Saturday, 3 December 2011

No one should be denied health insurance merely on grounds of age : PIB

Insurance for Senior Citizens
December 02, 2011 The Insurance Regulatory and Development Authority (IRDA), the regulator in the insurance sector had constituted a Senior Citizens Committee in 2007. Based on the recommendations of the Committee, the IRDA had instructed insurers in April, 2007 to allow entry in health insurance policy at least till 65 years of age. In August 2008, IRDA mandated establishment of a separate channel to address health insurance related grievances of senior citizens. Further, vide instructions issued in March, 2009, IRDA instructed that apart from the entry age of 65 years, the denial of health insurance to senior citizens on any grounds should be in writing with reasons furnished and recorded and the premium charged to senior citizens should be fair, justified and transparent and duly disclosed upfront. As the most recent initiative, IRDA, while approving health insurance products, advises all general insurers to ensure that there is no exit age in the policy which ensures that no one is denied health insurance merely on grounds of age. 

This information was given by the Minister of State for Finance, Shri Namo Narain Meena in written reply to an Unstarred Question in Lok Sabha today.

[ Press Information Bureau - Government of India -Ministry of Finance ]

02-December-2011 18:8 IST

Pakistani actress : photo-shoot Mess

A controversial Pakistani actress has been forced to deny posing naked for the India edition of FHM sporting a tattoo of the initials 'ISI' on her arm.
Veena Malik appears topless on the front of the December issue of FHM India, sparking outrage among conservatives in Pakistan - both for her nudity and the reference to Pakistan's intelligence agency.
But Miss Malik has strongly denied posing for the lads' mag, with the 33-year-old star insisting the picture had been 'morphed'.
'I have never posed nude. I have never done anything like that ever. My manager and legal team is looking into the matter. We will take legal action against them,' Miss Malik told PTI, the Indian press agency.
FHM India's editor, Kabeer Sharma, insisted however that nothing had been doctored, and claimed that the magazine could prove the photo's authenticity.
Mr Sharma told the BBC: 'We have video footage of the shoot as well as emails from Veena about how she's looking forward to the cover.'
The image was revealed on FHM India's website, Facebook page and Twitter account simultaneously today.
Dressed in shorts and seen hugging actor Ashmit Patel as well as swimming with Baywatch star Pamela Anderson, she was accused of behaving improperly by some Muslim clerics.
Miss Malik has also been accused of being a porn star. However, her refreshingly outspoken views have won her many fans from Pakistan's younger and more liberal circles.
Confronted about her 'immoral' behaviour by cleric Mufti Abdul Qawi on a TV talk show, she snapped back that the country had far more important things to consider - including the rape of children in mosques.
'I’m a Muslim woman, and I know my limits,' she shouted back. The mufti appeared to be too astounded to respond.

நாகர்கோவிலில் தொடரும் சோகம் : பெண் படுகொலை : சுடுகாட்டில் உடலை வீசிச்சென்றனர்

(3.11.11) நாகர்கோவில் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த கும்பல், சுடுகாட்டில் உள்ள புதரில் அவரது உடலை வீசி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அடுத்த தாழக்குடி & திருப்பதிசாரம் செல்லும் சாலையில் தாழக்குடி பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் அருகில் சுடுகாடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள புதரில் 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக இன்று காலை ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆடைகள் களையப்பட்டு அலங்கோலமான நிலையில் உடல், புதருக்குள் திணிக்கப்பட்டு இருந்தது.
கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. மேலும் உதடு, காது மற்றும் முகத்தில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. கழுத்தை இறுக்கியும், அடித்தும் இவரை கொலை செய்துள்ளனர். அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சுடுகாடு இருக்கும் பகுதியில் வைத்து உடலை எரிப்பதற்கு கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், நேற்று இரவு முதல் பெய்த மழையால் அவர்களின் திட்டம் நிறைவேறாமல் போய் இருக்கிறது. இதனால் புதருக்குள் உடலை திணித்து வைத்து இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்தையும், பெண்ணின் உடலையும் எஸ்பி லட்சுமி இன்று பார்வையிட்டார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.       (Tamilmurasu) 

4 மகளிர் குழு தலைவிகள் கைது : வங்கியில் ரூ.8 கோடி மோசடி

(3.11.11) விழுப்புரம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, தொழில் கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 20 குழுக்களின் பெயர்களை போலியாக தயாரித்தும், போலி ரேஷன் கார்டுகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து 1.04.2008 அன்று முதல் 31.12.2010 வரை ரூ.8 கோடி மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மகளிர் சுயஉதவிக்குழு தலைவிகள் ஜெயபாரதி, லட்சுமி, சித்ரா, மீனாட்சி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். 
தலைமறைவாக உள்ள வங்கி அதிகாரிகள் 6 பேர் மற்றும் ஒரு பெண் ஆகிய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

டிசம்பர் 3 : உலக மாற்றுத் திறனாளிகள் தினம் [International Day of People Differently Able]

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்... அனைவரையும் ஏற்று கொள்வோம்.... மதிப்போம்.... மாண்புறுவோம்
பிறரை ஏளனம் செய்வதை விடுத்து, திறமைகளை வேற்றுமை பாராது உக்குவிப்போம். 

