Saturday 31 March 2012

ரயில்வே பட்ஜெட் : ரயில் கட்டணம் ரத்துகளும் உயர்வுகளும்

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி முதல்வகுப்பு 2 அடுக்கு ஏசி, ஏசி முதல் வகுப்பு கட்டணங்கள நாளை முதல் உயர்கிறது. ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 காசு முதல் 30 காசு வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

Friday 30 March 2012

படிப்பு முடியவில்லை : ரூ 1.34 கோடி சம்பளம் : பேஸ்புக்

சமூக இணையதளமான பேஸ்புக், உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவருக்கு ரூ 1.34 கோடி சம்பளம் தர ஒப்புக் கொண்டுள்ளது.

திருமணம் : பாலியல் : விவாகரத்து


கணவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்று இளம் பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புத்திசாலி காகம் - 2012


thristy-crow-story
சென்ற வாரம் சனிக்கிழமை மதிய நேரம் ஒரு காக்கா எழாம் வகுப்பு படிக்கும் தன்மகள் காக்கா உடன் ஷாப்பிங் சென்றுவிட்டு பறந்து வீடு போய் கொண்டிருந்தன.


மகள் காக்கா தன் அம்மா காக்காவிடம் "மம்மி ஒரே தாகமா இருக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிதாம்மா " என்று கேட்டது.

Thursday 29 March 2012

தனியார் நிதி நிறுவன மேலாளர் ரூ.1.40 கோடி மோசடி


ராஜாக்கமங்கலம் அடுத்த ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (51). இவர் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவ்வப்போது இவர் தனது உறவினர்கள் நகைகளை இந்த தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த தணிக்கையின் போது, ஞானதாஸ் போலியான ஆவணங்கள் மூலம் நகைகள் இல்லாமல் அடகு வைத்ததாக கூறி ரூ.1 கோடி 40 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகுமார் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய் தார். 

"ஆண்களிடம் பணம் பறித்த பெண்கள்" - சம உரிமையை தவறாக புரிந்து கொண்டார்களோ???


போரூர் அருகில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (60). தனியார் கம்பெனியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.இவர் நேற்று மாலை ஐயப்பன் தாங்கலில் இருந்து ஆலந்தூருக்கு 54 சி பஸ்சில் சென்றுள்ளார். தனியார் மருததுவமனை பஸ் ஸ்டாப்பில் 2 பெண்கள் ஏறினர். அவர்கள் ஆண்கள் பக்கமாக வந்து, கையில் கொண்டு வந்த பெரியபையை ஜெயமணியிடம் கொடுத்தனர்.

"கூடன்குளமும் கரண்ட் நாடகமும்"


வெறி பிடித்த அரசியல் சொறி நாய்களிடமும்
பண மதம் பிடித்த வெறி நாய்களிடமும்
இடமற்று போனது மனித நேயங்கள்... மனித உரிமைகள்...

கேட்டால்... நாட்டு வளர்ச்சியாம்...

விறகு வெட்டி - 2012

முன்கதை சுருக்கம் : ஒரு விறகு வெட்டி காட்டிற்கு விறகு வெட்ட சென்று கோடரி குளத்தில் விழ .அவன் அழ ,வனதேவதை வந்து காரணம் வினவி, அவனுக்கு குளத்தில் இறங்கி தங்கம், வெள்ளி, கோடரிகளை எடுத்து அவனிடம் கேட்டது. இறுதியில் அவனது நேர்மையை பாராட்டி மூன்று கோடாரிகளையும் அவனிடமே தந்தது.  

Wednesday 28 March 2012

"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" இது பழமொழி : சிந்திக்க வேண்டும்!!!


சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி தேவலம் தெருவை சேர்ந்தவர்கள் சோனி (24), முகமது மோசின். இருவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த சோனியின் பெற்றோர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்த நாசீருக்கு சோனியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது இவர்களுக்கு கவுசித் (3) என்ற மகன் உள்ளான். திருமணம் முடிந்தும் சோனிக்கும், முகமது மோசினுக்கும் தொடர்பு இருந்துள்ளது.

