்டிங். அதற்கு இமிகிரேஷன், சிஐஎஸ்எப், கஸ்டம்ஸ் என பல துறை அதிகாரிகளில் சிலரும் உடந்தை. இத்தாலிக்கோ நார்வேக்கோ செல்ல விரும்பும் நபருக்கு 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றை இங்கேயே ஏற்பாடு செய்து தருகின்றனர். லோக்கல் முகவரியுடன் எல்லாம் ஒரிஜனல்.
ஆனால், அந்த நாட்டில் இருந்து விசா பெறுவதில்தான் இவர்களிடம் வித்தியாசத்தை காண முடியும். அதாவது டூபாக்கூர் பெயரில் ஒரு சினிமா கம்பெனி ஆரம்பிப்பார்கள். அதன் படப்படிப்புக்காக அந்த நாட்டில் அனுமதி கேட்பார்கள். இங்கிருந்து படப்பிடிப்பு குழுவினர் 50 பேர் வரை வருவார்கள் என்று சொல்வார்கள். அந்த 50 பேருக்கும் �சங்கன்� விசா கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொண்டு, இலங்கையை சேர்ந்தவர்களையும், காபிபோசா, ஃபெரா போன்ற சட்டச் சிக்கலில் தேடப்படும் பெரிய முதலைகளையும், சினிமா கம்பெனி பேனரில் நாடு கடத்தி விடுவார்கள். ஒரு டிரிப்புக்கு ரூ 20 கோடி வரை பணம் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு கைமாறாக பங்குப் பணம், அதிகாரிகள் சிண்டிகேட் வரைக்கும் போய் சேர்ந்து விடும். இதில் அதிகபட்ச தொகையை கொடுப்பது இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களே அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டணம் கூட, சில நேரங்களில் பாதி இங்கே, மீதி அங்கே என்ற கணக்கில் வசூலிக்கப்படுகிறது.
கொச்சி, திருவனந்தபுரம், ஐதராபாத், சென்னை என பல வான் மார்க்கமாக ஆள் கடத்தல் தொழில் தடையின்றி நடந்து வருகிறது. அதை தடுக்க வேண்டியவர்கள் கண்டும் காணாமல் இருப்பதோடு மட்டுமல்ல; இப்படியொரு வியாபாரம் நடக்கிற தகவல் கூட கசியாமல் பார்த்துக் கொள்வார்கள். எதற்காக போகிறார்கள்? எத்தனை முறை போயிருக்கிறார்கள் என எதையும் ஆராய்வதில்லை. இதில் பிரபலங்களும் தெரிந்தோ, தெரியாமலோ சம்பந்தப்பட் டிருப்பதால், பணம் மட்டும் ரூ 500 கோடி வரை புழங்குவதாக தெரியவந்துள்ளது.
இதிலே அழைத்துச் செல்லப்படுபவர்கள் அங்கே இறங்கிக் கொண்டதும், ஏஜென்ட்களின் ஆட்களாக சென்ற குருவிகள் மட்டும் திரும்பி வருவது வழக்கம். அவர்களும் வெறும் கையோடு வருவதில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருட்களை கடத்தி வந்து விடுகின்றனர். அதில் தேறும் பணம் தனிக் கணக்கு.
சமீபத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இப்படி அனுப்பப்பட்ட கும்பல் பிடிபட்ட பிறகுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்தும் அதன் பின்னணி பற்றியும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நேர்மையான அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது.