"DISABILITY IS NOT INABILITY"
Follows what Wikipedia says about "International Day of People with Disability  [உலக மாற்றுத் திறனாளிகள் தினம்]

International Day of People with Disability (December 3) is an international observance promoted by the United Nations since 1992. It has been celebrated with varying degrees of success around the planet. The observance of the Day aims to promote an understanding of disability issues and mobilize support for the dignity, rights and well-being of persons with disabilities. It also seeks to increase awareness of gains to be derived from the integration of persons with disabilities in every aspect of political, social, economic and cultural life. It was originally called "International Day of Disabled Persons". Each year the day focuses on a different issue.

The International Year of Disabled Persons 1981

In 1976, the United Nations General Assembly proclaimed 1981 as the International Year of Disabled Persons. It called for a plan of action at the national, regional and international levels, with an emphasis on equalization of opportunities, rehabilitation and prevention of disabilities.
The theme of IYDP was "full participation and equality", defined as the right of persons with disabilities to take part fully in the life and development of their societies, enjoy living conditions equal to those of other citizens, and have an equal share in improved conditions resulting from socio-economic development.

United Nations Decade of Disabled Persons 1983-1992

To provide a time frame during which Governments and organizations could implement the activities recommended in the World Programme of Action, the General Assembly proclaimed 1983-1992 the United Nations Decade of Disabled Persons.

நிதி ஆலோசனை குழு பரிந்துரை : எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இனி கட்டணம்?

(3.11.11) வீட்டின் அருகில் உள்ள வேறு வங்கி ஏடிஎம்மில் 5 முறை பணம் எடுத்தாச்சு. மாத கடைசியில் ரூ 20 சேமிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் தேடி போகிறீர்கள்... இனி, அது அவசியமில்லை. ஏனெனில், எந்த ஏடிஎம்மில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் இனி கட்டணம் செலுத்த நேரிடும்.
இதற்கான பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவை பிரிவு செயலர் மிட்டல் தலைமையிலான பேமென்ட் சிஸ்டம் ஆலோசனை குழு அளித்துள்ளது. அதுபற்றி நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. கணக்கு வைத்துள்ள வங்கி இப்போது ஆண்டுக்கு ரூ 99  வரை ஏடிஎம் சேவைக்கு கட்டணம் வசூலிக்கிறது.
எனவே, அதன் ஏடிஎம்கள் முற்றிலும் இலவசம். மற்ற வங்கி ஏடிஎம்களை மாதத்துக்கு 5 முறை மட்டும் இலவசமாக பயன்படுத்தலாம். கூடுதலானால் ரூ 20 கட்டணம் என்பது நடைமுறையில் இருக்கிறது.
இந்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அமல்படுத்தினால், கணக்கு வைத்துள்ள வங்கி உட்பட எல்லா ஏடிஎம்களிலும் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படும்.
எனினும், அது ஆன்லைன் தொகை பரிமாற்றத்துக்கு பெறப்படுவதுபோல குறைவான கட்டணமாக இருக்கும். ஆன்லைன் தொகை பரிமாற்றத்தில் வங்கிகள் ரூ 1லட்சம் வரை ரூ 6 கட்டணம் வசூலிக்கின்றன. அதுபோல ஒவ்வொரு முறை ஏடிஎம் பயன்படுத்தவும் சிறிய கட்டணம் பிடித்தம் செய்யப்படும். எனவே, ஆண்டு கட்டணத்தை வங்கிகள் கைவிடும் என்று தெரிகிறது. 
[நிதி அமைச்சகம் பரிசீலனை
  • ஏடிஎம் பண பரிமாற்றத்தில் வங்கிகள் இடையேயான கட்டணத்தை (இன்டர்&பாங்க் சார்ஜ்) கைவிட குழு வலியுறுத்தியுள்ளது.
  • வழக்கமான வங்கி பெயருடன் ஏடிஎம் வழங்குவதை தவிர்த்து அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான வெள்ளை ஏடிஎம் வெளியிட பரிந்துரைத்துள்ளது. ]
இதனால், ஏடிஎம் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுவது மட்டுமின்றி வங்கிகள் கூடுதல் ஏடிஎம்களை திறக்க நிதி ஆதாரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகம் ஏற்பதை பொருத்தே இது நடைமுறைக்கு வரக்கூடும்.  (தினகரன்)