Earthquake hit Northeastern Japan


A magnitude 6.3 earthquake hit northeastern Japan on Tuesday, the U.S. Geological Survey (USGS) said, but there were no reports of damages or casualties and a tsunami warning was not issued.

ராணுவத்தின் தலைமை தளபதி பேசுவதை குறைக்க சொல்லும் அரசியல்வாதி

ராணுவத்தின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அதன் தலைமை தளபதி பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும் என சமாஜ்வாடி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

"இன்று போய் நாளை வா" : படித்துவிட்டு ஏமாறும் ரத்த காட்டேரிகள்


ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் ரத்த காட்டேரி பீதி காரணமாக வீடுகளில் ‘இன்று போய் நாளை வா’ என்ற வாசகத்துடன் சூலாயுதம் வரையப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகளிலும் உள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம், கம்மகிருஷ்ணபள்ளி, கரும்பூர், ராமசந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரத்த காட்டேரி உலா வருவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Saturday 3 March 2012

மீன்பிடி படகு மீது மோதியது சிங்கப்பூர் கப்பல் : உடனடியாக கொச்சி திரும்ப உத்தரவு


ஆலப்புழா அருகே மீன்பிடி படகு மீது மோதி விட்டு தப்பி சென்றது சிங்கப்பூர் சரக்கு கப்பல் என்று தெரியவந்துள்ளது. கோவா- சிங்கப்பூர் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்த கப்பலை உடனடியாக கொச்சி திரும்ப இந்திய கடற்படை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Friday 2 March 2012

ரூ 1 கோடி இருக்க்க??? வாங்க, விண்வெளி டூர் போகலாம்.

விண்வெளிக்கு இயக்குவதற்காக விமானம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஸ்பேஸ்ஷிப் 2’ விண்கலம்.
விண்வெளி டூர் சர்வீஸ் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் கூறியுள்ளது.

An Open Letter to the Fellow Citizens of India : PMANE

Peoples’ Movement Against Nuclear Energy (PMANE)         February 28, 2012
Idinthakarai 627 104
Tirunelveli District
Tamil Nadu, India
koodankulam@yahoo.com

Dear Sisters and Brothers of India:

Greetings! Please accept our sincere thanks for your keen interest in our struggle and the kind support for our cause. As you know, we, the fisherfolks, farmers, shopkeepers, Dalit workers, beedi-rolling women and others near the southernmost tip of India, have been fighting against the Koodankulam Nuclear power Project (KKNPP) since the late 1980s.

மீன்பிடி படகு மீது கப்பல் மோதி 2 பேர் பலி : தொடரும் மீனவர் சோகம்


கொல்லம் நீண்டகரையில் இருந்து டான் என்ற மீன்பிடி படகு நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. இந்த படகில் அதே பகுதியை சேர்ந்த ஜஸ்டின், சேவியர், மைக்கேல், ஜோசப், கிளீட்டஸ், பேபிச்சன், சந்தோஷ் ஆகியோர் இருந்தனர்.

Thursday 1 March 2012

சிறையில் விளையும் காய்கறிகள் : கலக்கும் புழல் மத்திய சிறை

புழல் மத்திய சிறையில் 10 ஏக்கர் பரப்பில் கைதிகளே விவசாயம் செய்கின்றனர். இதில் தற்போது ரூ 5 லட்சம் மதிப்புள்ள 2 டன் காய்கறிகள் விளைந்துள்ளன.

மாலத்தீவு பகுதியில் குமரி மீனவர்கள் 11 பேர் கைது

ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் 11 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்து குல்டுசுசி தீவில் சிறையில் அடைத்தனர்.

ஜெர்மன் நபரை திருப்பிஅனுப்பி யது ஏன்? நாகர்கோவில் எஸ்.பி. பேட்டி


குமரி மாவட்ட எஸ்.பி. பிரவேஷ் குமார் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: