Friday, 9 December 2011

Hospital Catches Fire : 62 Killed in Kolkata

At least 62 people were killed and several others injured in a massive fire that broke out at the AMRI hospital in south Kolkata early this morning. 
West Bengal chief minister Mamata Banerjee said said: "The negligence as an unforgivable crime and assured harsh punishment possible for those found responsible. 


The CM said the licence of the AMRI hospital would be cancelled with immideate effect. "Quick action will be taken against the hospital after proper inquiry," she said. 

Nearly 160 patients were admitted in the Dhakuria building, where fire broke out in the wee hours, hospital sources said. 


Only 85 patients were rescued and removed to two other units of the same hospital located at Mukundapur and Saltlake. But the hospital authority could not confirm the condition of remaining 75 patients, they added. 


Meanwhile, fire department lodged an FIR against AMRI hospital authorities. The fire brigade in its complaint said that the hospital authority did not have the adequate fire-preventive mechanism and emergency evacuation system in place. 


Initial report hinted that most of the victims were admitted at orthopaedic ward and majority of them were immovable. 


Hundreds of relatives of the patients are waiting in front of the hospital. Till now, no official communication has been made by the hospital authority. 


Locals and fire officials who started the rescue work alleged that most of the hospital staffs fled soon after fire broke out. 


The report also confirmed that most of the patients are victim of suffocation as thick smoke covered the entire building. 


In the wee hours smoke was first noticed billowing out from the basement of the hospital building. Smoke soon spread inside the hospital building which is centrally air conditioned. Fire brigade was informed but before they could reach flames engulfed the entire building as the basement was packed off inflammable articles. 


Thick smoke covered the entire hospital causing suffocation of the patients. Local joined hand with police and fire brigade officials to rescue the patients. 


Till now, the hospital authority admitted that bodies of 15 patients have been recovered but more feared trapped inside the fourth floor of the building. Fire fighters now managed to scale up in the floor and started working. State minister Firhad Hakim and Javed khan are at the spot. They also admitted that the toll may rise more. 


The fire broke out in the early hours at the basement where hospital chemicals and medical waste were stocked. 


Fire service minister Javed Khan said that 80 per cent of the patients have been removed to other facilities.

இந்தியா 3வது இடம் : அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதில்

2011ம் நிதியாண்டில் மட்டும் ரூ 23,400 கோடி மதிப்பில் போர் விமானங்கள், கருவிகள் வழங்குதற்கு இந்தியா & அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது
கடந்த 2010 & 11ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்கள், ஆயுதங்கள் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
போர் விமானங்கள், ஆயுதங்கள் உட்பட போர் கருவிகளை ஒப்பந்தப்படி வெளிநாடுகளுக்கு அமெரிக்க நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின் 2010&11ம் நிதியாண்டில் (அக்டோபர்&செப்டம்பர்) விற்பனை செய்த போர் கருவிகள் மதிப்பு, அதிகம் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலை டி.எஸ்.சி.ஏ. அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
அணுகுண்டு சோதனை நடத்தியபின் இந்தியாவுக்கு போர் கருவிகள் வழங்குவதை சில ஆண்டுகள் அமெரிக்கா நிறுத்தியது. அண்மையில், இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட சுமூக தீர்வுக்குப்பின் அமெரிக்கா மீண்டும் ஆயுதங்கள் வழங்குகிறது.
இதையடுத்து கடந்த 2011ம் நிதியாண்டில் மட்டும் ரூ 23,400 கோடி மதிப்பில் போர் விமானங்கள், கருவிகள் வழங்குதற்கு இந்தியா&அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது. இதன் மூலம் அந்த ஆண்டில் அமெரிக்காவில் இருந்து போர் கருவிகள் இறக்குமதி செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்தது.
இதில் ரூ 28,000 கோடியுடன் ஆப்கன் பாதுகாப்பு படை முதலிடத்தையும், ரூ 25,480 கோடியுடன் தைபெய் பொருளாதார மற்றும் கலாச்சார பிரதிநிதி அலுவலகம் 2வது இடத்தையும் பிடித்தன.
ஆஸ்திரேலியா ரூ 20,280 கோடியுடன் 4வது இடத்தையும், அதை தொடர்ந்து சவுதி அரேபியா, ஈராக், யுஏஇ, இஸ்ரேல், ஜப்பான், சுவீடன் அடுத்தடுத்தடுத்த இடங்களை பிடித்தன.  (Dinakaran)