முல்லைப்பெரியாறு அணை : தமிழகம் & கேரளா 5ம் தேதி பேச்சு

மத்திய அரசு ஏற்பாடு
(3.11.11) முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசின் நீர்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. அணைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட சிறு நிலஅதிர்வுகளை காரணம்காட்டி, அணை பலவீனம் அடைந்துவிட்டதாகவும், உடைந்தால் பேரழிவு ஏற்படும் என்று கேரள மக்களிடையே பீதி கிளப்பி வருகிறது. புதிய அணை கட்ட கோரி கேரளாவில் பல போராட்டங்களும் நடத்தப்படுகின்றன.
ஆனால், அணையை பராமரிக்கும் தமிழக அரசு அது பலமானதாக இருப்பதை ஆதாரத்துடன் விளக்கி உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் பழைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா வலியுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, கேரளாவின் விஷம பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதேபோல், புதிய அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண தமிழகம், கேரளா ஆகிய இருமாநிலங்களின் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டும்படி மத்திய நீர்வளத்துறைக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கேரள முதல்வர் உம்மன் சாண்டி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் உம்மன் சாண்டி அளித்த பேட்டியில், தமிழகம், கேரளா அதிகாரிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை 5ம் தேதி நடைபெறும் என்று மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  (Dhinakaran)

Friday, 2 December 2011

இளம்பெண்ணுக்கு விபரீத நோய் : வாய்விட்டு சிரித்தால் உயிர் போகும்


Laughing could kill Her


A young teacher with a rare neurological disorder has been warned she could die if she laughs too hard, because it could push her brain out of her skull.



Carolyn Gibbons, 23, suffers from a condition called Chiari malformation, which means the lower part of her brain is too big. This can block the flow of fluid to her head through her spinal canal.

She endures blurred vision, slurred speech and crippling migraines and any sudden movements feel like her head 'is about to pop'.

Jerking movements, such as during a fit of giggles, could cause her brain to herniate into the top of the spinal column - raising the risk of sudden death.

Miss Gibbons had no idea she had the condition until she passed out and was sick after returning home from the secondary school where she worked at the end of March last year.

இங்கிலாந்தின் ஹேம்ப்ஷயர் கவுன்டி ஹைத் என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் கரோலின் கிப்பன்ஸ். 23 வயதாகும் இவருக்கு ஒரு விபரீத பாதிப்பு. என்ன பாதிப்பு தெரியுமா? சிரித்தால் உயிர் போய்விடும்.

இங்கிலாந்தின் ஹைத் நகரில் தாய் கேதரின், 2 வயது தம்பி ஜேக்கப்புடன் வசித்து வரும் கரோலின் கிப்பன்சின் உடல்நலம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திடீரென பாதிக்கப்பட்டது. பார்வை மங்கியது. பேச்சு குழறியது. அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தது. உட்கார்ந்தால் உடனே எழுந்திருக்க முடியாது. இவ்வளவு ஏன்.. சிரிக்கக்கூட முடியாது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், மிக மிக அரிதான ‘சியாரி மால்பார்மேஷன்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். பின் மண்டையில் மூளையின் அளவு பெரிதாக உள்ளதால் மண்டையில் போதிய இடமில்லை. இதனால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளைக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல், நரம்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவே இத்தனை கோளாறுகளுக்கும் காரணம் என்றனர். உயிருக்கு ஆபத்து இருப்பதால் கடந்த ஜூலையில் ஆபரேஷனும் செய்யப்பட்டது. முதுகெலும்பின் ஒரு பகுதியையும் பின்புறம் மண்டை ஓட்டின் ஒரு பகுதியையும் வெட்டி அகற்றினர்.
கரோலின் படிப்படியாக குணமாகி வருகிறார். தற்போதும் சில பாதிப்புகள் இருக்கின்றன. அதாவது, வெகு நேரம் தூக்கமே வராது. ஒருமுறை சுமார் 60 மணி நேரம், அதாவது இரண்டரை நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்ததாக கரோலின் கூறுகிறார். இப்போதுகூட, வாய் விட்டு சிரிக்க கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள் டாக்டர்கள்.
“சிரிக்க முடியவில்லை என்பதே பெரும் சோகமாக இருந்தது. அந்த நிலையில் இருந்து மெல்ல விடுபட்டு வருகிறேன். முழுமையாக பாதிப்பில் இருந்து விடுபடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளுக்கு நன்றி” என்றார். கரோலின் கிப்பன்ஸ்

கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனி : நாளை 10 நாள் திருவிழா

சவேரியார் ஆலய 9ம் நாள் திருவிழாவையொட்டி இன்று மாலை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இன்று இரவும் தேரோட்டம் நடக்கிறது. 10 நாள் திருவிழா நாளை நிறைவடைகிறது.
பிரசித்தி பெற்ற நாகர்கோவில் கோட்டாறு கேட்டவரும் தரும் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த நவ.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இத் திருவிழாவில் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 8ம் நாள் திருவிழாவான நேற்று (1&ந்தேதி) இரவு தேர் பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர் பவனி தெற்கு தெரு, கம்போளம், ரயில்வே ரோடு, கோட்டாறு மெயின் ரோடு, வடக்கு தெரு வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை அடைந்தது. தேரோட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, உப்பு, மிளகு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். தரையில் விழுந்து வணங்கி நேர்ச்சை கடன் நிறைவேற்றினர்.
இன்று (டிச.2) 9ம் நாள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசீர், கூட்டு திருப்பலி ஆகியவை நடக்கின்றன. இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொள்கிறார். மேலும் இதில் குமரி மாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இன்று மாலை முதல் விடிய விடிய ஆலயத்துக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
நாளை (டிச.3) 10ம் நாள் திருவிழா நடக்கிறது. காலை 6 மணிக்கு தூய சவேரியார் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை வகிக்கிறார். பின்னர் காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நாளை (3 - ம் தேதி) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.
குமரி மாவட்ட எஸ்.பி. லெட்சுமி, உத்தரவின் பேரில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படை, பள்ளி மாணவர்களும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணியில் ஈடுபடுகிறார்கள். திருவிழாவையொட்டி கோட்டாறு போலீஸ் நிலைய ரோட்டில் இருந்து சவேரியார் ஆலய ரோடு வரை சாலையின் இரு பக்கமும் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் : தாறுமாறாக ஓடிய கல்லூரி பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி : 37 மாணவ, மாணவிகள் காயம்

இன்று காலை கோர விபத்து : அச்சு முறிந்து பஸ் கவிழ்ந்தது
(2.11.11) நாகர்கோவிலில் இன்று காலை தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து, பஸ்சில் இருந்த 37 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். முன்னதாக பஸ் மோதியதில் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த மற்றொரு கல்லூரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை சுசீந்திரம், தெங்கம்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. நாகர்கோவில் நாக்கால்மடம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது மோதியது. இதில் அவர் தூக்கிய எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக் மீது மோதிய பின்னரும் நிற்காமல் சென்ற பஸ் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. பஸ்சின் பின்பக்க டயர்கள் இரண்டும் பட்டையோடு கழன்று ஓடியது. பைக்கும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகளும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் வடசேரி மற்றும் ஆரல்வாய்மொழியில் இருந்து போலீசார் விரைந்தனர். இறந்து போனவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 37 மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அவர்களை கலெக்டர் மதுமதி சந்தித்து விபத்து பற்றி கேட்டறிந்தார். விபத்தில் பலியானவர் பெயர் முத்து, நெல்லை மாவட்டம் வடுகூர்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் குமரி மாவட்டத்தில் உள்ள மற்றொரு தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், போக்குவரத்து பிரிவு மேலாளராக உள்ளார். இதற்கிடையே விபத்தில் சிக்கிய பஸ் டிரைவர் கார்த்திகேயன் ஆரல்வாய்மொழி போலீசில் சரண் அடைந்தார். மாணவர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் அவர்களின் பெற்றோர் பதறியடித்தபடி ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பஸ் கவிழ்ந்ததில் டீசல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்து டீசலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் கல்லுரி மாணவ, மாணவிகள் கொண்டு வந்த டிபன் பாக்ஸ்கள், புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. அந்த பகுதி முழுவதுமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த விபத்தால் நாகர்கோவில் & ஆரல்வாய்மொழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.     (Tamil Murasu)

விஜய் & அஜீத்தை இணைத்து படம் : செல்வராகவன் பேட்டி

விஜய், அஜீத்தை இணைத்து படம் இயக்க கதை தயாராக உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.
இதுபற்றி செல்வராகவன் கூறியதாவது:
‘மயக்கம் என்ன’ படம் பார்த்து பலர் பாராட்டினார்கள். என்னைப் பொருத்தவரை வழக்கமான மசாலா படங்கள் எடுப்பதைவிட வித்தியாசமான கதை களங்களுடன் படம் இயக்கவே விரும்புகிறேன்.
யுவன் சங்கர் ராஜாவுடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை. விரைவில் அவருடன் இணைந்து படம் தருவேன். விஜய், அஜீத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்கிறார்கள். இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எப்போது அது நிறைவேறும் என்று தெரியவில்லை. எனது அடுத்த படம் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’. இதுதவிர திகில் படத்துக்காக 2 ஸ்கிரிப்ட் உள்ளது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளேன்.
இவ்வாறு செல்வராகவன் கூறினார்.  (tamil murasu) தமிழ்திரை 

In Austria : World's First Sex School

London, Dec 1 (IANS) While many people may think it's an activity which should be best learned behind closed doors, an enterprising Swedish schoolmistress thinks otherwise.
Ylva-Maria Thompson has opened the world's first international sex school for teaching the art of being better lovers, the Daily Mail reported.
The Austrian International Sex School in Vienna offers 'hands on' lessons in seduction for 1,400 pounds a term. The 'headmistress' says anyone over the age of 16 can enrol at 'the world's first college of applied sexuality'.
Students of the course are expected to stay in a co-ed dormitory block where they're expected to practice their 'homework'. By the end of their course, they are awarded a qualification.
The school head said: 'Our core education is not theoretical, but very practical. The emphasis is on how to be a better lover.
'Sexual positions, caressing techniques, anatomical features. And we teach people hands on.'
School's spokesperson Melodi Kirsch exuded confidence that the school would be a great success.
The school, however, has already turned controversial in Austria with it raunchy advertisments showing a couple making love having already invited ban by Austrian TV.