நாகர்கோவில் நகராட்சி குப்பையிலிருந்து மின்சாரம்

புனே நிறுவனம் கலெக்டருடன் ஆலோசனை
நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் திடக் கழிவுகள் வலம்புரிவிளை உரக்கிடங்கு பகுதியில் கொட்டப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு கொட்டப்பட்ட கழிவுகள் மலைபோல் அங்கு தேங்கியுள்ளன. அப்பகுதியில் அவ்வப்போது தீவிபத்தும் ஏற்படுகிறது. இந்த உரக்கிடங்கை இடம்மாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டும் அந்தந்த பகுதி மக்களின் எதிர்ப்பால் குப்பை கிடங்கு இடம்மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் பலரும் தேர்தலின்போது உரக்கிடங்கை இடமாற்றம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகள் அளித்தும் கடந்த பல ஆண்டுகளாக அது நிறைவேற்றப் படவில்லை.
இந்நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக குப்பைகள் அதிகரித்துள்ளன. இந்த குப்பைகளை பயனுள்ளதாக மாற்றும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நகராட்சியில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பிளாஸ்டிக் கழிவுகள், கேரி பேக்குகள் அடங்கிய மக்கும் குப்பைகள் அளவு குறைந்துள்ளதால் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என இரண்டாக பிரிக்கப் பட்டு மக்கும் குப்பைகள் அடங்கிய திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்து ஆலோசனை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் மதுமதி தலைமை வகித்தார். நகராட்சி தலைவி மீனாதேவ், நகராட்சி ஆணையர் காளிமுத்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடந்தது.
அடுத்த கட்ட ஆலோசனையை வரும் 10ம் தேதி மேற்கொள்வது எனவும் அன்று கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது எனவும் மேலும் இந்த திட்டம் குறித்த செயல்முறை விளக்கத்தை செய்து காண்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது.   (Dinakaran)

Saturday, 3 December 2011

No one should be denied health insurance merely on grounds of age : PIB

Insurance for Senior Citizens
December 02, 2011 The Insurance Regulatory and Development Authority (IRDA), the regulator in the insurance sector had constituted a Senior Citizens Committee in 2007. Based on the recommendations of the Committee, the IRDA had instructed insurers in April, 2007 to allow entry in health insurance policy at least till 65 years of age. In August 2008, IRDA mandated establishment of a separate channel to address health insurance related grievances of senior citizens. Further, vide instructions issued in March, 2009, IRDA instructed that apart from the entry age of 65 years, the denial of health insurance to senior citizens on any grounds should be in writing with reasons furnished and recorded and the premium charged to senior citizens should be fair, justified and transparent and duly disclosed upfront. As the most recent initiative, IRDA, while approving health insurance products, advises all general insurers to ensure that there is no exit age in the policy which ensures that no one is denied health insurance merely on grounds of age. 

This information was given by the Minister of State for Finance, Shri Namo Narain Meena in written reply to an Unstarred Question in Lok Sabha today.

[ Press Information Bureau - Government of India -Ministry of Finance ]

02-December-2011 18:8 IST

Pakistani actress : photo-shoot Mess

A controversial Pakistani actress has been forced to deny posing naked for the India edition of FHM sporting a tattoo of the initials 'ISI' on her arm.
Veena Malik appears topless on the front of the December issue of FHM India, sparking outrage among conservatives in Pakistan - both for her nudity and the reference to Pakistan's intelligence agency.
But Miss Malik has strongly denied posing for the lads' mag, with the 33-year-old star insisting the picture had been 'morphed'.
'I have never posed nude. I have never done anything like that ever. My manager and legal team is looking into the matter. We will take legal action against them,' Miss Malik told PTI, the Indian press agency.
FHM India's editor, Kabeer Sharma, insisted however that nothing had been doctored, and claimed that the magazine could prove the photo's authenticity.
Mr Sharma told the BBC: 'We have video footage of the shoot as well as emails from Veena about how she's looking forward to the cover.'
The image was revealed on FHM India's website, Facebook page and Twitter account simultaneously today.
Dressed in shorts and seen hugging actor Ashmit Patel as well as swimming with Baywatch star Pamela Anderson, she was accused of behaving improperly by some Muslim clerics.
Miss Malik has also been accused of being a porn star. However, her refreshingly outspoken views have won her many fans from Pakistan's younger and more liberal circles.
Confronted about her 'immoral' behaviour by cleric Mufti Abdul Qawi on a TV talk show, she snapped back that the country had far more important things to consider - including the rape of children in mosques.
'I’m a Muslim woman, and I know my limits,' she shouted back. The mufti appeared to be too astounded to respond.