ஓட்டல்கள், கடைகளை போலீசார் சூறையாடினர் : லஞ்சம் கொடுக்காததால் ஆத்திரம்

மாமூல் கொடுக்காததால் திண்டி வனத்தில் ஓட்டல் மற்றும் கடைகளை போலீசார் சூறையாடினர். இதை கண் டித்து கடை உரிமையாளர் கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எடைக்குளம் கூட்டுரோடு புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற் பட்ட கடைகள் சாலையின் இருபுறமும் உள்ளன. இதில் டீக்கடை, ஓட்டல், கூல் டிரிங்ஸ் உள்ளிட்ட கடை கள் அடங்கும்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜீப்பில் வந்த இரண்டு போலீசார் 10க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் அத்துமீறி நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தோசை மாவு, சட்னி, சாம் பார் உள்ளிட்டவைகளை வெளியில் வீசினர். அங் கிருந்த டேபிள், சேர், டியூப் லைட் உள்ளிட்ட பொருட் களை அடித்து நொறுக் கினர்.
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு, மாமூல் கொடுக்காததால் இதனை செய்தோம் என தெரிவித்தார்களாம்.
மேலும் நியாயம் கேட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 10 பேரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காவல் நிலை யத்தில் வைத்து தாக்கி உள்ளனர். இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத் திருந்து நேற்று காலை அவர்களை விடுவித்துள் ளனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் புதுவை&திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தக வல் அறிந்து சம்பவ இடத் துக்கு வந்த டிஎஸ்பிக் கள் திண்டிவனம் குப்புசாமி, கோட்டக்குப்பம் முரு கேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் காவல்துறை சார் பில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து கடைக் காரர்கள் மறியலை கைவிட்டனர்.  (Dinakaran)
சிந்திப்போம். தெளிவடைவோம்
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு, மாமூல் கொடுக்காததால் இதனை செய்தோம் என தெரிவித்தார்களாம்.
** போலீசார் பொது இடத்தில் அப்படி வெளிபடையாக சொல்வார்களா???
** போலீசார் இத்தனை அட்டூழியங்களை செய்யும் வரை அனைவரும் பார்த்து கொண்டா இருந்தார்கள்???
இவையனைத்தும் உண்மை எனில் போலீசின் செயல் கண்டிக்கப்பட வேண்டிய செயல்தானே???.

மாநகராட்சி பியூனுக்கு ரூ 12 கோடி சொத்து

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயின் மாநகராட்சியில் பியூன் ஒருவரின் வீட்டில் லோக் அயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான பணம், நகைகள் மற்றும் ரூ 12 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின.
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயின் மாநகராட்சியில் தற்போது ஸ்டோர் கீப்பராக பணியாற்றுபவர் நரேந்திர தேஷ்முக். கடந்த 1978ல் பியூனாக மாதம் ரூ 150 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்த இவர், இத்தனை ஆண்டுகளில் சம்பளமாக அதிகபட்சமாக ரூ 15 லட்சம்தான் வாங்கியிருப்பார். ஆனால், இவர் மிக ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். மாநகராட்சியில் நடந்த பல ஊழல்களில் அதிகாரிகளுடன் இவருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இவரை சஸ்பெண்ட் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, லோக் அயுக்தா போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரது பங்களாவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரொக்க பணம், தங்க நகைகள், எல்சிடி டி.வி.கள், 6 லேப்டாப், 10 செல்போன் மற்றும் ரூ 10 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள், ரூ 13 லட்சம் வங்கி டெபாசிட் சிக்கின. இதை பார்த்து போலீசாரே திகைப்படைந்தனர். பல வங்கிகளில் லாக்கர்கள் வைத்திருப்பதையும் கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் இன்று திறந்து சோதனை நடத்தவுள்ளனர்.
தேஷ்முக் சிக்கியதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய ஊழல் அதிகாரிகள் பலரும் மாட்டலாம் என தெரிகிறது. இதனால், உஜ்ஜயின் மாநகராட்சி அதிகாரிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
பக்கத்து வீட்டில் பண மழை
தேஷ்முக் பங்களாவில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்திய போது, பங்களாவில் இருந்தவர்கள் மாடிக்கு ஓடியிருக்கின்றனர். உடனே, போலீசாரும் வேகமாக பின்தொடர்ந்தனர். அப்போது அங்கிருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் அவர்களை பயமுறுத்தியது. ஒரு வழியாக போலீசார் மாடிக்கு சென்ற போது, நகைகள் மற்றும் பணத்தை பக்கத்து வீடுகளின் மாடிகளில் வீசியதை கண்டுபிடித்தனர். பின்னர், அவற்றை பறிமுதல் செய்தனர்.

24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி எண்

சென்னையில்  24 மணி நேரமும் போலீசை தொடர்பு கொள்ள மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கலாம். குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.
வடக்கு மண்டலம் 90031 30104, 
தெற்கு மண்டலம் 90031 30102, 
கிழக்கு மண்டலம் 90031 30101, 
மேற்கு மண்டல மக்கள் 98408 24100 
போக்குவரத்து பிரச்னைகள் 90031 30103
குறுஞ்செய்திகள் 95000 99100 என்ற எண்ணுகளுக்கு அனுப்பலாம்.
சென்னை போலீஸ் தெற்கு, வடக்கு, மத்திய என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்கள் அவசர இலவச அழைப்பான 100ஐ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் தற்போது தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொது மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு செல்போன் எண் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் குறைகளை தெரியபடுத்தவும், அவசர தேவைக்கும் தொடர்பு கொள்ளலாம். குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமும் தகவல் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் தகவல்களை தெரிவிக்கலாம்.  (தினகரன்)