கோவையில் இருந்து 60 பேர் பைக்கில் கூடங்குளம் பயணம்

அணு உலை எதிர்ப்பு பேரணி
அணு உலைக்கு எதிர்ப்பு தெரி வித்து கோவையில் இருந்து 60 பேர் பைக்கில் பேரணி யாக கூடங்குளம் புறப்பட்டு சென்றனர்.
கோவையில் பல்வேறு அமைப்புகள் ஒன்றுசேர்ந்து அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற புதிய இயக்கம் துவக்கியுள்ளனர். இந்த இயக்கம் சார்பில், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக நூறு நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதர வாக பைக் பேரணி கோவை யிலிருந்து நேற்று துவங்கியது.
ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 60 பேர் பைக்குடன் திரண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சுசி.கலையரசன் பேரணியை துவக்கிவைத்தார். பேரணியில் பொன்சந்திரன் (பி.யு.சி.எல்), வக்கீல் முருகேசன், ஆறுச்சாமி, கருப்ப சாமி, தனலட்சுமி, உபேந்திரன், கதிரவன் உள்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை பைக் பேரணி கூடங்குளத்தை அடைகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். நாளை மீண்டும் கோவை திரும்புகின்றனர். இதுபற்றி ஒருங்கிணைப் பாளர் கு.ராம கிருஷ்ணன் கூறுகையில், கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு அறவே லாயக்கற்ற பகுதி. எனவே அங்கு அணுஉலை திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றார். முன்னதாக பைக் பேரணி காந்திபுரத்தில் இருந்து புறப்பட தயாரான போது போலீசார் தடுத்து விட்டனர். இதனால், கோபம் அடைந்த பேரணியில் பங்கேற்க வந்த சிலர் நடுரோட்டில் படுத்து, உருண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பைக் பேரணி பொள்ளாச்சி ரோடு எல் அண்ட் டி பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்டது.

                                                                                                                                                        நன்றி : தினகரன் Dec 2

Thursday, 1 December 2011

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தகவல் : எச்ஐவி-க்கு எதிரி நம் உடம்பிலேயே இருக்கிறது

இன்று உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம் : எய்ட்ஸ் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முன்னேற்றம்
மனிதர்கள் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும் தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம். மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி. (ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி, ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது. உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது.
ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
உலக அளவில் அதிக உயிர் பலி வாங்கும் தொற்று நோயாக எய்ட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரம் நடக்கிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி (இன்று) உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடக்கின்றன.
எச்.ஐ.வி. பாதிப்பு பற்றி இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. உடலில் எச்ஐவி கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்தது. இதுபற்றி தலைமை ஆராய்ச்சியாளர் மிகேல் வெப் கூறியதாவது:
எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், எச்ஐவியின் குணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்வது அவசியம். லூக்கோசைட்ஸ் எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள்தான் எதிர்ப்பு சக்தி செல்கள். இவற்றில் எச்ஐவி கிருமிகள் பல்கிப் பெருகுவதால் நோய் தீவிரம் அடைகிறது. நம் உடலிலேயே இருக்கும் எஸ்ஏஎம்எச்டி1 எனப்படும் புரோட்டீன், எச்ஐவி கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். எச்ஐவிக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்சி நியூக்ளியோடைட் பொருளை எஸ்ஏஎம்எச்டி1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளோம்.
இதை மருந்தாக பயன்படுத்தினால், எச்ஐவி பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.
இவ்வாறு மிகேல் கூறினார்.

கூடங்குளம் விவகாரம் டிச.10ல் சென்னையில் உண்ணாவிரதம்

அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பு
கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்பதை வலியுறுத்தி சென்னையில் வரும் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து இயக்கத்தின் அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோதங்கராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழர் நலன் சார்ந்த எந்த ஒரு பிரச்னையிலும் மத்திய அரசு ஆர்வம் காட்டாமல் இருந்து வரும் நிலையில், அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை தேச துரோகிகள் என்று மத்திய அரசும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் குற்றம் சாட்டி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சென்னை கூட்டமைப்பு சார்பில் மனித உரிமை தினமான டிசம்பர் 10ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னையை தகர்க்க சதி : பாரிமுனை, ரிச்சி தெரு, மெரினாவுக்கு குறி

தீவிரவாதிகள் பற்றி வீடியோ ஆதாரம் சிக்கியதால் போலீசார் அதிர்ச்சி
பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினா பகுதிகளை வேவு பார்த்ததோடு நாசவேலையில் ஈடுபட தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதற்கான வீடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை அருகே உள்ள தாம்பரம் சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், கடந்த 27&ம் தேதி காலை சென்னை மாநகர போலீஸ் உதவியுடன் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டில் இருந்த 6 மாணவர்கள் உள்பட 7 பேரை மடக்கிப் பிடித்தனர். மாணவர்களுடன் இருந்தவர் தடை செய்யப்பட்ட ‘சிமி’ அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் ‘இந்தியன் முஜாகிதீன்’ நிர்வாகியுமான இர்சாத் (50) என்பது தெரியவந்தது. பீகாரை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் அப்துல் ரகுமான், இர்சாத்துக்கு உதவியாக இருந்துள்ளார். இவர்களுடன் தங்கியிருந்த ஆசிப் என்பவர் தப்பியோடி விட்டதாக கூறப்பட்டது.

தீவிர விசாரணைக்கு பிறகு 5 மாணவர்களை மட்டும் போலீசார் விடுவித்தனர். இர்சாத், அப்துல் ரகுமான் ஆகியோரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்தனர். இசாத்திடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரித்தபோது, 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்ததாகவும் பாரிமுனை, ரங்கநாதன் தெரு, ரிச்சி தெரு, மெரினா கடற்கரை ஆகிய இடங்களுக்கு சென்றதாகவும் அப்துல் ரகுமானுக்கு ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். தங்களுடன் ஆசிப் என்பவர் வந்ததாகவும், சேலையூர் வீட்டை போலீசார் சுற்றிவளைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்புதான் அவர் தப்பிச் சென்றதாகவும் இர்சாத் தெரிவித்தார். விசாரணைக்கு பிறகு இருவரும் டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பாரிமுனை மற்றும் ரிச்சி தெருவில் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டிருந்த 80 கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் நேற்றிரவு போட்டுப் பார்த்தனர். ரிச்சி தெருவில் இர்சாத், ஆசிப், அப்துல் ரகுமான் ஆகியோர் கடை கடையாக சென்று லேப்டாப் பற்றி விசாரித்துள்ளனர். ஆசிப் மட்டும் நீண்ட நேரம் ரிச்சி தெருவையே சுற்றிச்சுற்றி வந்து வேவு பார்த்துள்ளார். இதேபோல பாரிமுனை பகுதியிலும் அவர் வேவு பார்த்துள்ளது கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையின்போது, பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6&ம் தேதி பெங்களூரில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தோம் என்று இர்சாத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் சென்னையில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரிச்சி தெரு, பாரிமுனை, ரங்கநாதன் தெரு, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் டிசம்பர் 6&ம் தேதி குண்டு வைக்க முடிவு செய்திருக்கலாம் என்றும் அதற்காகத்தான் இந்த இடங்களை வேவு பார்த்துள்ளனர் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சேலையூரில் இருந்து தப்பிச் சென்ற ஆசிப் இதுவரை பிடிபடவில்லை. அவர் சென்னையிலோ, புறநகர் பகுதிகளிலோ அல்லது தமிழகத்தில் வேறு எங்காவது பதுங்கி இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆசிப்பை பிடித்தால்தான் முழு சதி திட்டமும் தெரியவரும். தீவிரவாதிகளின் சதித் திட்டம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.
டிஜிபியுடன் ஆலோசனை
டிஜிபி ராமானுஜம், மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோருடன் மத்திய உளவுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ‘சென்னையில் தீவிரவாதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதனால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தலைமறைவாக உள்ள ஆசிப்பை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று மத்திய உளவுத்துறை அதிகாரி கூறியதாக தெரிகிறது.
பல இடங்களில் கேமரா பழுது
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதோ, கண்காணிப்பதோ கிடையாது. பல இடங்களில் கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பு போலீசார் விழித்துக் கொள்வது நல்லது.

ஐஸ்வர்யா குழந்தை போட்டோ - க்கு 5 கோடி : விற்க போகிறார்களா???

சில நாட்களுக்கு முன்பு தாத்தா பச்சன் குழந்தையை இளஞ்சிவப்பு கம்பளத்தில் ஏந்தியபடி ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தங்கள் குழந்தையை மருத்துவமனை  யிலிருந்து வீட்டுக்கு எடுத்து வருவது போன்ற போட்டோ வெளிவந்தன.

அனால் குழந்தையின் போட்டோ இதுவரை ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் குழந்தையின் முதல் படத்தை பெறுவதற்கு 5 கோடி ரூபாய் வரை அளிக்க முன்வந்ததாக அறியபடுகின்றன.

அதே நேரம் தாத்தா பிக் பி ட்வீட்டர் - ல் "To those that clamour for baby's picture, I have said it before, it will not be happening... do understand, it's personal." இவ்வாறாக தெரிவித்துள்ளார். முன்பு ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் திருமண விழா புகைப்படங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன. பச்சன் குடும்பம் அவ்வாறு செய்யவில்லை.