நாகர்கோவிலில் தொடரும் சோகம் : பெண் படுகொலை : சுடுகாட்டில் உடலை வீசிச்சென்றனர்

(3.11.11) நாகர்கோவில் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த கும்பல், சுடுகாட்டில் உள்ள புதரில் அவரது உடலை வீசி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அடுத்த தாழக்குடி & திருப்பதிசாரம் செல்லும் சாலையில் தாழக்குடி பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் அருகில் சுடுகாடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள புதரில் 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக இன்று காலை ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆடைகள் களையப்பட்டு அலங்கோலமான நிலையில் உடல், புதருக்குள் திணிக்கப்பட்டு இருந்தது.
கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. மேலும் உதடு, காது மற்றும் முகத்தில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. கழுத்தை இறுக்கியும், அடித்தும் இவரை கொலை செய்துள்ளனர். அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சுடுகாடு இருக்கும் பகுதியில் வைத்து உடலை எரிப்பதற்கு கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், நேற்று இரவு முதல் பெய்த மழையால் அவர்களின் திட்டம் நிறைவேறாமல் போய் இருக்கிறது. இதனால் புதருக்குள் உடலை திணித்து வைத்து இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்தையும், பெண்ணின் உடலையும் எஸ்பி லட்சுமி இன்று பார்வையிட்டார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.       (Tamilmurasu) 

4 மகளிர் குழு தலைவிகள் கைது : வங்கியில் ரூ.8 கோடி மோசடி

(3.11.11) விழுப்புரம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, தொழில் கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 20 குழுக்களின் பெயர்களை போலியாக தயாரித்தும், போலி ரேஷன் கார்டுகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து 1.04.2008 அன்று முதல் 31.12.2010 வரை ரூ.8 கோடி மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மகளிர் சுயஉதவிக்குழு தலைவிகள் ஜெயபாரதி, லட்சுமி, சித்ரா, மீனாட்சி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். 
தலைமறைவாக உள்ள வங்கி அதிகாரிகள் 6 பேர் மற்றும் ஒரு பெண் ஆகிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

டிசம்பர் 3 : உலக மாற்றுத் திறனாளிகள் தினம் [International Day of People Differently Able]

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்... அனைவரையும் ஏற்று கொள்வோம்.... மதிப்போம்.... மாண்புறுவோம்
பிறரை ஏளனம் செய்வதை விடுத்து, திறமைகளை வேற்றுமை பாராது உக்குவிப்போம். 

"DISABILITY IS NOT INABILITY"
Follows what Wikipedia says about "International Day of People with Disability  [உலக மாற்றுத் திறனாளிகள் தினம்]

International Day of People with Disability (December 3) is an international observance promoted by the United Nations since 1992. It has been celebrated with varying degrees of success around the planet. The observance of the Day aims to promote an understanding of disability issues and mobilize support for the dignity, rights and well-being of persons with disabilities. It also seeks to increase awareness of gains to be derived from the integration of persons with disabilities in every aspect of political, social, economic and cultural life. It was originally called "International Day of Disabled Persons". Each year the day focuses on a different issue.

The International Year of Disabled Persons 1981

In 1976, the United Nations General Assembly proclaimed 1981 as the International Year of Disabled Persons. It called for a plan of action at the national, regional and international levels, with an emphasis on equalization of opportunities, rehabilitation and prevention of disabilities.
The theme of IYDP was "full participation and equality", defined as the right of persons with disabilities to take part fully in the life and development of their societies, enjoy living conditions equal to those of other citizens, and have an equal share in improved conditions resulting from socio-economic development.