Thursday, 8 December 2011

டாக்டர்கள் இல்லை என்ற நிலை குமரி மாவட்டத்தில் மாறிவிட்டது : கலெக்டர் பேச்சு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் இல்லை என்ற நிலை தற்போது குமரி மாவட்டத்தில் மாறிவிட்டது என்று கலெக்டர் கூறினார்.
குமரி மாவட்ட தன்னார்வ நல குழுமம் சார்பில் நல வாழ்வு குழு உறுப்பினர்கள் கொண்ட புத்துணர்வு பயிற்சி முகாம் நாகர்கோவிலில் இன்று நடந்தது. கலெக்டர் மதுமதி பேசியதாவது:& அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவேண்டும் என்பதே அரசின் நோக்கம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மக்கள் அதிக அளவில் செல்ல தொடங்கி உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து அளிக்கப்படும் சிகிச்சை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் இலவச மருத்துவ பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட இலவச சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால் அங்கு டாக்டர் இருப்பது இல்லை என்ற நிலை மாறிவிட்டது. இது போன்ற விஷயங்களை நல்வாழ்வு குழுவினர் மக்களிடம் எடுத்து கூற வேண்டும். அரசு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடைய அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், மற்றும் தன்னார்வ நல்வாழ்வு குழுமத்தை சேர்ந்த உறுப்பினர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

குமரி & கேரள எல்லையில் அமைதி : முல்லைபெரியாறு விவகாரம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தில் எல்லை பகுதிகளில் வாகனங்கள் இயக்குவதில் பாதுகாப்பற்ற நிலை தொடருகிறது. பல பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல இயலாமல் பாதி வழியில் திரும்பி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் மற் றொரு தமிழக கேரள எல்லை பகுதி யான குமரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது. ஒரு சில சம்பவங்களை தவிர பெரும்பாலும் எந்தவித பாதிப்பும் இல்லை. 
சபரிமலை சென்றுவிட்டு சுசீந்திரம், கன்னியாகுமரி நோக்கி வருகின்ற வாகனங்கள் வழக்கம்போல் வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. மேலும் தமிழக & கேரள எல்லை பகுதிகளில் பல இடங்களிலும் பிரச்னைகள் நீடிப்பதால் குமரி மாவட்டம், திருவனந்தபுரம் வழியாக அதிக அளவில் கேரள வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தமிழக பகுதிக்கு வந்து செல்கின்றன. இத னால் தேசிய நெடுஞ்சாலை 47 போக்குவரத்து நெரிசலுடன் திணறி வரு கிறது. இரவு நேரங்களில் மார்த்தாண்டம், நாகர்கோவில் பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறு கிறது.

தமிழகத்துக்கு ஆதரவாக ஈரோட்டில் மலையாளிகள் கடை அடைப்பு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘முல்லை பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். வந்தாரை வாழவைக்கும் தமிழக மண்ணுக்கு பாதகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் வாழும் மலையாளிகளாகிய நாங்கள் தமிழக மக்களோடு இணைந்து போராடுவோம என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்‘ என்றும் இதற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர். அதன்படி இன்று மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் டீக்கடைகள், பேக்கரி கடைகள், நகைக்கடைகள், எலெக்டரிக்கல் கடைகள் என 500 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செல்போனால் பிரிந்த தம்பதியை ஓன்று சேர்த்தது செல்போன் சிக்னல் : கும்பகோணத்தில் சுவாரஸ்யம்

கணவன், மனைவி பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, அவர்கள் மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் தேவையன் (30). இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. தேவையன் ஓராண்டுக்கு முன் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட நேரங்களில் எல்லாம் ‘பிசி பிசி’ என பதில் வந்தால் மனைவி மீது தேவையனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ரேவதி, கணவனுடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு கடந்த செப்டம்பர் 22ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இதையறிந்த தேவையன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால், பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார்.
ரேவதியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது, அவர் மும்பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அங்குள்ள ‘பிரேம் கிரண்‘ என்ற மறுவாழ்வு மையத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மையத்தை தொடர்பு கொண்ட போலீசார், அவரை ஊருக்கு அனுப்பும்படி கூறினார். ஆனால் அதற்கு ரேவதி மறுத்துவிட்டார்.
பின்னர் அந்த மைய மேலாளர் செல்வி, ரேவதியை சமாதானப்படுத்தி நேற்று பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். கணவன், மனைவி இருவருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதன் பின் கணவருடன் செல்ல ரேவதி சம்மதித்ததை அடுத்து போலீசார் அவரை, தேவையனுடன் அனுப்பி வைத்தனர்.  (தமிழ் முரசு)