பொறுத்திருந்து பார்ப்போம்.... உண்மை தெரியும்...

நாடு முழுவதும் வியாபாரிகள் போராட்டம் : இன்று கடைகள் அடைப்பு

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவை கைவிட வேண்டும் என்று நாடு முழுவதும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி ஆகியோர் அன்னிய நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று அறிவித்தனர்.
மேலும், தமிழகத்தில் வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் விக்கிரமராஜா மாநிலம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு நடத்துவார்கள் என்று அறிவித்தார். அதேபோல, மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்தார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு பல தலைவர்கள் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வணிகர்களின் இந்தப் போராட்டத்துக்கு மளிகைக் கடை வியாபாரிகள், டீ கடை வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டும் என்று அனைத்து கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். ஆனால் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மட்டும்
சென்னை ஓட்டல்கள் சங்கத் தலைவர் கே.டி.சீனிவாச ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர் சங்கங்களின் இதர அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு, பால், தண்ணீர், மருத்துவம் போன்றே ஓட்டல் மற்றும் உணவகங்கள் அத்தியாவசியப் பொருட்களின் அடிப்படையில் இருப்பதாலும், பொது மக்களின் நலன் கருதியும், ஓட்டல் மற்றும் உணவகங்கள் வழக்கம்போல திறந்திருக்கும்’ என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
எனினும், டீக்கடைகள் கடையடைப்பில் பங்கேற்பதால், அவை மூடியிருக்கும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் உள்ள ஏபிஎம்சி விற்பனை மையம் மற்றும் கர்நாடக வர்த்தக சங்கம் இணைந்து ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தை இன்று நடத்துவதாக அறிவித்துள்ளது.

Wednesday, 30 November 2011

இன பெருக்க காலம் துவங்கியதால் தின்பண்டம் கொடுக்க தடை :

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோவை மாவட்டம், வால்பாறை வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் காணப்படும் இந்த குரங்குகளின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆகும். கர்ப்ப காலம் 170 நாட்கள்.
ஒரு கூட்டத்தில் 14 முதல் 80 குரங்குகள் வரை காணப்படும். இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் இருக்கும். பல குரங்குகள் குட்டிகளுடன் உயரமான மரங்களுக்கிடையே தாவி செல்வது அழகாக இருக்கும்.
வால்பாறை & பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் இவை அதிகமாக உள்ளன. இந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி இவற்றுக்கு தின்பண்டங்கள் கொடுத்து பழக்கியுள்ளனர். எனவே உணவுப் பொருள் கிடைக்கும் என்ற எண்ணத்தில், வாகனங்களை எதிர்பார்த்து இவை காத்திருக்கின்றன. குரங்குகள் வாகனத்தில் தாவும்போது, அடிபட்டு இறப்பது அடிக்கடி நடக்கிறது.
இதை தடுக்க, ஊழியர்களை வனத்துறை நியமித்துள்ளது. சிங்கவால் குரங்குகளுக்கு உணவு பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர், சுற்றுலா பயணிகளிடம் எச்சரித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் ஆண்கள் : ஜிம்பாப்வே பெண்களிடம் தீவிர விசாரணை

தென்ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பாலியல் பலாத்கார செயல்களால் ஆண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. காரில் லிப்ட் கொடுப்பது போல ஏற்றிச் சென்று பலாத்காரம் செய்ததாகவும் எதிர்பாராத நேரத்தில் முகத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு மயக்க ஊசி போட்டு பின்னர் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பல ஆண்கள் புகார் கூறினர். அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை ஏற்படுத்துவதாக கூறி சிறப்பு சடங்குகள், வழிபாடுகள் நடத்தும் பெண் கும்பல் ஒன்று ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வலுக்கட்டாயமாக விந்து எடுப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.
தனியாக செல்லும் ஆண்களை மயக்கி அல்லது தாக்கி அந்த பெண்கள் பலாத்காரத்தில் ஈடுபடுவதாகவும் பின்னர் அவர்களை நிர்வாணமாக்கி புதர்களில் வீசிவிட்டு தப்பிவிடுகின்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக 3 பெண்கள் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்கள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோர்ட்டில் வழக்கு விசாரணை தீவிரமாக நடக்கிறது. பாலியல் தொழிலாளர்களான தங்கள் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளதாக 3 பெண்களும் கூறிவருகின்றனர்.

Earthquake in north Philippines; no damage reported yet.


An official says an earthquake with a magnitude of 6 shook the capital and parts of the northern Philippines. There are no immediate reports of damages or injuries.
Philippine Institute of Volcanology and Seismology chief Renato Solidum says movement in the Manila Trench off the country's western coast set off the earthquake Wednesday but it occurred deep under the ocean floor and did not cause any destruction.
Solidum says the quake was felt in metropolitan Manila and in the nearby provinces of Zambales, Bulacan, Pangasinan and in the mountain resort city of Baguio.
The Philippines is located in the Pacific "Ring of Fire" where earthquakes and volcanic activity are common. A 7.7-magnitude quake killed nearly 2,000 people in Luzon in 1990.