United Nations Decade of Disabled Persons 1983-1992

To provide a time frame during which Governments and organizations could implement the activities recommended in the World Programme of Action, the General Assembly proclaimed 1983-1992 the United Nations Decade of Disabled Persons.

நிதி ஆலோசனை குழு பரிந்துரை : எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இனி கட்டணம்?

(3.11.11) வீட்டின் அருகில் உள்ள வேறு வங்கி ஏடிஎம்மில் 5 முறை பணம் எடுத்தாச்சு. மாத கடைசியில் ரூ 20 சேமிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் தேடி போகிறீர்கள்... இனி, அது அவசியமில்லை. ஏனெனில், எந்த ஏடிஎம்மில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் இனி கட்டணம் செலுத்த நேரிடும்.
இதற்கான பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவை பிரிவு செயலர் மிட்டல் தலைமையிலான பேமென்ட் சிஸ்டம் ஆலோசனை குழு அளித்துள்ளது. அதுபற்றி நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. கணக்கு வைத்துள்ள வங்கி இப்போது ஆண்டுக்கு ரூ 99  வரை ஏடிஎம் சேவைக்கு கட்டணம் வசூலிக்கிறது.
எனவே, அதன் ஏடிஎம்கள் முற்றிலும் இலவசம். மற்ற வங்கி ஏடிஎம்களை மாதத்துக்கு 5 முறை மட்டும் இலவசமாக பயன்படுத்தலாம். கூடுதலானால் ரூ 20 கட்டணம் என்பது நடைமுறையில் இருக்கிறது.
இந்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அமல்படுத்தினால், கணக்கு வைத்துள்ள வங்கி உட்பட எல்லா ஏடிஎம்களிலும் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படும்.
எனினும், அது ஆன்லைன் தொகை பரிமாற்றத்துக்கு பெறப்படுவதுபோல குறைவான கட்டணமாக இருக்கும். ஆன்லைன் தொகை பரிமாற்றத்தில் வங்கிகள் ரூ 1லட்சம் வரை ரூ 6 கட்டணம் வசூலிக்கின்றன. அதுபோல ஒவ்வொரு முறை ஏடிஎம் பயன்படுத்தவும் சிறிய கட்டணம் பிடித்தம் செய்யப்படும். எனவே, ஆண்டு கட்டணத்தை வங்கிகள் கைவிடும் என்று தெரிகிறது. 
[நிதி அமைச்சகம் பரிசீலனை
  • ஏடிஎம் பண பரிமாற்றத்தில் வங்கிகள் இடையேயான கட்டணத்தை (இன்டர்&பாங்க் சார்ஜ்) கைவிட குழு வலியுறுத்தியுள்ளது.
  • வழக்கமான வங்கி பெயருடன் ஏடிஎம் வழங்குவதை தவிர்த்து அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான வெள்ளை ஏடிஎம் வெளியிட பரிந்துரைத்துள்ளது. ]
இதனால், ஏடிஎம் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுவது மட்டுமின்றி வங்கிகள் கூடுதல் ஏடிஎம்களை திறக்க நிதி ஆதாரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகம் ஏற்பதை பொருத்தே இது நடைமுறைக்கு வரக்கூடும்.  (தினகரன்)

முல்லைப்பெரியாறு அணை : தமிழகம் & கேரளா 5ம் தேதி பேச்சு

மத்திய அரசு ஏற்பாடு
(3.11.11) முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசின் நீர்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. அணைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட சிறு நிலஅதிர்வுகளை காரணம்காட்டி, அணை பலவீனம் அடைந்துவிட்டதாகவும், உடைந்தால் பேரழிவு ஏற்படும் என்று கேரள மக்களிடையே பீதி கிளப்பி வருகிறது. புதிய அணை கட்ட கோரி கேரளாவில் பல போராட்டங்களும் நடத்தப்படுகின்றன.
ஆனால், அணையை பராமரிக்கும் தமிழக அரசு அது பலமானதாக இருப்பதை ஆதாரத்துடன் விளக்கி உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் பழைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா வலியுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, கேரளாவின் விஷம பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதேபோல், புதிய அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண தமிழகம், கேரளா ஆகிய இருமாநிலங்களின் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டும்படி மத்திய நீர்வளத்துறைக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கேரள முதல்வர் உம்மன் சாண்டி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் உம்மன் சாண்டி அளித்த பேட்டியில், தமிழகம், கேரளா அதிகாரிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை 5ம் தேதி நடைபெறும் என்று மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  (Dhinakaran)