Sehwag 219 : New World Record in International Cricket

Virender Sehwag 219 : Highest Score in ODI followed by Sachin's 200


A New World Record in International Cricket


Highest Scores



Wednesday, 7 December 2011

தூத்தூர் கிராமத்தில் புகையிலை, பாக்கு பொருட்களுக்கு தடை : வீதியில் கொட்டி தீ வைத்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவர் கிராமத்தில் கேன்சர் நோயை உருவாக்கும் புகையிலை, பாக்கு பொருட்களுக்கு தடை விதித்துள்ளனர். இதையெட்டி இன்று காலை ஊராட்சி தலைவர் ஜான் அலோசியஸ், பாதிரியார்கள் சனு, எபிரேன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அப்பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள், பான்பராக் மற்றும் பாக்கு வகை களை எடுத்து வீதியில் குவித்து தீ வைத்து கொளுத்தினர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஜான் அலோசியஸ் கூறியதாவது, தூத்தூர் ஊராட்சியில் புகையிலை பொருட்கள், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பாக்கு வகைகள் விற்க தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக தூத்தூர் கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படப்படியாக மற்ற இடங்களு க்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கு சுயஉதவிக்குழுக்கள், பாதிரியார்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். தூத்தூர் ஊராட்சி பகுதியை இதில் முன்மாதிரியாக மாற்றுவோம் என்றார்.

பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு : ஜப்பான் நிறுவன 4 லட்சம் டின் வாபஸ்

குழந்தைகளுக்கான பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், ஜப்பானை சேர்ந்த மெய்ஜி நிறுவனம் விற்க அனுப்பப்பட்ட 4 லட்சம் டின்களை திரும்ப பெறுகிறது. இது ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் கடந்த மார்ச் 11&ம் தேதி பயங்கர பூகம்பமும் தொடர்ந்து பயங்கர சுனாமியும் ஏற்பட்டது. பல நகரங்களில் பேரழிவு ஏற்பட்டது. புகுஷிமா நகரில் உள்ள டாய்ச்சி அணு உலை பாதிக்கப்பட்டது. அணுஉலையை குளிர்விக்கும் கருவிகள் செயலிழந்ததால், கதிரியக்க தனிமங்கள் உருகின. கதிரியக்கமும் வெளியேறியது. பசிபிக் பெருங்கடல் வழியாக இந்த கதிரியக்க பாதிப்பு பரவுவதாக கூறப்பட்டது. மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள், டீ, பால் ஆகியவற்றில் கதிரியக்க பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கதிரியக்க தன்மை இருந்தாலும், அபாயகரமான அளவுக்கு இல்லை என்று அரசு தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில், மெய்ஜி என்ற நிறுவனத்தின் பால் பவுடரில் கதிரியக்க பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:  
மெய்ஜி பால் பவுடரில் கதிரியக்க சீசியம் தனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு கிலோ பால் பவுடரில் 200 பெக்கரல் என்ற அளவுக்கு சீசியம் இருக்கலாம் என்று ஜப்பான் அரசு கூறுகிறது. அதைவிட பல மடங்கு குறைவாக 30.8 பெக்கரல் அளவுக்கே எங்கள் பால் பவுடரில் சீசியம் உள்ளது. ஆனாலும், 4 லட்சம் டின்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். பால் பவுடர் தயாரிக்கும்போது அதை காயவைப்பதற்கு வெப்ப காற்று பயன்படுத்தப்படும். புகுஷிமா அணுஉலையில் இருந்து பரவிய கதிரியக்கம், காற்று மூலம் பால் பவுடரில் சேர்ந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
இவ்வாறு மெய்ஜி நிறுவன அதிகாரிகள் கூறினர். மெய்ஜி பால் பவுடர், ஜப்பானில் மட்டுமே விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.       (Tamil Murasu)

சரத்பவாரை அறைந்தது தப்பில்லை : அன்னா ஹசாரே

மத்திய அமைச்சர் சரத்பவாரை கன்னத்தில் அறைந்தது தப்பில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் மத்திய அமைச்சர் சரத்பவாரை சீக்கிய இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் இந்த சம்பவத்தை கண்டித்தனர். இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘ஒரு அறை தானா?’ என அன்னா பதில் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காந்தியவாதி என கூறிக் கொள்ளும் அன்னா, வன்முறையை ஊக்குவிக்கலாமா என அன்னாவின் ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்து சரத்பவார் தாக்கப்பட்டதற்கு அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்தார். சரத்பவார் சம்பவத்தை கேலி செய்யவில்லை என விளக்கம் அளித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அன்னா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்து:
மகாராஷ்டிராவில் கடந்த ஆட்சியின்போது தேசியவாத காங்கிரசை சேர்ந்த 3 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சவாந்த் கமிஷன், 3 அமைச்சர்களுக்கும் ஊழலில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தது. இதை தொடர்ந்து அவர்கள் பதவியிலிருந்து விலகினார்கள். ஆனால் அவர்கள் மீது சரத்பவார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஊழல்வாதிகளை காப்பாற்றும் பழக்கம் சரத்பவாருக்கு உள்ளது. அவரை அறைந்ததற்காக அரசியல்வாதிகள் கோபப்படுகிறார்கள். ஆனால் நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதற்காக அவர்கள் கோபப்படவில்லை. இளைஞர் எதற்காக அறைந்தார் என்பது குறித்து யோசித்து பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து வருகிறது. எல்லை மீறும் போது ஒரு சிலர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார். (Tamil Murasu)

சாகும் வரை உண்ணாவிரதம் : மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை 19ம் தேதிக்குள் மீட்காவிட்டால், ராமேஸ்வரத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமான விசைப்படகு மீனவர்கள், கடந்தமாதம் 28ம் தேதி கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் கிளாட்வின் என்பவரது படகில் இருந்த மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்தனர். இவர்கள் 5 பேர் மீதும், போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை ஊர்க்காவல் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட இவர் களது காவலை, வரும் 19ம் தேதி வரை நீட்டித்து, மல்லாகம் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது. மீனவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவர்களை மீட்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர்.
தொடர் போராட்டத்தை கைவிடக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலெக்டர் அருண்ராய் தலைமையில் நேற்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆர்டிஓ முத்துக்குமரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். 14 மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய கலெக்டர், “இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க அங்கு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மீனவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றார். ஆனால் கலெக்டரின் வேண்டுகோளை மீனவர்கள் ஏற்க மறுத்தனர். மீனவர்களை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மீனவ சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை வரும் 19ம் தேதிக்குள் விடுதலை செய்யாவிட்டால், ராமேஸ்வரத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றனர்.

Web firms blamed : India vows crackdown on offensive internet content

Communications Minister Kapil Sibal met officials from Google, Facebook and other websites on Monday.
On Tuesday he said the firms had told him they were unable to take action.He said the government would introduce guidelines to ensure "blasphemous material" did not appear on internet. Doctored photos of the PM and Sonia Gandhi have angered the government.


Addressing a press conference in the capital, Delhi, on Tuesday, Mr Sibal said he had asked the companies in September to remove images and statements deemed offensive to religious groups, but that they had ignored his requests.

"At a meeting on 4 November, we showed them some of the photos and they too agreed that the photos were offensive," he said.
The minister accused the internet firms of not co-operating.

"They have given it to me in writing that they will not do anything until we get an order from the court," he said.

Mr Sibal said companies would not be allowed to say, "we throw up our hands, we can't do anything about this".

India has more than 100 million internet users and web companies say the large number means broad action is impossible.

Facebook said in a statement that it recognised the "government's interest in minimising the amount of abusive content available online".
But, it said, there were policies in place that enabled people to report abusive content.
"We will remove any content that violates our terms, which are designed to keep material that is hateful, threatening, incites violence or contains nudity off the service."
Facebook said it would "continue to engage with the Indian authorities as they debate this important issue".
India has 28 million Facebook accounts.
A spokesperson for Google was quoted by the Press Trust of India as saying that it did remove illegal material.
But the spokesperson added: "When content is legal and does not violate our policies, we will not remove it just because it is controversial, as we believe that people's differing views, so long as they are legal, should be respected and protected."
Rajesh Chharia, president of the Internet Service Providers Association of India, told Associated Press that internet companies should be aware of national security issues.
"I am not favouring censorship - self-regulation is the best censorship available to our system [but] we should not do anything which should harm the peace of the country."

Tuesday, 6 December 2011

Youngest Couple Married : Engaged Young Couple


Youngest Couple of the World
Every little girl dreams about her wedding day, complete with visions of a big beautiful white dress and, of course, the perfect man. But 9-year-old Jayla Cooper didn't have a lifetime to wait for Mr. Right.
 

The Southlake, TX, girl had been battling leukemia for two years, a battle that would end in just a matter of weeks. But what Jayla did have was a groom. He's her best friend, Jose Griggs, 7, a fellow patient at Children's Medical Center in Dallas.

Jayla and Jose tied the knot in February 2009 to fulfill her final wish: Getting married in a beautiful wedding, surrounded by family and friends. From the flowers to the banquet hall, donations poured in to give a North Texas bride the wedding of her dreams.

Jaila died on Wednesday, April 1, 2009.
============

Worlds Couple Engaged in Syria She's 3, He's 5
Hala and her fiance Khalid

Khalid's father Juma -- who lives in the city of Homs, some 100 miles north of Damascus -- told the paper that his son asked for his fellow kindergartner's hand in marriage "of his own free will," after a brief holiday romance. Both families are now reportedly preparing for the ceremony, which will take place in a decade, when Khalid is 15 and Hala 13. Such a ceremony would still be against Syrian law, which states the minimum age for marriage is 17 for women and 18 for men.

While child marriages aren't unknown in Syria's more remote rural regions -- ceremonies involving girls as young as 13 and boys age 15 have been known to take place in defiance of the law -- they're almost unheard of in its cities, where the average age of marriage for women is 25, according to rights organization Freedom House.

However, Juma has pledged that if the youngsters decide not to marry in a decade's time, he'll honor their request. "We know that Khalid or Hala might change their mind in the future," he said. "But what we do know at this stage is that they are very happy and talk to each other every day."

Exam for pilot licences goes online

In a bid to prevent pilots from getting licences through fraudulent means, Civil Aviation regulator DGCA on Dec 3rd started for the first time its online examinations for pilot licences.