தேங்காப்பட்டணத்தில் கடல் சீற்றம்

சாலை துண்டிப்பு: பஸ்கள் நிறுத்தம் : 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு
குமரி கடல் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் முடங்கிப்போய் உள்ளனர்.
நாகர்கோவிலில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கனமழை கொட்டியது. தேங்காப்பட்டணம் அருகே உள்ள முள்ளூர்துறை கடற்கரை கிராம பகுதியில் அரையான்தோப்பு என்ற இடத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் கடல் அரிப்பு தடுப்புசுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும் போது அங்குள்ள 50& க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அரையான்தோப்பு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. நேற்று சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அந்த பாதையில் இயக்கப்படவில்லை. இந்த வழியாக பல கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பல பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை பகுதிகளுக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.

‘ஏ’ குடும்பம் : அம்மா பெருமிதம்

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் ரெண்டால். நர்சாக வேலை பார்க்கிறார். இவரது பெண்கள் அலிசியா (27), அமண்டா (26), கிம்பர்லி (22). மூன்று பேரும் ஆபாச படங்களில் நடிப்பவர்கள்.
இதுபற்றி அமண்டா கூறியதாவது:
பள்ளியில் படிக்கும் காலத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அசத்துவேன். காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைக்கும் அளவுக்கு வேகமாக தயாராகி வந்தேன். பிறகு பள்ளியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, படிப்பை நிறுத்திவிட்டேன். எதிர்பாராதவிதமாக ஆபாச பட நடிகை ஆகிவிட்டேன். பேப்ஸ்டேஷன் ஆபாச நிகழ்ச்சியில் 7 ஆண்டுகளாக நடித்து வருகிறேன்.
அதற்கு அப்புறம், அக்கா அலிசியாவும் இத்துறைக்கு வந்துவிட்டார். பிரிட்டனின் முன்னணி ஆபாச நடிகைகளில் அக்கா அலிசியாவும் ஒருத்தி. தங்கை கிம்பர்லியும் தற்போது ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறாள். இதில் என்ன தவறு இருக்கிறது?
அம்மா தான் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம், “என் 3 பெண்களும் ஆபாச பட நடிகைகள். வாழ்க்கை நடத்த சொந்தக் காலில் நிற்கிறார்களே, அதுவே பெருமைக்குரிய விஷயம்தான்” என்று பெருமை பொங்க சொல்கிறார்.
வெளிநாட்டில் தானே என்று நினைத்து கொள்ளாதீர்கள். தற்பொழுது ஹிந்தி colours என்னும் சேனல் - ல் ஒளிபரப்ப பட்டு வரும் Big Boss ரியாலிட்டி ஷோ - வில் Indo கனடியன் (பஞ்சாப்யை சேர்ந்த தாய் தந்தைக்கு பிறந்து கனடா வில் வளர்ந்த ) Sunny Leone பங்கு பெற்றுள்ளார்.
என்ன கொடும சார்?????  என்ன கலாச்சாரம் சார்?????

கலக்குகிறார் சிறுமியான சிறுவன்

ஜாஸ் (11)
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜாஸ் (11). இசை, நடனம் என கலக்கி வருகிறார். ஆண் குழந்தையாக பிறந்த இவரிடம் நாள் ஆகஆக மாற்றங்கள் தெரிந்தன. தன்னை சிறுமி போல உணரும் அவரை சிறுமியாகவே வளர்த்து வருகின்றனர் பெற்றோர். “என்னை போல உலகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வெறுக்காமல் அரவணைத்து செல்ல வேண்டும். சாதாரண ஹார்மோன் சிகிச்சைகள் மூலம் இதை சரிசெய்துவிட முடியும்” என்று டிவி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார் ஜாஸ். 

Tuesday, 29 November 2011

N.S.K (Nagercoil Sudalaimuthu Krishnan) 103 years

Kalaivanar
D.O.B : November 29, 1908.


Actor N.S.Krishnan Birthday is celebrated every year on Nov 29. Let us collect little knowledge about this Actor.


1. Villu Paatu is the first movie in which N S Krishnana started his career as an Artist


2. Menaka (1935) is the first movie in which he made his acting debut as an Actor.


3. T.A Madhuram was the popular actor in his day with whom he has acted in many films.


4. Haridas (1944) is the film first time in Tamil Cinema which ran successfully for 110 weeks in Chennai Broadway Talkies


5. In 1936 he acted his first film with M.G.R in Sathi Leelavathi


6. In 1952 he acted his first film with Sivaji Ganeshan in Panam


7. He also acted in two Telugu films apart from Tamil movies. They are Bagya Lakshmi (1943) and Governors Cup (1955)