Friday, 2 December 2011

இளம்பெண்ணுக்கு விபரீத நோய் : வாய்விட்டு சிரித்தால் உயிர் போகும்


Laughing could kill Her


A young teacher with a rare neurological disorder has been warned she could die if she laughs too hard, because it could push her brain out of her skull.



Carolyn Gibbons, 23, suffers from a condition called Chiari malformation, which means the lower part of her brain is too big. This can block the flow of fluid to her head through her spinal canal.

She endures blurred vision, slurred speech and crippling migraines and any sudden movements feel like her head 'is about to pop'.

Jerking movements, such as during a fit of giggles, could cause her brain to herniate into the top of the spinal column - raising the risk of sudden death.

Miss Gibbons had no idea she had the condition until she passed out and was sick after returning home from the secondary school where she worked at the end of March last year.

இங்கிலாந்தின் ஹேம்ப்ஷயர் கவுன்டி ஹைத் என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் கரோலின் கிப்பன்ஸ். 23 வயதாகும் இவருக்கு ஒரு விபரீத பாதிப்பு. என்ன பாதிப்பு தெரியுமா? சிரித்தால் உயிர் போய்விடும்.

இங்கிலாந்தின் ஹைத் நகரில் தாய் கேதரின், 2 வயது தம்பி ஜேக்கப்புடன் வசித்து வரும் கரோலின் கிப்பன்சின் உடல்நலம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திடீரென பாதிக்கப்பட்டது. பார்வை மங்கியது. பேச்சு குழறியது. அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தது. உட்கார்ந்தால் உடனே எழுந்திருக்க முடியாது. இவ்வளவு ஏன்.. சிரிக்கக்கூட முடியாது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், மிக மிக அரிதான ‘சியாரி மால்பார்மேஷன்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். பின் மண்டையில் மூளையின் அளவு பெரிதாக உள்ளதால் மண்டையில் போதிய இடமில்லை. இதனால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளைக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல், நரம்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவே இத்தனை கோளாறுகளுக்கும் காரணம் என்றனர். உயிருக்கு ஆபத்து இருப்பதால் கடந்த ஜூலையில் ஆபரேஷனும் செய்யப்பட்டது. முதுகெலும்பின் ஒரு பகுதியையும் பின்புறம் மண்டை ஓட்டின் ஒரு பகுதியையும் வெட்டி அகற்றினர்.
கரோலின் படிப்படியாக குணமாகி வருகிறார். தற்போதும் சில பாதிப்புகள் இருக்கின்றன. அதாவது, வெகு நேரம் தூக்கமே வராது. ஒருமுறை சுமார் 60 மணி நேரம், அதாவது இரண்டரை நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்ததாக கரோலின் கூறுகிறார். இப்போதுகூட, வாய் விட்டு சிரிக்க கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள் டாக்டர்கள்.
“சிரிக்க முடியவில்லை என்பதே பெரும் சோகமாக இருந்தது. அந்த நிலையில் இருந்து மெல்ல விடுபட்டு வருகிறேன். முழுமையாக பாதிப்பில் இருந்து விடுபடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளுக்கு நன்றி” என்றார். கரோலின் கிப்பன்ஸ்

கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனி : நாளை 10 நாள் திருவிழா

சவேரியார் ஆலய 9ம் நாள் திருவிழாவையொட்டி இன்று மாலை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இன்று இரவும் தேரோட்டம் நடக்கிறது. 10 நாள் திருவிழா நாளை நிறைவடைகிறது.
பிரசித்தி பெற்ற நாகர்கோவில் கோட்டாறு கேட்டவரும் தரும் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த நவ.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத் திருவிழாவில் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 8ம் நாள் திருவிழாவான நேற்று (1&ந்தேதி) இரவு தேர் பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர் பவனி தெற்கு தெரு, கம்போளம், ரயில்வே ரோடு, கோட்டாறு மெயின் ரோடு, வடக்கு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை அடைந்தது. தேரோட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, உப்பு, மிளகு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். தரையில் விழுந்து வணங்கி நேர்ச்சை கடன் நிறைவேற்றினர்.
இன்று (டிச.2) 9ம் நாள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசீர், கூட்டு திருப்பலி ஆகியவை நடக்கின்றன. இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொள்கிறார். மேலும் இதில் குமரி மாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இன்று மாலை முதல் விடிய விடிய ஆலயத்துக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
நாளை (டிச.3) 10ம் நாள் திருவிழா நடக்கிறது. காலை 6 மணிக்கு தூய சவேரியார் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை வகிக்கிறார். பின்னர் காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நாளை (3 - ம் தேதி) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.
குமரி மாவட்ட எஸ்.பி. லெட்சுமி, உத்தரவின் பேரில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படை, பள்ளி மாணவர்களும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணியில் ஈடுபடுகிறார்கள். திருவிழாவையொட்டி கோட்டாறு போலீஸ் நிலைய ரோட்டில் இருந்து சவேரியார் ஆலய ரோடு வரை சாலையின் இரு பக்கமும் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் : தாறுமாறாக ஓடிய கல்லூரி பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி : 37 மாணவ, மாணவிகள் காயம்

இன்று காலை கோர விபத்து : அச்சு முறிந்து பஸ் கவிழ்ந்தது
(2.11.11) நாகர்கோவிலில் இன்று காலை தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து, பஸ்சில் இருந்த 37 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். முன்னதாக பஸ் மோதியதில் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த மற்றொரு கல்லூரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை சுசீந்திரம், தெங்கம்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. நாகர்கோவில் நாக்கால்மடம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது மோதியது. இதில் அவர் தூக்கிய எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக் மீது மோதிய பின்னரும் நிற்காமல் சென்ற பஸ் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. பஸ்சின் பின்பக்க டயர்கள் இரண்டும் பட்டையோடு கழன்று ஓடியது. பைக்கும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகளும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் வடசேரி மற்றும் ஆரல்வாய்மொழியில் இருந்து போலீசார் விரைந்தனர். இறந்து போனவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 37 மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அவர்களை கலெக்டர் மதுமதி சந்தித்து விபத்து பற்றி கேட்டறிந்தார். விபத்தில் பலியானவர் பெயர் முத்து, நெல்லை மாவட்டம் வடுகூர்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் குமரி மாவட்டத்தில் உள்ள மற்றொரு தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், போக்குவரத்து பிரிவு மேலாளராக உள்ளார். இதற்கிடையே விபத்தில் சிக்கிய பஸ் டிரைவர் கார்த்திகேயன் ஆரல்வாய்மொழி போலீசில் சரண் அடைந்தார். மாணவர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் அவர்களின் பெற்றோர் பதறியடித்தபடி ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பஸ் கவிழ்ந்ததில் டீசல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்து டீசலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் கல்லுரி மாணவ, மாணவிகள் கொண்டு வந்த டிபன் பாக்ஸ்கள், புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. அந்த பகுதி முழுவதுமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த விபத்தால் நாகர்கோவில் & ஆரல்வாய்மொழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.     (Tamil Murasu)