The examinations for both Commercial Pilots Licence (CPL) and Airlines Transport Pilots Licence (ATPL) would be conducted till December 9, a Directorate General of Civil Aviation official said.
The examination are held at seven centres in six cities across the country including two online centres in Mumbai. 2,192 candidates are expected to appear for CPL test and another 1,339 for ATPL exam, the DGCA official said.
DGCA chief E K Bharat Bhushan had told PTI that introduction of the online test system was part of efforts to modernise the examination system for pilots. This time even the registration of candidates for the examinations had been conducted online, the official said.
The DGCA has been reviewing its procedures for conducting pilots' tests after a chance probe earlier this year had found that unscrupulous elements had managed to procure licences after bending rules.
The government had after the probe started plugging loopholes in the examination and licencing system for pilots.

யாரும் வன்முறையில் இறங்க வேண்டாம் : கேரள முதல்வர் உம்மன்சாண்டி வேண்டுகோள்

இடுக்கியில் போராட்டம்
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக & கேரள எல்லை யில் பதற்றம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் குமுளியில் தமிழக லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று அங்கு தமிழர்கள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களை துரத்தி துரத்தி ஒரு கும்பல் தாக்கியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் சுமூக தீர்வு காண, தமிழகம் மற்றும் கேரளா இடையே அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து இருமாநில நீர்வளத் துறை செயலாளர்களுக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை கேரளா வரவேற்கிறது. பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே கேரளா விரும்புகிறது. தமிழகத்துக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பதே கேரளாவின் நிலைப்பாடு. குமுளி மற்றும் கம்பம் மேடு பகுதியில் சில துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது. யாரும் சட்டத்தை கையிலெடுக்க அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.
முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் இன்று அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

NASA confirms another Earth (சுத்துகிறது இன்னொரு பூமி)

NASA has found a planet outside our solar system that looks to be an awful lot like Earth or maybe even better, given that its climate is roughly like a balmy day in Key West.
The planet, Kepler-22b, is the first confirmed planet within the "habitable zone," meaning that liquid water could exist on the surface and support life. It is almost 2.5 times the size of Earth and 600 light years away, so you may want to start saving your frequent flier miles now if you want your great-to-the-29th-power grandchildren to have a shot at vacationing there.
Scientists estimate the temperature on the surface of the planet to be about 72 degrees, according to the Associated Press. Kepler-22b circles a star very similar to our own sun, although it does it in a slightly shorter period, with one Kepler 22-b year lasting about 290 days.
Scientists say it's likely the planet has water and land, but can't yet rule out the possibility that it is an entirely gaseous planet, which would severely limit its potential as an intergalactic vacation destination.
NASA's Kepler mission is all about finding potentially habitable planets by identifying possible candidates in other solar systems that are both roughly Earth-sized and in the "habitable zone" of their solar systems. The mission's most recent data identifies 48 candidate planets, but Kepler 22-b is the first to be confirmed.
Tamil : [சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் உறுதிசெய்துள்ளது.
அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வேறு ஏதும் கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது. வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறைய பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.
அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கேமராக்கள் உறுதி செய்துள்ளன. சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உள்ளிட்ட அம்சங்களை பார்க்கும்போது, உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது. கெப்ளர் 22பி என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது.]

இடுக்கியில் 144 தடை : முற்றுகிறது முல்லை பெரியாறு பிரச்னை

ஐயப்ப பக்தர்கள் பீதி
(6.12.11) முல்லை பெரியாறு சர்ச்சையில் தமிழக & கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால், இடுக்கியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் கேரளா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேனியில் பீதியுடன் தங்கியுள்ளனர்.
பதில் தாக்குதலால் தமிழகத்திலும் பதற்றம் பரவுகிறது 
முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழக தென் மாவட்டங்களிலும், கேரளாவிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள இளைஞர் காங்கிரஸ், மாநில பாஜவினர் பெரியாறு அணையை இடிக்க முயன்றது தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகப்படுத்தி உள்ளது.
கேரளாவில் தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கியதாலும், டிரைவர்களை தாக்கியதாலும், கம்பம், கூடலூரில் நேற்று மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கூடலூரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையை 50க்கும் அதிகமான இடங்களில் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் உம்மன்சாண்டி உருவ பொம்மை எரிப்பு
நூற்றுக்கணக்கான பைக்குகளில் கம்பம் நகர் முழுவதும் இளைஞர்கள் வலம் வந்து கேரளாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கேரளா செல்ல முயன்ற பஸ்கள் மறிக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளிகளுக்கு நேற்று மதியம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பதற்றம் அதிகரித்ததை அடுத்து தமிழக & கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு பகுதிகளில் நேற்று கேரள போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால், தமிழகத்துக்கு உட்பட்ட கம்பம், கூடலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி கலெக்டர் பழனிச்சாமி, தென்மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், திண்டுக்கல் எஸ்பி ஜெயச்சந்திரன், மதுரை சிறப்பு அதிரடிப் படை எஸ்பி ஈஸ்வரன், நெல்லை எஸ்பி விஜேந்திர பிதரி, விருதுநகர் எஸ்பி நஜ்மல் ஹோடா, ராமநாதபுரம் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் கம்பத்தில் முகாமிட்டுள்ளனர்
தமிழகத்தில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதால் நேற்று முதல் ஐயப்ப பக்தர்கள் யாரும் கேரளா செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை முதல் சபரிமலை செல்ல சாரை சாரையாக வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் மறித்து நிறுத்தி விட்டனர்.
உத்தமபாளையம் அருகே ஆலைமலையான்பட்டியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையை எரிப்பதற்காக ஊர்வலமாக எடுத்துவரும் மக்கள்.
தமிழக & கேரள எல்லையில் பதற்றம் நிலவுவதால் தேனி மாவட்டம் கம்பத்தில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதால் நேற்று முதல் ஐயப்ப பக்தர்கள் யாரும் கேரளா செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை முதல் சபரிமலை செல்ல சாரை சாரையாக வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் மறித்து நிறுத்தி விட்டனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 2 நாட்களாக கம்பம், கூடலூர் பகுதியில் தவித்து வருகின்றனர். இன்றும் அதே நிலை நீடித்தது. இதற்கிடையில் ஏற்கனவே சபரிமலை சென்ற ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்களும் திரும்பி வர முடியாமல் கேரளாவில் தவித்து வருகின்றனர்.
கேரளாவுக்கு செல்ல முடியாததால் பழநி கோயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது. பாளையம், தேவாரம், பெரியகுளம், சின்னமனூர், வீரபாண்டி என ஏராளமான ஊர்களில் உம்மன்சாண்டியின் உருவபொம்மையை இன்று மக்கள் தீயிட்டு கொளுத்தினர். தேனி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநில எல்லையில் வஜ்ரா, தீயணைப்பு வாகனங்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உத்தமபாளையம் டிஎஸ்பி ஸ்டாலின் தலைமையில் விடிய விடிய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கேரள நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல்
கேரளா சென்ற தமிழக தொழிலாளர்களின் ஜீப்களை நேற்று முன்தினம் சிறை பிடித்து ஒரு கும்பல் தாக்கியது. தகவல் பரவியதும் ஆத்திரம் அடைந்த மக்கள் கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் கேரள வாகனங்கள் அனைத்தையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவாரம், கம்பம் உள்ளிட்ட இடங்களில் கேரளாவை சேர்ந்த சிலர் நிதி நிறுவனங்கள், ஓட்டல்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களை தாக்கிய பொதுமக்கள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சுக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட சில ஜீப்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன.   (Tamil Murasu)

தமிழகத்தில் மாவட்ட வாரியான மக்கள்தொகை : 15 -வது கணக்கெடுப்பு

2011 மார்ச் 31 -ம் தேதி வெளியிடப்பட்ட 15 -வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மக்கள்தொகை

சட்டவிரோதம் : ஊழியருக்கு கொடுத்த பணத்தை ஓய்வு பெற்ற பிறகு அரசு கேட்பது

பணியின் போது பெற்ற பணத்தை ஓய்வு பெற்ற பிறகு அரசு கேட்பது நியாயமற்றது , சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த கண்ணம்மாள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
நான் அரசு சுகாதார மையத்தில் மலேரியா ஓழிப்பு களப்பணியாளராக கடந்த 1969ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். எனது பணியை கடந்த 1978ம் ஆண்டு அரசு நிரந்தரப்படுத்தியது. இதனால் எனக்கு கடந்த 1969ம் ஆண்டில் இருந்து ஊதியம் கொடுக்கப்பட்டது.
கடந்த 32 ஆண்டுகளாக நான் அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய பிறகு கடந்த 2010ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெற்ற பிறகு அரசு எனக்கு ஒரு நோட்டீசு கொடுத்தது. அதில், கடந்த 1978ம் ஆண்டு தான் நான் பணியில் நிரந்தரப்படுத்தப்பட்டேன். ஆனால் கடந்த 1969ம் ஆண்டில் இருந்து பணி நிரந்ததரத்திற்கான ஊதிய பயனடைந்துள்ளது தவறானது, ஆகவே கடந்த 1969ம் ஆண்டில் இருந்து 1978ம் ஆண்டு வரை கூடுதலாக பெற்ற பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறியுள்ளது.
இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே 32 ஆண்டுக்கு பிறகு எனக்கு அரசு நோட்டீசு கொடுத்தது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து, மனுதாரர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசு நோட்டீசு கொடுத்தது சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் அரசுக்கு சேர வேண்டிய பணத்தை திரும்ப கேட்க கூடாது கூறியுள்ளது. எனவே 32 ஆண்டுகளுக்கு பிறகு மனுதாரரிடம் பணத்தை திரும்ப அரசு கேட்பது சட்டவிரோமானது.
ஆகவே அரசு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.

200 ஆண்டுகளுக்கு மேல் பயன்தரும் ‘ஜியோபேக்’ மூட்டைகள் உப்பு நீராலும் பாதிக்கப்படாது

தண்ணீரில் போட்டாலும் 200 ஆண்டுகளுக்கு மேல் பாதிப்பு ஏற்படாமல் மண் அரிப்பை தடுக்க உதவும் ‘ஜியோபேக்’ என்னும் பைபர் இழைகளால் ஆன பை, கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப் படுகிறது.
மழை மற்றும் வெள்ளம் ஏற்படும்போது வாய்க்கால், ஏரி மற்றும் நீர்நிலைகளின் கரைகள் எளிதில் உடையும். அப்போது பொதுப்பணி த்துறை சார்பில் மணல் நிரப்பப்பட்ட சாக்கு மூட்டைகள் கரை உடையும் இடத்தில் போடப்பட்டு உடைப்பு சரி செய்யப்படு வது வழக்கம். ஆனால், நீண்ட நாள் பயன்படும் வகையிலும், மண் அரிப்பை தடுக்கும் வகையிலும், ‘ஜியோபேக்’ வகை சாக்கு மூட்டைகளை பொதுப் பணித்துறையினர் தற்போது அறிமுகம் செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அளக்குடி என்ற இடத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி, கரையை பலப்படுத்தும் வகையில் கான்கிரீட் சிமென்ட் தூண் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. ஆற்றின் கரையை ஒட்டி, மண் அரிப்பை தடுக்கும் வகையில் ‘ஜியோபேக்’ என்ற வகை சாக்கு மூட்டைகளில் மணல் கொட்டி அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, கொள்ளிடம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மஜித் கூறுகையில், ஜியோபேக் என்பது கண்ணாடி நாரினால் (பைபர் கிளாஸ்) தயாரிக்கப்பட்ட பெரிய பை போன்றது.
இந்த பையில் மணலை நிரப்பி, தண்ணீரு க்குள் போட்டுவிட்டால் 200 ஆண்டுகள் ஆனாலும் பைக்கு பாதிப்பு ஏற்படாமல் அப்படியே இருக்கும். இதனால் மண் அரிப்பு நீண்ட காலத்திற்கு தடுக்கப் படும்.
இது உப்பு நீராலும் பாதிக்கப்படாது என்றார். (Dinakaran)

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால் எல்கேஜி மாணவன் மூச்சுத் திணறி சாவு :

தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால், எல்.கே.ஜி. மாணவன் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான்.
சென்னை அடுத்த கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், தனியார் சாப்ட்வேர் கம்பெனி மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் களது மகன் ஹரீஸ் சாய்நாதன். மூன்றரை வயது சிறுவன். இவன் பல்லாவரம், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.
கிருஷ்ணகுமார், தனது மகனை நேற்று காரில் அழைத்து வந்து பள்ளியில் விட்டுச் சென்றார். ஹரீஸ், காலை 10.15 மணிக்கு பள்ளி வராண்டாவில் சக மாணவர்களுடன் வீட்டில் இருந்து கொண்டு வந்த வாழைப்பழத்தை சாப் பிட்டுக் கொண்டிருந்தான். வேகமாக சாப்பிட்டதாக தெரிகிறது.
அப்போது, எதிர்பாராதவிதமாக பழம் தொண்டையில் சிக்கியது. இதில் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் அவனுக்கு முதலுதவி செய்தனர். இருப்பினும், மூச்சுத் திணறல் நீடித்தது. பின்னர் வலிப்பு ஏற்பட்டது.
பயந்துபோன பள்ளி ஆசிரியர்கள், அவனை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதனை செய்த மருத்துவர் ஹரீஸ், ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், ஹரீஸ் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், ஹரீஸ் காலையில் என்னுடன் காரில் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தான். நான் வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில், அவன் இறந்து விட்ட செய்தி என்னை அதிர்ச்சியடைய செய்துவிட்டதாக கூறி கதறி அழுத்தார்.  (- தினகரன்)
"பெற்றோர்கள் எளிதில் ஜீரணம் ஆக கூடிய கடினமல்லாத உணவுகளை தங்கள் குழந்தைகளுக்கு தருவதன் மூலம் இதுபோன்ற இழப்பு /அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்"

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்று : அரசு புது உத்தரவு

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வு துறை தெரிவித்துள்ளது. இதற்காக, விண்ணப்பத்துடன் வழங்கப்பட்டுள்ள கூடுதல் படிவத்தில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கலர் புகைப்படம் ஒட்டி, தேர்வர்கள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்காமல், தனித்தேர்வராக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. வரும் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அன்றைய தினம் மாலை 5 மணிக்குள், விண்ணப்பம் விநியோகம் செய்த மையத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, தனித்தேர் வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத்தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. இதற்கு வசதியாக, தனித்தேர்வருக்கான விண்ணப்பத்துடன் கூடுதல் படிவம் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த படிவத்தில் தனித்தேர்வர்கள் தனியாக ஒரு கலர் புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். அந்த படிவத்தில் ஒட்டப்பட்ட புகைப்படத்தில் தேர்வர்களோ, அதிகாரிகளோ கையெழுத் திடத் தேவையில்லை. புகைப்படம், சமீபத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
புகைப்படம் ஒட்டப்பட்ட படிவம், தனித்தேர்வர் விண்ணப்பம் ஆகியவற்றில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடிக்கவோ, குண்டூசி குத்தவோ கூடாது. விண்ணப்பங்களை சேர்த்து அனுப்ப ‘ஜெம் கிளிப்’ மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். தேர்வரின் புகைப்படம்தான் படிவத்தில் ஒட்டப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட தேர்வரே, நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசுத்தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.