விஜய் & அஜீத்தை இணைத்து படம் : செல்வராகவன் பேட்டி

விஜய், அஜீத்தை இணைத்து படம் இயக்க கதை தயாராக உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.
இதுபற்றி செல்வராகவன் கூறியதாவது:
‘மயக்கம் என்ன’ படம் பார்த்து பலர் பாராட்டினார்கள். என்னைப் பொருத்தவரை வழக்கமான மசாலா படங்கள் எடுப்பதைவிட வித்தியாசமான கதை களங்களுடன் படம் இயக்கவே விரும்புகிறேன்.
யுவன் சங்கர் ராஜாவுடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை. விரைவில் அவருடன் இணைந்து படம் தருவேன். விஜய், அஜீத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்கிறார்கள். இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எப்போது அது நிறைவேறும் என்று தெரியவில்லை. எனது அடுத்த படம் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’. இதுதவிர திகில் படத்துக்காக 2 ஸ்கிரிப்ட் உள்ளது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளேன்.
இவ்வாறு செல்வராகவன் கூறினார்.  (tamil murasu) தமிழ்திரை 

In Austria : World's First Sex School

London, Dec 1 (IANS) While many people may think it's an activity which should be best learned behind closed doors, an enterprising Swedish schoolmistress thinks otherwise.
Ylva-Maria Thompson has opened the world's first international sex school for teaching the art of being better lovers, the Daily Mail reported.
The Austrian International Sex School in Vienna offers 'hands on' lessons in seduction for 1,400 pounds a term. The 'headmistress' says anyone over the age of 16 can enrol at 'the world's first college of applied sexuality'.
Students of the course are expected to stay in a co-ed dormitory block where they're expected to practice their 'homework'. By the end of their course, they are awarded a qualification.
The school head said: 'Our core education is not theoretical, but very practical. The emphasis is on how to be a better lover.
'Sexual positions, caressing techniques, anatomical features. And we teach people hands on.'
School's spokesperson Melodi Kirsch exuded confidence that the school would be a great success.
The school, however, has already turned controversial in Austria with it raunchy advertisments showing a couple making love having already invited ban by Austrian TV.

கோவையில் இருந்து 60 பேர் பைக்கில் கூடங்குளம் பயணம்

அணு உலை எதிர்ப்பு பேரணி
அணு உலைக்கு எதிர்ப்பு தெரி வித்து கோவையில் இருந்து 60 பேர் பைக்கில் பேரணி யாக கூடங்குளம் புறப்பட்டு சென்றனர்.
கோவையில் பல்வேறு அமைப்புகள் ஒன்றுசேர்ந்து அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற புதிய இயக்கம் துவக்கியுள்ளனர். இந்த இயக்கம் சார்பில், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக நூறு நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதர வாக பைக் பேரணி கோவை யிலிருந்து நேற்று துவங்கியது.
ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 60 பேர் பைக்குடன் திரண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சுசி.கலையரசன் பேரணியை துவக்கிவைத்தார். பேரணியில் பொன்சந்திரன் (பி.யு.சி.எல்), வக்கீல் முருகேசன், ஆறுச்சாமி, கருப்ப சாமி, தனலட்சுமி, உபேந்திரன், கதிரவன் உள்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை பைக் பேரணி கூடங்குளத்தை அடைகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். நாளை மீண்டும் கோவை திரும்புகின்றனர். இதுபற்றி ஒருங்கிணைப் பாளர் கு.ராம கிருஷ்ணன் கூறுகையில், கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு அறவே லாயக்கற்ற பகுதி. எனவே அங்கு அணுஉலை திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றார். முன்னதாக பைக் பேரணி காந்திபுரத்தில் இருந்து புறப்பட தயாரான போது போலீசார் தடுத்து விட்டனர். இதனால், கோபம் அடைந்த பேரணியில் பங்கேற்க வந்த சிலர் நடுரோட்டில் படுத்து, உருண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பைக் பேரணி பொள்ளாச்சி ரோடு எல் அண்ட் டி பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்டது.

                                                                                                                                                        நன்றி : தினகரன் Dec 2